Skip to main content

போலீசார் பொய் வழக்கு போட்டதாக வீடியோ வெளியிட்டு நிதிநிறுவன அதிபர் தற்கொலை!

Published on 16/05/2019 | Edited on 16/05/2019

காவல்துறையினர் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் பொய் வழக்குப் பதிவு செய்ததாக வீடியோவில் வாக்குமூலம் வெளியிட்டுவிட்டு, நிதிநிறுவன அதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சேலம் மாவட்டம் ஆத்தூர் விநாயகபுரம் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (50). திமுக பிரமுகர். அந்தப் பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். மே 14ம் தேதி மாலை, வீட்டில் இருந்த பிரேம்குமார், வாயில் நுரை தள்ளிய நிலையில் திடீரென்று மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு உடனடியாக ஆத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

Chairman of the financial institution suicide in authur

 

சிகிச்சை பலனின்றி மே 15ம் தேதி (புதன்கிழமை) காலை அவர் இறந்தார். இந்நிலையில், தான் ஏன் தற்கொலை செய்து கொண்டேன் என்பதை விளக்கி பிரேம்குமார் தன்னுடைய செல்போனில் ஒரு வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளது தெரிய வந்தது. 

 

 

ஆத்தூர் காவல்துறையில் தன் மீது ஜாதி வன்கொடுமை பிரிவின் கீழ் போலியாக வழக்குப்பதிவு செய்ததால்தான் தற்கொலை செய்து கொண்டதாக அந்த வீடியோவில் பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.

 

 

இதுகுறித்து பிரேம்குமாரின் உறவினர்கள் கூறுகையில், ''பிரேம்குமார், அவருடைய தம்பி செந்தில்குமாருடன் சேர்ந்து நிதி நிறுவனம் நடத்தி வந்தார். அவரிடம் ஆத்தூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜ்குமார் பணம் வாங்கியுள்ளார். 2 மாதத்திற்கு முன்பு, பிரேம்குமார் அதிக வட்டி கேட்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக ராஜ்குமார் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இருவரையும் காவல்துறையினர் நேரில் அழைத்துப்பேசி சமாதானம் செய்து வைத்தனர்.

 

 

கடந்த மாதம் ராஜ்குமார், திடீரென்று பிரேம்குமாரின் தம்பி செந்தில்குமாரின் வீட்டின் முன்பு, தீக்குளிக்க முயன்றார். அப்போதும் இன்ஸ்பெக்டர் கேசவன் இருதரப்பையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். ராஜ்குமாரிடம் வாங்கிய ஆவணங்களை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் பணத்தைத் திரும்பக் கேட்கக்கூடாது என்றும் பிரேம்குமாரிடம் கூறினார்.

 

Chairman of the financial institution suicide in authur

 

இதற்கு பிரேம்குமார் மறுத்து விட்டார். இதனால் அவர் மீதும், செந்தில்குமார் மீதும் காவல்துறையினர் ஜாதி வன்கொடுமை வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதன் காரணமாகவே மனம் உடைந்த பிரேம்குமார் தற்கொலை செய்துள்ளார். அவருடைய தற்கொலைக்கு காவல்துறையினரே காரணம்,'' என்றனர்.

 

 

பிரேம்குமார் வெளியிட்டுள்ள வீடியோவில், ராஜ்குமாரின் பின்னணி குறித்தும், பல்வேறு கட்சி நிர்வாகிகள் தன்னிடம் பணம் வாங்கிவிட்டு ஏமாற்றியதையும், தெளிவாக குறிப்பிட்டுள்ளார். 

 

 

வீடியோ பதிவில் கூறப்பட்டுள்ள அனைவரிடமும் காவல்துறையினர் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். தற்கொலை செய்து கொண்ட பிரேம்குமாருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவருடைய தம்பி செந்தில்குமார் ஆத்தூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலராக இருந்தார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.