Skip to main content

“பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தடைசெய்ய தொடர்ந்து போராடுவேன்” -ராஜேஸ்வரி பிரியா திட்டவட்டம்!

Published on 19/09/2020 | Edited on 19/09/2020

 

BIG BOSS have to be ban


பிக் பாஸ் -4 ஆவது சீஸன் தொடங்கும் நிலையில், அதனைக் கண்டித்து அந்த நிகழ்ச்சியைத் தடை செய்யவேண்டும் என அனைத்து மக்கள் கட்சி சார்பாக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் மூ.ராஜேஸ்வரி பிரியா சென்னை காவல்துறை தலைமை இயக்குநருக்கு கடிதம் கொடுத்துள்ளார்.

 

அந்தக் கடிதத்தில், "ஆபாசத்தை மையமாகக் கொண்டு, கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த ஆண்டும் நடைபெறவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

 

இந்த நிகழ்ச்சி பல்வேறுவிதமான சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. கடந்த ஆண்டில் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மதுமிதா என்ற நடிகை தற்கொலை முயற்சி எடுத்தார். அதற்கு நாங்கள் காவல் துறையில் புகார் அளித்தோம். ஆனால், எந்தவித விசாரணையும் காவல்துறையால் மேற்கொள்ளப்படவில்லை.

 

ஒரே வீட்டிற்குள் ஆண்கள் பெண்கள் சேர்ந்து தங்குவதும், கழிப்பறை வரை கேமரா வைப்பதும், அரைகுறை ஆடைகள் அணிந்து உலா வருவதும், காதல் உறவுகளை வீட்டிற்குள் இருந்தே வளர்ப்பது என்பன போன்ற தவறான பல கலாச்சார அத்துமீறல்கள் இந்த நிகழ்ச்சியில் பொருத்தப்பட்டுள்ளது. இது இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் தவறான எண்ண ஓட்டத்தை பதிய வைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஏற்கனவே பாலியல் குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில் இது போன்ற நிகழ்ச்சிகளும் ஒரு விதத் தூண்டுதலாக அமைகிறது. 

 

பொதுவாகவே ரியாலிட்டி ஷோ என்பது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெறக்கூடிய ஒன்று. அப்படி இருக்கையில், இளைய சமூகத்தினரை பாதிப்படைய செய்யக்கூடிய ஆபாச நிகழ்ச்சியாக பிக் பாஸ் உள்ளதனால், இந்த நிகழ்ச்சி முற்றிலமாக தடை செய்யப்பட வேண்டும். 'சிகரெட் சோன்' என்ற ஒரு இடம் அமைக்கப்பட்டு அங்கே அவர்கள் புகைப்பிடிக்கச் செல்லலாம் என்றெல்லாம் நிகழ்ச்சியில் வலியுறுத்தப்படுகிறது. புகைப்பிடிக்கும் பழக்கத்தினை இளைஞர்கள் மத்தியில் அதிகப்படுத்துவதற்கான வாய்ப்பாக இது உள்ளது. 

 

Ad

 

சிறிய குழந்தைகள் முதல் இந்த நிகழ்ச்சியைப் பார்க்க தொடங்கிவிட்டார்கள். கூடதலாகக் கரோனா காலகட்டத்தில், 16 பேர் சேர்ந்து ஓர் இடத்தில் தங்கும் நிகழ்ச்சி தேவையில்லாத ஒன்றாகும். இது மக்கள் இடத்தில் தவறான முன் உதாரணமாக அமையும்.

 

எனவே, இந்த நிகழ்ச்சியைத் தடை செய்ய காவல்துறை இயக்குநர் அவர்கள் கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று அனைத்து மக்கள் அரசியல் கட்சி சார்பாகப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

 

மேலும், இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர், "இந்நிகழச்சியைத் தடை செய்ய தொடர்ந்து போராடுவேன்" எனத் தெரிவித்தார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விதிமீறல் - நீதிமன்றம் அதிரடி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
big boss mohanlal issue

மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதனை மோகன்லால் தொகுத்து வழங்குகிறார். இந்த போட்டியில் வெறுப்பு பேச்சு பேசியதாக குறிப்பிட்டு அதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரை பெண்கள், குழந்தைகள் மற்றும் தனிநபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பான திஷா கேரளா’ அமைப்பு கொடுத்துள்ள நிலையில், தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்து போட்டியாளர்கள் தவறாகப் பேசியதாக குற்றம் சாட்டியுள்ளனர். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதே நிகழ்ச்சியில் இன்னொரு சர்ச்சை ஏற்படுள்ளது. 

போட்டியாளர்கள் இருவர் அடிதடியில் ஈடுபட்டனர். இது பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனைக் கண்டித்து வழக்கறிஞர் ஆதர்ஷ் என்பவர், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர், “மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு விதிமுறைகள் மற்றும் மத்திய அரசின் ஆலோசனைகளை மீறி உடல் ரீதியான தாக்குதல் காட்சிகளை ஒளிபரப்பியுள்ளனர். அதனால் நிகழ்ச்சி ஒளிபரப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட காட்சிகளை அனைத்து சமூக ஊடகங்கள் மற்றும் ஒடிடி தளங்களில் இருந்து அகற்ற வேண்டும்” என்று கோரியிருந்தார். 

big boss mohanlal issue

இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு விதிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை மீறுவதாகக் கண்டறியப்பட்டால், அதை ஒளிபரப்புவதை தவிர்க்க வேண்டும். உடனடியாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டது.    

Next Story

இது தான் பிக்பாஸின் புது ஹவுஸா! (படங்கள்)

Published on 03/10/2023 | Edited on 03/10/2023

 

 

 

கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி, தற்போது 7வது சீசனை தொட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது புதுசாக அறிமுகப்படுத்தும் பிக் பாஸ், இந்த முறை இரண்டு வீடுகளாக அமைத்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். அந்த வீட்டின் பிரத்தியேக புகைப்படங்கள்...