Skip to main content

30 லட்சம் விவசாயிகள் திரண்டனர்! டெல்லியில் மாபெரும் புரட்சிப்போராட்டம்

Published on 28/11/2018 | Edited on 28/11/2018

 

d

 

வருகின்ற 2018 நவம்பர் 29,30 ஆகிய தேதிகளில் அகில இந்திய அளவில் அனைத்து மாநிலத்தில் இருந்து  30 இலட்சம் விவசாயிகள் ஒன்று திரண்டு தம் கோரிக்கையை முன்னிறுத்தி தலைநகர் டெல்லியில் மாபெரும் புரட்சிப்போராட்டம் நடத்த உள்ளனர். இதில் தமிழகத்திலிருந்து ALL INDIA KISHAN SANGARSH CO-ORDINATION COMMITTEE (AIKSCC) South Indian Convenor மற்றும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் டெல்லி புறப்பட்டனர்.

 

d


 

இந்த முற்றுகை போராட்டத்திற்கான காரணம் !

 

விவசாய விளைபொருட்களுக்கு  இலாபகரமான விலை வழங்குதல்,

 

தேசிய மயமாக்கப்பட்ட அனைத்து வங்கிகளிலும் விவசாயிகள் வாங்கி கடன்களை தள்ளுபடி செய்தல்,

 

இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் இணைத்தல், அதன்மூலம் விவசாயிகளுக்கு விவசாயத்திற்கு தண்ணீர் கொடுத்தல்.

 

புயல் சேதத்தால் அழிந்துவிட்ட அனைத்து விவசாய பயிர்களுக்கும் உரிய நஷ்டஈடு விரைந்து வழங்க வேண்டும்,

 

60 வயதடைந்த விவசாயிகளுக்கு மகன், மகள் இருந்தாலும், சொந்தமாக பட்டா நிலம் இருந்தாலும் மாத ஓய்வூதியம் 5,000/- வழங்க வேண்டும்,

 

d

 

அழிந்துவிட்ட பயிர்களுக்கு காப்பீட்டு பிரீமியம் தொகை செலுத்தியும், மத்திய அரசின் இழப்பீட்டுக்கான காப்பீட்டு தொகை கிடைக்காமல் உள்ளதை மத்திய அரசு விவசாயிகளுக்கு விரைந்து பெற்றுத்தர வேண்டும்

 

- போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் ஒன்றிணைத்து டெல்லியை முற்றுகையிடும் போராட்டம் நடத்த உள்ளனர்.

 

ரயில்வே நிலையத்திலிருந்து கிளம்பிய விவசாயிகள் கஜா புயல் நிவராண நிதியாக 1 இலட்சம் கோடி வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தி ரயில் ஏறினார்கள் !  

 

 

சார்ந்த செய்திகள்