Skip to main content

தலையணை இல்லாமல் தூங்கமாட்டேன்... கன்றுக்குட்டியின் அட்டகாசம்!!

Published on 02/05/2019 | Edited on 02/05/2019


கன்றுக்குட்டி மேல் பாசம் வைத்தால் அதிகபட்சமாக நாம் என்ன செய்வோம், அதற்கு ஒரு பெயர் வைத்து கொஞ்சுவோம். அதோடு, ஒருப்புடி புண்ணாக்கு அதிகமாக போடுவோம் அல்லது வைக்கோல் கொஞ்சம் அதிகமாக வைப்போம் அவ்வளவு தான். ஆனால் ஒருக்குடும்பம், கன்றுக்குட்டியை தங்களது வீட்டு ஹாலில் வைத்தும், தங்களோடு படுக்க வைத்தும் கொஞ்சுகிறது.

calf

 

வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் அறிவொளி ஆனந்தன். இவர் குடும்பம் கிராமத்தில் விவசாயம் செய்கிறது. இவரது வீட்டில் பசுமாடுகள் சிலவுள்ளன. சில மாதங்களுக்கு முன்பு இவர்கள் வீட்டில் வளர்க்கப்படும் பசு ஒன்று கன்றுக்குட்டியை ஈன்றுள்ளது. ஆண் கன்றுக்குட்டியான இது பிறந்த சில தினங்களில் இருந்து துள்ளி துள்ளி குதித்து விளையாடுவது, வீட்டுக்குள் சர்வசாதாரணமாக வருவது என இருந்துள்ளது. இவர்களும் கன்றுக்குட்டியை ஆசையாக பார்த்ததால் அவர்கள் அதனை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் இப்போது குடும்ப அட்டையில் பெயர் சேர்க்க சட்டம் இடம் வழங்கினால் சேர்த்துவிடுவார்கள் போல.

 

calf


கன்றுக்குட்டிக்கு வேலன் என பெயர் வைத்து வளர்க்க துவங்கினர். அது மாடுகள் உணவான புண்ணாக்கு, வைக்கோல், புல், கழனி பானை தண்ணீர் குடிப்பதை விரும்புவதில்லை. ஆனந்தன் தனது 12 வது படிக்கும் மகள் கிருத்திகாவுக்கு வாங்கி வரும் மிக்ஸர், கேக், சாக்லெட், குளிர்பானத்தை தனக்கும் வேண்டும் எனக்கேட்டுள்ளது வேலன் கன்றுக்குட்டி. அதுவும் வெளியே நின்று கேட்பதில்லை. வீட்டுக்குள் வந்து உறவினர்களை உட்கார வைக்கும் ஹாலில் இருந்தபடியும், சமையல் கட்டுக்கு சென்று கத்தியும் கேட்டுள்ளது.

 

calf

 

 

calf

 

சாப்பிட்டுவிட்டு மாட்டுக்கொட்டகையில் தனது தாய் பசுவுடன் உறங்காமல் கிருத்திகா, ஆனந்தன், அவரது மனைவி உறங்கும் இடத்திலேயே வேலனும் ஹாலில் படுத்துக்கொண்டு தூங்குவது, அதிலும் தனது தலைக்கு தலையாணை இல்லாமல் உறங்காதது என அதன் சேட்டை அதிகமாக உள்ளதாம். இந்த சேட்டையை அவர்கள் ஆசையோடு ரசிக்கின்றனர். என் தம்பி மாதிரி இவன், என்னோடு ஜாலியா விளையாடறான் என சிரித்தபடியே சொல்கிறார் கிருத்திகா.

calf


ஒரு குழந்தையை போல் கன்றுக்குட்டியை வளர்ந்து மனிதர்களோடு நெருங்கி பழகி, குடும்பத்தில் ஒருவராக இருப்பதை பார்த்து அந்த ஊர் பொதுமக்களும், விலங்குகள் நல ஆர்வலர்களே ஆச்சர்யத்தோடு பார்க்கின்றனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தேர்தலை புறக்கணிக்கிறோம்'-போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'We are boycotting the election'-Village people on strike

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில்  சிதம்பரம் அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் 6500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். தீர்த்தாம்பாளையத்தில் இருந்து பு.முட்லூர் வந்து சேர 3 கிலோ மீட்டர் தொலைவு தூரம் உள்ளது. இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பொதுமக்களின் சாலையை மறித்து, மாற்றி அமைத்து மேலும் 1.6 கிலோ மீட்டர் அதிகரித்து 4.6 கிலோ மீட்டர் தூரத்தில் மாற்றுப் பாதையை அமைத்து தருவதால் ஊர் பொதுமக்கள் அடைகிறார்கள். எனவே தீர்த்தாம் பாளையம் பகுதியில் சுரங்க பாதை (சப்வே) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து பேராடி வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், செவிமடுக்காத அரசியல்வாதிகளையும், அவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலையும் முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து பதாகைகள் வைத்துள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிராம மக்கள் பதாகை மற்றும் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணி; கிராம மக்கள் எதிர்ப்பு!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Construction of Vallalar International Centre; Villagers issue

கடலூர் மாவட்டம் வடலூரில் ‘வள்ளலார் சர்வதேச மையம்’ அமைக்கப்படும் என்ற வாக்குறுதியைக் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதனைத் தொடர்ந்து இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வடலூரில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை ஏற்கெனவே வெளியிட்டிருந்தார்.

இத்தகைய சூழலில்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சர்வதேச மைய கட்டடம் கட்ட வடலூர் பெருவெளியில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பின்னர் இதற்கான பணிகள் தொடந்து நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் வடலூர் பெருவெளியில் சர்வதேச மையம் அமைப்பதற்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர், மற்றும் பார்வதிபுரம் கிராமத்தினர் எனப் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பார்வதிபுரம் கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடிகளை ஏற்றி தங்களது கண்டனத்தை தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையும் புறக்கணிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பார்வதிபுர கிராம மக்களால் தானமாக கொடுக்கப்பட்ட இடமான பெருவெளியில் எந்தக் கட்டடமும் கட்டக் கூடாது எனப் பார்வதிபுர கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.