Skip to main content

"வெளியே தெரிந்தால் அவமானம்..." -பெற்றோருடன் இளம்பெண் கொடுத்த வாக்குமூலத்தால் அதிர்ச்சி...!

Published on 09/09/2020 | Edited on 09/09/2020

 

Because it is a shame if know outside ..! Shocked by the confession given by the girl with her parents ...!

        

ஊசிலம்பட்டி போன்ற பகுதிகளில் நிலவும் சிசுக்கொலைகள் தொடர்ந்து தென் மாவட்டத்திலும் பரவிவருகிறது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலின் அருகில் அமைந்திருக்கும் தியேட்டர் ஒன்றின் அருகில் உள்ள மைதானத்தில் இன்று (9/9/20) அதிகாலை மூன்று மணியளவில் இரண்டு பேர் ஏதோ ஒன்றை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துச் சென்றனர். அந்தப் பக்கமாக காலைக் கடன் கழிக்க வந்தவர்கள் அதைப் பார்த்து போலீசுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள். விரைந்து வந்த போலீசார் எரிந்த தீயை அணைத்தபோது, உடல் பாதி எரிந்து உயிரற்ற நிலையில் கிடந்த பிறந்த சிசுவைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிறகு, அந்த சிசுவின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

விசாரணையின் முதற்கட்ட தகவல்படி, அந்தப் பக்கம் உள்ள தெருவின் சங்கரகோமதி (22) என்ற பெண்ணுக்கு இரண்டு நாள் முன்பு பிரசவமாகி ஆண் குந்தை ஒன்று பிறந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. திருமணம் ஆகும் முன்பே கள்ளத் தொடர்பால் பிறந்த குழந்தை, வெளியே தெரிந்தால் அவமானம் என்பதால் சிசுவின் தாய் சங்கரகோமதியும் அவரது தாய் இந்திராணியும் சேர்ந்து அதிகாலை மூன்று மணியளவில் அந்தப் பக்கம் உள்ள தியேட்டரின் காம்பவுண்ட் பக்கம் எரித்துக் கொன்றது தெரியவந்திருக்கிறது. சங்கரகோமதி, தாய் இந்திராணி அவர் கணவர் சண்முகவேல் மூவரையும் விசாரணைக் கஷ்டடிக்குள் கொண்டுவந்த போலீசார், தாய் சங்கரகோமதியை மகப்பேறு வார்டில் சிசிக்சைக்காக அனுமதித்துள்ளனர்.

 

ஸ்பாட்டிலிருந்த மாவட்ட எஸ்.பி.யான சுகுணாசிங் பேசுகையில், “சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்தப் பெண் மகப்பேறு வார்டில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சிகிச்சை முடிந்தபின் மேல் விசாரணை செய்யப்படும்” என்றார். தாயே பெற்ற குழைந்தையை எரித்துக் கொன்றது நகரைப் பரபரப்பாக்கியிருக்கிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'உங்கள் குழந்தை செர்லாக் பேபியா?' -எச்சரிக்கை மணி அடித்த உலக சுகாதார அமைப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Is your child a Cerelac baby?'-World Health Organization has sounded the alarm

நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான செர்லாக் என்பது ஊட்டச்சத்து உணவு எனப் பொதுவாக குழந்தைகளுக்கு கொடுக்கும் பழக்கம் இந்தியாவில் நீண்ட நெடும் காலமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 'நெஸ்லே' நிறுவனம் இந்தியாவில் பல்லாயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்து வருகின்ற நிலையில், நெஸ்லேவின் குறிப்பிடத் தகுந்தத் தயாரிப்பில் ஒன்றாக உள்ளது செர்லாக்.

இந்தநிலையில் IBFAN எனப்படும் Baby Food Action Network என்ற ஐரோப்பிய அமைப்பு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விற்கப்படும் செர்லாக் எனும் குழந்தைகளுக்கான  ஊட்டச்சத்து உணவை ஆய்வு செய்தது. ஊட்டச்சத்து பொருள் என்று கூறப்படும் செர்லாக்கில் சுவைக்கு அடிமையாக்கி அடிக்கடி உண்ண வைக்கும் அடிக்டிவ் சுகர் என்பது சேர்க்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது நெஸ்லேவின் முக்கிய சந்தையாக கருதப்படும் பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில்  அடிக்டிவ் சுகர் சேர்க்கப்படவில்லை. ஆனால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில் மட்டும் அடிக்டிவ் சுகர் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனையாகும் செர்லாக்கை  குழந்தைக்கு ஒரு முறை ஊட்டுகையில் 2.2 சதவீதம் அடிக்டிவ் சுகர் குழந்தையின் உடலுக்கு செல்கிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் இந்தியாவை விட எத்தியோப்பியா போன்ற நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில்  அடிக்டிவ் சுகரின் அளவு 5.2 கிராமாக உள்ளது. நெஸ்லேவின் இந்தச் செயல்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இளம் வயதிலேயே சர்க்கரை நோய் வருவதற்கும், குழந்தைகள் பார்ப்பதற்கு அளவுக்கு மீறி குண்டாக இருப்பதற்கும் இவையே காரணம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story

இரவில் பரவிய வதந்தி ; ராந்தம் சோதனைச்சாவடியில் பரபரப்பு

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
A fight sparked by rumours; There is commotion at Randham check post

தமிழகத்தில் குழந்தைகளை கடத்துவதற்காக வட மாநிலங்களில் இருந்து கும்பல்கள் கிளம்பி உள்ளதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களை அடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே வடமாநிலத்தவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

அண்மையில் சென்னையில்  ஐடி துறையில் பணியாற்றும் திருநங்கை ஒருவர் இரவில் உணவகத்தில் சாப்பிட்டு விட்டு வரும் பொழுது அவரின் வினோத தோற்றத்தால் குழந்தை கடத்த வந்த நபர் என பிடித்த சிலர், அவரை அரை நிர்வாணமாக மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய காட்சிகள் வைரலாகி இருந்தது.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த ராந்தம் சோதனை சாவடி பகுதியில் வடமாநில இளைஞர் ஒருவர் குழந்தையைக் கடத்த முயன்றதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது. இதனையடுத்து அந்த பகுதி மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிக்கிய இளைஞரை தாக்கினர். அதன் பின்னர் அங்கு வந்த போலீசார் அந்த இளைஞரை அங்கிருந்து கூட்டிச் சென்றனர்.

அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.