Skip to main content

ஒரே நாளில் நான்கு கட்சிகளுடன் திமுக கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை!

Published on 21/02/2019 | Edited on 21/02/2019
dmk

 

திமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இன்று மட்டும் திமுக நான்கு கட்சிகளுடன் கூட்டனி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறதது என்று தகவல் வெளியாகியுள்ளது. 

 

நேற்று காங்கிரசுக்கு தமிழகத்தில் 9 புதுசேரியில் 1 என மொத்தம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில் மற்ற தோழமை கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவித்திருந்தார். 

 

 

இந்நிலையில் திமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்க  தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் அண்ணா அறிவாலயம் வருகைதந்த நிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

 

 

இந்நிலையில் இன்று ஒரே நாளில் நான்கு கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது என தகவல்கள் வந்துள்ளது. அதன்படி இன்று பிற்பகல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடனும், மாலை விடுதலை சிறுத்தைகள் கட்சியுடனும், இன்று இரவு மதிமுக உடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்