Skip to main content

காட்டுமன்னார்கோவில் அருகே சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம்- 3 பேர் கைது

Published on 14/11/2019 | Edited on 14/11/2019

காட்டுமன்னார்கோவில் அருகே சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது மேல ராதாம்பூர். இந்தபகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் மகன் மாதவன் (17). இவர் அதேபகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவருக்கும் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள நடுகஞ்சன்கொல்லையை கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. இவர்கள்  இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

 

abuse incident in kattumannar kovil

 

இந்தநிலையில் மாதவன் தனது நண்பர்களான நடுகஞ்சன்கொல்லையை சேர்ந்த ராமலிங்கம் மகன் விக்னேஷ்வரன்(19), ராமச்சந்திரன் மகன் சூர்யபிரகாஷ்(21) ஆகியோரிடம் தான் நடுகஞ்சன்கொல்லையை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வருவதாக கூறியுள்ளார். கடந்த  8 மாதத்துக்கு முன்பு மாதவன்  அவரது காதலியை அதே பகுதியில் உள்ள வடவாற்றுக்கரைக்கு அழைத்து சென்று ஆசை வார்த்தை கூறி அவரிடம் உல்லாசமாக இருந்துள்ளார். இதுபோல மாதவன் பல முறை காதலியுடன் உல்லசாமாக இருந்துள்ளார்.

மாதவன் இதுகுறித்து அவரது நண்பர்களான விக்னேஷ்வரன், சூர்யபிரகாஷ் ஆகியோரிடம் கூறியுள்ளார். இந்தநிலையில் கடந்த 06.10.2019அன்று மாதவனின் காதலி ஊர் அருகே உள்ள வீரன் கோவில் பகுதியில் தனிமையில் நின்றுள்ளார். அப்போது அங்கு சென்ற சூரியபிரகாஷ் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த 13.10.2019 அன்று வீட்டில் சிறுமி தனியாக இருந்த போது அங்கு சென்ற விக்னேஷ்வரன் அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்த நிலையில்  நேற்று முன்தினம்(12ம் தேதி) சிறுமிக்கு வயிற்று வலி வந்து துடித்துள்ளார். அவரை அவரது சகோதரர் வீரப்பன் அவரை கட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி  வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்கை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிறுமி நடந்த உண்மைகளை சகேதரர் வீரப்பனிடம் கூறி அழுதுள்ளார்.
 

இது குறித்து நேற்று முன்தினம் சிறுமியின் சகோதரர் வீரப்பன் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆக்னேஸ்மேரி, சப்-இன்ஸ்பெக்டர் திரிபுரசுந்தரி மற்றும் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய் குற்றவாளிகளை பிடிக்க சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி ஜவஹர்லால் தலைமையில் தனிப்படை அடைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் நேற்று மாதவன், அவரது நண்பர்கள் விக்னேஷ்வரன், சூர்யபிரகாஷ்  ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விக்னேஷ்வரன், சூர்யபிரகாஷ் ஆகிய 2 பேரும் கல்லூரி மாணவர்கள் ஆவார்கள்.
 

சிறுமியை மிரட்டி மாணவர்கள்  பாலியல் செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.