Skip to main content

  சிபிஎம்-க்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

Published on 05/03/2019 | Edited on 05/03/2019

 

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற 3ம் கட்ட பேச்சுவார்த்தையில் திமுக -மார்க்சிஸ்ட் கட்சிகள் இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.   இதையடுத்து மார்க்சிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது.

 

ட்

 

இதன்  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் மாநிலச்செயலாளர் பாலகிருஷ்ணன்,  ‘’மார்க்சிஸ்டுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  அவை எவை என்பது பின்னர் அறிவிக்கப்படும்.             மக்களவை தேர்தலில் திமுகவுக்கு மார்க்சிஸ்ட்  ஆதரவளிக்கிறது.  21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றாலும் திமுகவுக்கு தொடர்ந்து மார்க்சிஸ்ட் ஆதரவளிக்கும்’’என்று தெரிவித்தார்.

 

சார்ந்த செய்திகள்