Skip to main content

ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் மருத்துவ மாணவியிடம் சில்மிஷம் செய்த டிடிஆர் கைது ! 

Published on 25/08/2019 | Edited on 25/08/2019

சென்னை பெரும்பாக்கத்தை சார்ந்தவர் முல்லை செல்வராஜ். இவர் கடந்த 22- ஆம் தேதி ராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் குடும்பத்துடன் சென்றார். இந்த ரயிலில் திருச்சி கருமண்டபத்தில் சேர்ந்த தன்ராஜ் என்பவர் ரயில் டிக்கெட் பரிசோதராக டிடி பணியில் இருந்தார். இவர் பணியில் இருந்த போது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி ரயில்வே சந்திப்பை கடந்து புதுக்கோட்டை சென்று கொண்டிருந்தது. அப்போது டாக்டருக்குப் படிக்கும் செல்வராஜின் மகள் ரயிலில் பயணம் செய்த போது தொடர்ந்து செல்போனை பயன்படுத்தி கொண்டு இருந்தார். ரயிலில் இருந்த பெரும்பாலான தூங்கிக் கொண்டிருந்தனர்.


 

chennai medical college student travel in Rameshwaram Express train to arrest ttr incident



 

அப்போது, அந்த இளம் பெண்ணிடம் சென்று செல்போனை பறித்து தவறாக நடக்க முயன்றிருக்கிறார் டிடி அதிகாரி தன்ராஜ். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் சத்தம் போட்டிருக்கிறார். இதையடுத்து தூங்கிக்கொண்டிருந்த குடும்பத்தினர் மற்றும் பெட்டியில் இருந்தவர்கள் அனைவரும் எழுந்து தன்ராஜை பிடித்து சரமாரியாக தாக்கினர். பின் மன்னிப்பு கேட்ட தன்ராஜ் பின்பு அங்கி சென்றார். ரயில் காரைக்குடி சென்றவுடன், இதுகுறித்து ரயில்வே காவல்துறையிடம் செல்வராஜ் குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர்.
 

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், திருச்சி ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்து ரயில்வே காவல் துறைக்கு வழக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து டிடி தன்ராஜ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.




 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ரத யாத்திரை; ஈசிஆரில் கடும் போக்குவரத்து நெரிசல்!

Published on 07/07/2024 | Edited on 07/07/2024
Ratha Yatra Heavy traffic in ECR

ரத யாத்திரையால் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் இஸ்கான் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 44வது ஆண்டு விழாவாகப் பூரி ஜெகநாதர் ரத யாத்திரை இன்று (07.07.2024) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மதியம் 03.30 மணி அளவில் பலவாக்கத்தில் ரத யாத்திரை தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன் காரணமாகக் கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது இதனால் வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன. இதனையடுத்து அப்பகுதிக்கு வந்த சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவலர்கள் வாகனங்களை விரைந்து அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அதிகப்படியான பக்தர்கள் ஒரே இடத்தில் கூடியதால் கிழக்கு கடற்கரைச் சாலை கடும் போக்குவரத்து நெரிசல் செயல்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். 

Next Story

இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள்; தமிழக அரசு சார்பில் மரியாதை!

Published on 07/07/2024 | Edited on 07/07/2024
irattaimalai Srinivasan birthday Courtesy on behalf of Tamil Nadu Govt

இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளான இன்று (07.07.2024) தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் ஆகியோர் அவரது சிலைக்கும், உருவப்படத்திற்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “திவான்பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், கோழியாளம் கிராமத்தில் இரட்டை மலை ஆதியம்மாள் தம்பதியினருக்கு 07.07.1859 ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார். அவர் பள்ளியில் படிக்கின்ற காலத்தில் சாதிக் கொடுமைகள் பற்றி அறிந்து அவற்றை அகற்றுவதற்கு உறுதியெடுத்துக் கொண்டார். அதற்காக தென்னிந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஆதிதிராவிடர் மக்களின் அன்றாட வாழ்க்கை நிலைமைகளை நேரில் கண்டறிந்தார். மக்களை கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையச் செய்ய வேண்டும் என்பதற்காகத் தன் ஆயுள் முழுவதும் நாட்டு மக்களுக்காக பாடுபட்டார். தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் 15.08.2000 அன்று திவான்பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசனுக்கு நினைவு அஞ்சல் தலையினை வெளியிட்டு சிறப்பித்தார். 

irattaimalai Srinivasan birthday Courtesy on behalf of Tamil Nadu Govt

இரட்டை மலை சீனிவாசனின் தொண்டுகளையும், தியாகங்களையும் போற்றி அவருக்கு 21 இலட்சம் ரூபாய் செலவில் கிண்டி, காந்திமண்டபம் வளாகத்தில் நினைவகத்தை உருவாக்கி முழு உருவச்சிலை அமைத்து,  இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 07.07.2009 அன்று திறந்துவைக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் ரூபாய் 2 கோடியே 18 இலட்சம் மதிப்பீட்டில் திவான்பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசனுக்கு திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் 27.2.2024 அன்று திறந்து வைக்கப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசின் சார்பில் திவான்பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசனின் பிறந்த நாளான ஜூலை 7 ஆம் நாள் அரசு விழாவாக ஆண்டுதோறும் சிறப்பான முறையில் கொண்டாட உத்திரவிட்டார். அதன்படி இன்று (07.07.2024) கிண்டி காந்திமண்டப வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கும். திருவுருவப்படத்திற்கும் ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் முனைவர் இல. சுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் இரா. வைத்திநாதன், இரட்டைமலை சீனிவாசனின் கொள்ளு பெயர்த்தி நிர்மலா அருள் பிரகாஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

அதே போன்று, செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் தேன்பாக்கம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு  குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.