Skip to main content

பொன்மாணிக்கவேல் சிறப்பு நியமனத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு!!

Published on 04/12/2018 | Edited on 04/12/2018
Tamilnadu Government appeals against Poonamikavel Special appointment

 

சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து கடந்த நவம்பர் 30-ஆம் தேதி நடந்த விசாரணையில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேலே வழக்குகளை விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது, தமிழக அரசின் இந்த அரசாணை சட்டவிரோதமானது என்று கூறி மேலும் ஒரு வருடத்திற்கு பொன்மாணிக்கவேலை சிலைகடத்தல் தடுப்புபிரிவு சிறப்பு அதிகாரியாகவும் உயர்நீதிமன்றம் நியமித்திருந்த நிலையில்,

 

சிலைகடத்தல் தடுப்புபிரிவு ஐஜி பொன்மாணிக்கவேலுக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய சிறப்பு பதவி நீட்டிப்பு நியமனத்தை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்