Skip to main content

மலையாள நடிகை மஞ்சுவாாியா் மீது வழக்கு தொடுக்க ஆதிவாசி மக்கள் முடிவு!

Published on 17/07/2019 | Edited on 17/07/2019

மலையாள பட உலகில் முன்னணி நடிகையாகவும், குடும்ப ஸ்தீாி பெண்கள் அமைப்பின் தலைவியாகவும் இருந்து வருபவா் மஞ்சுவாாியா். இவா் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வயநாடு பனைமரத்து பஞ்சாயத்து பரகூணி கிராம ஆதிவாசி குடும்பத்தை சோ்ந்த 57 குடும்பங்களுக்கு மஞ்சுவாாியா் பவுண்டேசன் சாா்பில் 1 கோடியே 75 லட்சம் மதிப்பில் வீடுகள் கட்டி கொடுப்பதாக உறுதி கூறினாா். 

இது சம்மந்தமாக வயநாடு மாவட்ட கலெக்டா், ஆதி திராவிடா் நலத்துறை செயலாளா் மற்றும் பனைமரம் பஞ்சாயத்து தலைவா் ஆகியோருக்கு கடிதம் மூலமும் இதை தொிவித்திருந்தாா். ஆனால் மஞ்சுவாாியா் கூறியபடி இரண்டு ஆண்டுகளாகியும் அவா்களுக்கு வீடு கட்டி கொடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அந்த மக்கள் எங்களுக்கு வீடு ஆசையை தூண்டி விட்டு ஏமாற்றியதாகவும் மேலும் வீடுகட்டி தருவதாகவும் கூறியதன் அடிப்படையில் சமூகத்தினாின் நற்பெயரை பெற்றுள்ளாா். 

Adivasi people decide to sue Malayalam actress Manjuvia


இதனால் அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறி இலவச சட்ட உதவி மையத்தில் புகாா் கொடுத்தனா். அதன் போில் இலவச சட்ட உதவி மையத்தில் நோில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் படி மஞ்சுவாாியருக்கு நோட்டீஸ் அனுப்பபட்டது. இதில் மூன்றுமுறை நோட்டீஸ் அனுப்பியும் அவா் ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை.

இச்சம்பவம் தற்போது கேரளாவில் காட்டுத்தீ போல் பரவியுள்ள நிலையில் மஞ்சுவாாியா் அந்த கிராம மக்களுக்கு இதுவரை 3 லட்சம் செலவு செய்துள்ளேன். இதில் அரசும் 10 லட்சம் ருபாய் நிதி தருவதாகவும் கூறியது ஆனால் அரசு தரவில்லை. இதனால் அவா்களுக்கு வீடு கட்டி கொடுப்பதில் காலதாமதம் ஆகிறது. மேலும் என்னுடைய பெயரையும் வேண்டுமென்றே அசிங்கப்படுத்துகிறாா்கள் என குற்றம் சாட்டியுள்ளாா்.

இந்நிலையில் இலவச சட்ட உதவிமையம் அந்த மக்களிடம் நீதிமன்றத்தை நாட கூறியுள்ளதையடுத்து ஆதிவாசி மக்கள் நீதிமன்றத்தில் மஞ்சுவாாியா் மீது வழக்குத்தொடுக்க முடிவு செய்துள்ளனா்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திரைப்படமாகும் உண்மை சம்பவம் - நடிகைக்கு கொலை மிரட்டல்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
raime sen maakaali poster issue

இந்தி மற்றும் பெங்காலி படங்களில் கவனம் செலுத்தி வருபவர் ரைமா சென். இப்போது இந்தியில் மாகாளி என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படம் 16 ஆகஸ்ட் 1946 அன்று கல்கத்தாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகிறது. இந்த சம்பவம் இந்தியாவை உலுக்கியது குறிப்பிடத்தக்கது. விஜய் யேலகண்டி இயக்கும் இப்படத்தை விஷ்வ பிரசாத் தயாரிக்க அனுராக் ஹல்டர் இசையமைக்கிறார். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கின் போஸ்டர் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் இந்து மதத்தை குறிக்கும் வகையில் காளி தோற்றத்தில் ஒரு புறமும் முஸ்லீம் மதத்தை குறிக்கும் வகையில் ஹிஜாப் அணிந்த தோற்றத்தில் ஒரு புறமும் இணைந்து இருக்கும் முகம் கொண்ட புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இந்த போஸ்டரை தொடர்ந்து தொலைப்பேசி வாயிலாக தனக்கு மிரட்டல் வருவதாக ரைமா சென் தெரிவித்துள்ளார். 

raime sen maakaali poster issue

இது தொடர்பாக அவர் கூறுகையில், “மர்ம நபர்களால் பெங்காலி மற்றும் இந்தியில் அலைபேசி கால்கள் வருகிறது. சுசித்ரா சென்னின் பேத்தியாக இருந்த நான் எப்படி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்பதைப் பொறுத்து மிரட்டல்கள் வந்தன. எதிர்காலத்தில் கொல்கத்தாவில் தான் நீ இருக்க வேண்டும். அதை நினைவில் வைத்துக்கொள் என்கிறார்கள். முதலில் படத்தைப் பார்த்துவிட்டு தங்கள் கருத்தைச் சொல்லுங்கள் என்று நான் மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார். 

Next Story

புடவைகளை விற்று உதவி செய்த பிரபல நடிகை

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
navya nair helped charity people with his saree sold

மலையாள திரையுலகில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் நடிகை நவ்யா நாயர். மேலும் தமிழ் மற்றும் கன்னட மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் பிரசன்னா நடிப்பில் வெளியான 'அழகிய தீயே', சேரனின் 'மாயக்கண்ணாடி', முன்னாள் முதல்வர் கலைஞர் எழுதிய 'பாசக்கிளிகள்' உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானார். இப்போது மலையாளத்தில் மற்றும் கன்னட மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். 

இந்த நிலையில் தனது சமூக வலைதளப்பக்கத்தில், தான் ஒரு முறை அணிந்த மற்றும் புதிதாக வாங்கி அணிய முடியாத புடவைகளை ஆன்லைனில் விற்பனை செய்வதாக அண்மையில் தெரிவித்திருந்தார். மேலும் கைத்தறி, காஞ்சிபுரம், பனாரஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான புடைவைகள் இருப்பதாகவும் நியாயமான விலையில் அவை கிடைக்குமெனவும் கூறியிருந்தார். இது விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது. ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பியிருந்தனர். 

navya nair helped charity people with his saree sold

இதையடுத்து நவ்யா நாயர் விற்பனையை தொடங்கினார். அதன் மூலம் கிடைத்த லாபத்தை கேரள பத்தனாபுரத்தில் உள்ள காந்திபவனுக்கு நன்கொடையாக கொடுத்துள்ளார். அங்கு வசிப்பவர்களுக்கு புதிய ஆடைகள் மற்றும் பயனுள்ள பொருட்களை வாங்கிக் கொடுத்து அருகில் இருக்கும் காந்தி பவன் சிறப்பு பள்ளிக்கு ரூ.1 லட்சம் நன்கொடையையும் கொடுத்துள்ளார். இவரது செயல் தற்போது பாராட்டை பெற்று வருகிறது.