Skip to main content

நிழலில் அமர்வதற்கு மக்கள் நடத்திய போராட்டம்! -எழுத்துத்தேர்வு மையங்களில் கெடுபிடி!

Published on 08/09/2019 | Edited on 08/09/2019

மனிதநேயத்தைக் காட்டிலும் விதிமுறையைக் கடைப்பிடிப்பதே சரியானது என, அரசுத்துறை அலுவலர்களும் தேர்வு மையத்தினரும் மக்களோடு மல்லுக்கட்டிய சம்பவம் இன்று மதுரையில் நடந்தது.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கான எழுத்துத்தேர்வு மதுரை நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது. ஆண்கள், பெண்கள் என இருபாலரும் தேர்வு எழுத வந்திருந்தனர். வெளியூர்களில் இருந்து வருவதால் தேர்வு எழுதும் பெண்களுக்குப் பாதுகாப்பாக அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் வந்திருந்தனர். தேர்வு எழுதுவதற்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்கு  அனைவரும் சென்றுவிட்ட நிலையில்,  விசாலமான அந்தப் பள்ளி வளாகத்தில் ஓரமாக உள்ள ஒரு மரத்தடியில் துணைக்கு வந்த ஆண்களும் பெண்களும் அமர்ந்திருந்தனர். சிலரது கையில் குழந்தைகள் இருந்தன. 

 

 People struggle to sit in the shade! - Selection centers are bad!

 

அந்தப் பள்ளி பெண் நிர்வாகியின் கண்களில் மரத்தடியில் உட்கார்ந்தவர்கள் பட்டுவிட,  “இங்கெல்லாம் யாரும் உட்காரக்கூடாது. எல்லாரும் வெளியே போங்க..” என்று விரட்டினார். அவரோடு சேர்ந்துகொண்டு மகளிர் காவலர் ஒருவரும் சத்தம் போட்டார். உடனே அந்த மக்கள் “என்னங்க இது? ஸ்கூலுக்கு வெளியே போனா ரோடுதான் இருக்கு. அடிக்கிற வெயில்ல இந்தக் குழந்தைங்களை வச்சிக்கிட்டு தூசி பறக்கிற ரோட்டுல ரெண்டு மணி நேரம் எப்படிங்க நிற்கமுடியும்? இதுக்கு முன்னால..  எங்க பிள்ளைங்களோட எத்தனையோ சென்டர்களுக்கு நாங்க போயிருக்கோம். அங்கே காட்டாத கெடுபிடி இங்கே மட்டும் ஏன்?” என்று கேட்க, அந்தப் பெண் நிர்வாகி “எங்க ஸ்கூல் அப்படித்தான்..” என்று பேச்சில் வேகத்தைக் கூட்டினார்.

 

 People struggle to sit in the shade! - Selection centers are bad!


“பள்ளி நிர்வாகம் சம்மதிக்காதபோது, இந்த வளாகத்தில் இருப்பதற்கு உங்களை அனுமதிக்க முடியாது. பிரச்சனை செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டிவரும்” என்று தன் செல்போனில் அந்தப்  பெண் காவலர் அங்கிருந்த மக்களை வீடியோ எடுத்தார். தேர்வு நடத்திய அரசு அலுவலர்களும்  “வெளியே போங்க..” என்று விரட்டினார்கள்.  விரட்டப்பட்டவர்களில் ஒருவர், எழுத்துத்தேர்வு நடத்திய அனுபவம் உள்ள ஒருவரைத் தொடர்புகொண்டு, “இப்படி விரட்டுகிறார்களே? எழுத்துத் தேர்வை நடத்திடும் மையங்களுக்கு  இத்தனை கடுமையான விதிமுறைகள் உள்ளனவா?” என்று கேட்க, அந்த அரசு அலுவலர் “குறிப்பிட்ட சில எழுத்துத் தேர்வுகளின்போது தேர்வு எழுதுபவர்களுக்கு வெளியில் இருந்து யாரும் உதவி செய்துவிடக்கூடாதென்ற நோக்கத்தோடு இப்படி நடந்துகொள்வார்கள். அதுவும்கூட, தேர்வு எழுதும் அறைக்குள்  வெளிநபர்கள் யாரும் சென்றுவிடக்கூடாதென்ற காரணத்துக்காகத்தான்.  இந்த டேட்டா என்ட்ரி ஆபரேட்டருக்கான எழுத்துத் தேர்வில் மக்களிடம் இத்தனை ஆத்திரமாக நடந்துகொள்ள வேண்டியதில்லை. தேர்வு எழுதும் இடத்திலிருந்து சற்று  இடைவெளியில் உள்ள   ஒரு பகுதியை ஒதுக்கி வந்திருந்தவர்கள் உட்காருவதற்கு வசதி செய்து கொடுக்கலாமே?” என்றார்.

 

 People struggle to sit in the shade! - Selection centers are bad!

 

அவர் அப்படிச் சொன்னதும் அந்த மக்கள்  “எங்கள் வெளியேற்ற வேண்டும் என்று சட்டம் இருக்கிறதா? விதிமுறைகள் இருக்கின்றனவா? எங்கே காட்டுங்கள் பார்க்கலாம்?” என்று கேள்வி கேட்க, கூடுதலாகக் காக்கிகள் வரவழைக்கப்பட்டு, அத்தனை பேரையும் வெளியெற்றினார்கள். சுள்ளென்ற வெயிலில் ரோட்டுக்கு விரட்டப்பட்ட மக்கள், அந்தப் பள்ளியின் கேட் அருகே நின்று, அராஜகத்துக்கு எதிராகக் கோஷமிட்டார்கள். நிலைமை மோசமாவதைக் கண்ட  அந்தப் பள்ளி நிர்வாகியும் காக்கிகளும் “சரிங்க.. இங்கே நிழலில் ஒரு ஓரமா உட்கார்ந்துட்டுப் போங்க.. தேவையில்லாம பிரச்சனை பண்ணாதீங்க..” என்று எரிச்சலோடு  அனுமதித்தனர்.

 

 People struggle to sit in the shade! - Selection centers are bad!


“இதை முதலிலேயே செய்திருக்கலாமே? ஒரு பள்ளியை நடத்துபவர்களுக்கு மனிதநேயம் துளிகூட இல்லாமல் போய்விட்டதே?” என்று முனகியபடியே வெறும் தரையில் அமர்ந்தார்கள் மக்கள். அவர்களில் முதியவர் ஒருவர், “பிரிட்டிஷ்காரனும்தான் சட்டம் போட்டான். அந்தச் சட்டம் இந்தியர்களுக்கு எதிரானது என்பதை அறிந்துதானே விடுதலைப் போராட்டத்தைக் கையில் எடுத்தோம்.  எந்தச் சட்டமும் மக்களுக்கானதுதான். இது தெரியாமல் நடந்துகொள்பவர்களை என்னவென்று சொல்வது? என்றார் குமுறலுடன்.

மக்களை விரட்டியடித்த இடத்தில் அந்தப் பள்ளியில் எழுதப்பட்டிருந்த ஞானநூல் வசனம் இது –நீதிமான்களின் ஆன்மாக்கள் கடவுளின் கையில் உள்ளன. கடுந்தொல்லை எதுவும் அவர்களைத் தீண்டாது.

நிழலில் அமர்வதற்குக்கூட போராட வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருப்பது கொடுமைதான்!

 


                

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

மதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்; வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
madurai incident Released CCTV footage

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) சித்திரை திருவிழாவின் போது மது போதையில் இருந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒத்தக்கடை பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்குவது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு உடைப்பது, கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது கான், கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுந்தரம் நகர் பகுதியில் வந்துள்ளார். அப்போது இந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கான் முகமது கான் பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே இந்த இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுகுதியில் சென்று அங்குள்ள இரண்டு கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் இருந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.