Skip to main content

அதிமுக பிரமுகர் விபத்தில் மரணம்;எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா முடிந்து திரும்பியபோது நடந்த பரிதாபம்!!

Published on 01/10/2018 | Edited on 01/10/2018
ACCIDENT

 

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள மதுக்கூர் கிராமத்தைச் சேர்ந்த கீற்று முடையும் தொழிலாளி சேகர். எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசியான இவர் சென்னையில் நடந்த நூற்றாண்டு நிறைவு விழாவுக்காக அப்பகுதி அதிமுக நிரவாகிகள் ஏற்பாடு செய்திருந்த பேருந்தில் சென்னை சென்றவர் விழா முடிந்து அதே பேருந்து ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த போது உளுந்தூர்பேட்டையில் பேருந்து நிறுத்தப்பட்ட போது இயற்கை உபாதை கழிக்க சாலையை கடக்க முயன்ற சேகர் மீது அந்த வழியாக சென்ற வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே சேகர் பரிதாபமாக உயிரிழந்தார். 

 

சேகரின் சடலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மதுக்கூர் பகுதியில் பரவியதால் கிராமமே சோகத்தில் உள்ளது.

சார்ந்த செய்திகள்