Skip to main content

விஜய் ரசிகர் மன்ற இளைஞர் அணி தலைவர் டி.டி.வி தீடீர் சந்திப்பு!!

Published on 10/10/2018 | Edited on 10/10/2018

சர்கார் திரைப்பட விழாவில் நடிகர் விஜய் எல்லோரும் தேர்தலில் நின்று விட்டு சர்கார் அமைப்பார்கள். நாம் சர்கார் அமைத்து விட்டுத் தேர்தலில் நிற்கப்போகிறோம். புழுக்கத்துக்குப் பின் மழை வருவது போல, நெருக்கடி நெருங்கும்போது அடிபட்டு நல்லவர்கள் முன்னே வருவார்கள் அதுதான் இயற்கை. அப்படி வரும் ஒருவருக்குக் கீழே ஒரு சர்கார் வரும். நான் முதல்வரானால் நிஜத்தில் நடிக்கமாட்டேன்” என்று அரசியல் வசனங்கள் பேசி அரசியல்கட்சிகளுக்கு பெரிய ஷாக் கொடுத்தார். நடிகர் விஜயின் அரசியல் அதிரடி பேச்சு அரசியல் கட்சியினர் இடையேயும், பொதுமன்றங்களிலும், டிவி விவாதங்களிலும் பரபரப்பாக பேசும் பொருளாக மாற்றியது. ஒரு ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியையே தமிழக முழுவதும் பரபரப்பாக பேச வைத்தார். நடிகர் விஜய். 

 

VIJAY

 

இப்படி நாளுக்கு நாள் விஜய் கிராப் ரேட் ஏறிக்கொண்டிருந்த நிலையில் சென்னையில் தி.மு.க. மேடையில் பேச்சாளர் வே.மதிமாறன். தளபதி என்றால் என்று எங்கள் தலைவர் ஸ்டாலின், எம்.எல்.ஏ. ஆனா பிறகு தான் முதலமைச்சர் என்கிற அடிப்படை அறிவு இல்லாதவர் கூட தளபதியா என்று ஸ்டாலின் முன்னிலையிலே நடிகர் விஜயை பேசி தள்ளிய பரபரப்பு அடங்குவதற்குள் திருச்சியில் டி.டி.வி தினகரனை திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஏற்பாட்டில் திருச்சி மாவட்ட இளைஞர் அணி செயலாளர் குடமுருட்டி கரிகாலன் சந்தித்து சால்வை அணிவித்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

 

Actor Vijay's trusted youth team leader TTV  Meets

 

திருச்சி மாவட்ட இளைஞர் அணி செயலாளர் குடமுருட்டி கரிகாலன். இவர் திருச்சி மாவட்ட தி.மு.க. துணை செயலார் குடமுருட்டி சேகரின் தம்பி.  குடமுருட்டி சேகர் தி.முக. ஆட்சியில் தன் தம்பி விஜய் மன்றத்தில் இருந்தாலும் அப்போதைய அமைச்சர் கே.என்.நேருவின் உதவியுடன் இந்து அறநிலை துறையில் அரசாங்க வேலையை வாங்கி கொடுத்தார் என்பது குறிப்பிடதக்கது. 

 

ஆரம்ப காலம் முதல் விஜய் ரசிகர் மன்றத்தில் பொறுப்பில் இருந்து ஏகப்பட்ட பொருட் செலவு செய்து விஜய் திரைப்படங்களுக்கு திருச்சியில் செலவு செய்து கொண்டாடியவர், 15 ஜோடிகளுக்கு திருச்சியில் நடிகர் விஜய் தலைமையில் இலவச திருமணம் செய்து நடிகர் விஜயின் நம்பிக்கை பெற்றவர். இப்படி விஜய் சமீபத்தில் சர்கார் திரைப்பட ஆடியோ ரீலிஸ்க்கு கூட திருச்சியில் வேனிலும், பஸ்ஸிலும் ஆட்களை ஏற்றிக்கொண்டு சென்றவர். 

 

 TTV

 

இதை விட முக்கியமாக ஜெ. ஆட்சியில் இருக்கும் போது கூட்டணி பேச்சு வார்த்தை வரும் போது நிர்வாகிகளை சந்தித்து தேர்தலில் நிற்க யாருக்கு விருப்பம் என்று கேட்ட போது முதல் ஆளா எழுந்து நின்று நான் நிற்கிறேன். எவ்வளவு செலவானலும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி நடிகர் விஜய்க்கு  நம்பிக்கை கொடுத்து அதிர்ச்சியடைய வைத்தவர். இப்படி விஜயின் அரசியல் நடவடிக்கைகளுக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக இருந்த குடமுருட்டி கரிகாலன் நேற்று கரூர் உண்ணாவிரத்திற்கு கலந்து கொண்டு திருச்சி விமானநிலையத்திற்கு வந்த டி.டி.வி தினகரனை விமானநிலையத்தில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஏற்பாட்டில் குடமுருட்டி கரிகலான் சால்வை அணிவித்தார் என்பதுதான் தற்போது திருச்சியில் பரபரப்பு அரசியல் சூட்டை கிளப்பியுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மரத்தடியில் டி.டி.வி. தினகரனுக்காக காத்திருந்த ஓ.பி.எஸ்‌.!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
OPS waiting for tTV Dinakaran on under the tree

தேனி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.ம.மு.க. வேட்பாளரான டி.டி.வி. தினகரன், அ.தி.மு.க.வில் நாராயணசாமி, நாம் தமிழக கட்சி சார்பில் மதன் மற்றும் சில கூட்டணி வேட்பாளர்களும், சுயேட்சைகளும் தேர்தல் களத்தில் இருந்தாலும் கூட நான்கு முனை போட்டி தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான இன்று (27.03.2024) டி.டி.வி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்ய மதியம் இரண்டு மணிக்கு மேல் வருவதாக இருந்தது. ஏற்கெனவே ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகனும் எனக்காக இந்த தொகுதியை விட்டுக் கொடுத்து இருக்கிறார்கள் என்று டி.டி.வி. தினகரன் பிரச்சாரத்தின் போது பேசி இருக்கிறார்.

அதை தொடர்ந்து தான் டி.டி.வி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்வதை பார்த்து வாழ்த்து கூற ஓ.பி.எஸ். முடிவு செய்து, தனது தொகுதியான ராமநாதபுரத்தில் இருந்து மதியம் 01.15 மணிக்கு தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, மாவட்ட செயலாளர் சையது கானும் இருந்தனர். ஆனால் ஓபிஎஸ் கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள மரத்தடியிலேயே நின்று கொண்டு அவர்கள் இண்டு பேரிடம் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது ஓ.பி.எஸ் வழக்கத்துக்கு மாறாக அதிமுக கரை வேட்டி இல்லாமல் பாடர் கரை போட்ட வேட்டி கட்டி இருந்தார். உடன் வந்த ஒருவர் ஓ.பி.எஸ்.உட்காருவதற்காக கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று ஒருசேர் எடுக்க முயன்றார். அப்பொழுது அங்குள்ள அதிகாரிகளும் தேர்தல் விதிமுறை மீறி வெளியே சேர் கொண்டு போக கூடாது என்று கூறிவிட்டனர். அதைத் தொடர்ந்து தான் ஓ.பி.எஸ்.ஸுடன் அவர்கள் இரண்டு பேரும் தொடர்ந்து 02.14 மணி வரை அதாவது ஒரு மணி நேரம் நின்று கொண்டிருந்தனர். ஆனால், தமிழக முதல்வராக இரண்டு முறை ஓ.பி.எஸ். இருந்தும் கூட அதை எல்லாம் மறந்து விட்டு டி.டி.வி. தினகரன் வருகைக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள மரத்தடி நிழலில் சாதாரணமாக நின்று கொண்டிருந்தார்.

OPS waiting for tTV Dinakaran on under the tree

அதைத்தொடர்ந்து தான் டி.டி.வி. தினகரன் பிரச்சார வேனில் 02.15 மணிக்கு கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே வந்த டிடிவியை ஓ.பி.எஸ். வரவேற்று சால்வை அணிவித்தார். ஆனால் டிடிவி தினகரன் ஓ.பி.ஆர். உள்பட சிலர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டரிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துவிட்டு வந்தனர். அதுவரை ஓ.பி.எஸ். மரத்தடியிலேயே நின்று கொண்டிருப்பதை கண்டு அதன் அருகில் மக்கள் உட்காருவதற்காக இரும்புச் சேர் போட்டு இருப்பதை பார்த்த கட்சிக்காரர்கள் சிலர் அதை எடுத்து வந்து போட்டனர். அதில் ஓ.பி.எஸ். உடன் இரண்டு பேரும் உட்கார்ந்து இருந்தனர். அதன் பின் வந்த டி.டி.வி. தினகரனை மீண்டும் வாழ்த்தினார். அப்பொழுது டி.டி.வி. தினகரன் நீங்களும் வாங்கள் பேட்டி கொடுக்கலாம் என்று கூறி அழைத்துச் சென்றார். ஆனால் டி.டி.வி. மட்டும்தான் பேட்டி கொடுத்தாரே தவிர அதன் அருகிலேயே ஓ.பி.எஸ். நின்று கொண்டே இருந்தார் அதன் பின் பிரச்சாரவேனில் டி.டி.வி. தினகரன்  ஏறும் வரை அருகிலேயே நின்று வழி அனுப்பி விட்டு தான் திரும்பி சென்றார். 

Next Story

“தம்பி, தங்கைகளே...” - த.வெ.க தலைவர் விஜய் வாழ்த்து

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
vijay wishes 10 students for public exam

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை (25.03.20240) முதல் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 8 வரை நடைபெறவுள்ள இந்த தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதைத் தொடர்ந்து பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதியும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் மே 14ம் தேதியும் வெளியிடப்படுகிறது.  

இந்த நிலையில் மாணவ, மாணவிகள் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர் அவர்களுக்கு ஆசிரியர்கள், பெற்றோர் அல்லாது திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த மாத இறுதியில் ராஷ்மிகா மந்தனா மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

இந்த நிலையில் நடிகரும் த.வெ.க-வின் தலைவருமாகிய விஜய் தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அக்கட்சியின் எக்ஸ் வலைத்தள பதிவில், “தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை,  நாளை எழுதவுள்ள என் அருமை தம்பி, தங்கைகள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற, நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என விஜய் கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜய் கடந்த ஆண்டு ஜூன் மாதம், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.