Skip to main content

‘ஒ.பி.எஸ். நாள்’ஓஹோ! -பட்டங்கள் பல தந்து அலங்கரிக்கும் அமெரிக்கா! 

Published on 15/11/2019 | Edited on 15/11/2019

ஒன்றா? இரண்டா? தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமெரிக்காவில்தான் எத்தனை பட்டங்கள்? தமிழகத்திலுள்ள அவருடைய ஆதரவாளர்களுக்கு இனி கொண்டாட்டம்தான்! போஸ்டரோ,நோட்டீஸோ, டிசைன் டிசைனாக ஓ.பி.எஸ்.பெயருக்கு முன்னால் பட்டங்களைப் போட்டு அசத்திவிடுவார்கள்.

deputy cm o paneerselvam o paneer selvam america trip ops day announced texas


ஓ.பன்னீர்செல்வத்தின் அமெரிக்க விசிட்டில் அப்படி என்னதான் நடக்கிறது? அமெரிக்கா சென்றுள்ள தமிழ்நாடு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாஷிங்டன் டி.சி.யிலுள்ள வாட்டர் கேட் ஹோட்டலில் அமெரிக்க- இந்திய SME கவுன்சில் நிர்வாகிகளை சந்தித்தார். 
 

அவர்களிடம் தமிழகத்திற்கு தொழில் முதலிடுகள் பெறுவது குறித்து ஆலோசனை நடத்தினார். ஹுஸ்டன் ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, அங்கு ஹூஸ்டன் ஸ்ரீ மீனாட்சி திருக்கோவில் தேவஸ்தானம் சார்பில் புனரமைக்கப்பட்ட திருமண மண்டபத்தின் கல்வெட்டைத் திறந்து வைத்தார்.

deputy cm o paneerselvam o paneer selvam america trip ops day announced texas


அதன்பிறகு, ஸ்ரீ மீனாட்சி திருக்கோவில் சொசைட்டி, ஹூஸ்டன் தமிழ் ஆய்வு இருக்கை மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் நடந்த விழாவில், டெக்சாஸின் ஃபேர்லாண்ட் மேயர் டாம்ரிட், 14-11-2019 தினத்தை‘O.P.S. DAY’(ஓ.பி.எஸ். நாள்) என்று அறிவித்து கவுரவப்படுத்தினார். 

deputy cm o paneerselvam o paneer selvam america trip ops day announced texas


ஸ்ரீபத்மினி ரங்கநாதன் ட்ரஸ்டி சார்பில்‘பண்பின் சிகரம்’ என்ற பட்டமும், மெட்ரோப்ளக்ஸ் தமிழ்ச்சங்கம் சார்பில் ‘வீரத்தமிழன்’என்ற பட்டமும் ஒ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்டது. அவ்விழாவில் ஓ.பி.எஸ்., தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருகை தருமாறு அழைப்பு விடுத்தார். 



 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.