Skip to main content

ஒரே பள்ளியில் படித்த 7 மாணவிகள் மருத்துவராகிறார்கள்...!!

Published on 28/01/2022 | Edited on 28/01/2022

 

 7 students who studied in the same school become doctors ... !!

 

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் போன்ற மருத்துவப் படிப்பிற்கான சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு தொடங்கியதும் நீட் தேர்வில் 514 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்த புதுக்கோட்டை மாவட்டம் சிலட்டூர் அரசுப் பள்ளி மாணவன் சிவா சென்னை எம்.எம்.சி மருத்துவக்கல்லூரியைத் தேர்வு செய்துள்ளார்.

 

தொடர்ந்து நடந்த கலந்தாய்வில் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து கலந்து கொண்ட சுமார் 35 மாணவ, மாணவிகளில் 20 மாணவ, மாணவிகள் எம்.பி.பி.எஸ்சும் 2 மாணவிகள் பிடிஎஸ்சும் தேர்ந்தெடுத்துள்ளனர். கடந்த ஆண்டு 18 மாணவ, மாணவிகள் மருத்துவம் படிக்கச் சென்ற நிலையில் இந்த ஆண்டு 22 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் மருத்துவப் படிப்பிற்குச் செல்கின்றனர். இதில் வழக்கம் போல அறந்தாங்கி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளே அதிகம்.

 

ஒரே பள்ளியில் 7 மாணவிகள் மருத்துவர்கள்

 

 7 students who studied in the same school become doctors ... !!

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் +2 படித்த மாணவிகளில் 7 மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் இன்று நடந்த மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வில் கலந்து கொண்டனர். இதில் தீபிகா மதுரை அரசு மருத்துவக்கல்லூரி, வாலண்டினா தேனி அரசு மருத்துவக்கல்லூரி, கனிகா புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி, சுவாதி சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி, யமுனா திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரியையும் தேர்வு செய்துள்ளனர். மேலும் நிஷாலினி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி என ஒரே பள்ளியில் படித்த 6 மாணவிகளும் எம்.பி.பி.எஸ் படிக்க தேர்வாகி உள்ளனர். மேலும் நிஷா என்ற மாணவிக்கு திருநெல்வேலி பல் மருத்துவக் கல்லூரியிலும் படிக்க தேர்வாகி உள்ளனர்.

குவியும் பாராட்டுகள்

 

 7 students who studied in the same school become doctors ... !!

 

இதேபோல கடந்த ஆண்டு இதே கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 4 பேர் மருத்துவம் படிக்க தேர்வாகி பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். மாநிலத்திலேயே புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள்தான் அதிக அளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்கச் செல்கிறார்கள் என்ற பெருமை பெற்றுள்ளது. தொடர்ந்த இரண்டு வருடங்களில் 11 மாணவிகளை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்ப பயிற்சி அளித்த தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளை பெற்றோர்களும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர். மேலும் சமூக வலைதளங்களிலும் பாராட்டுகள் குவிகிறது.இதேபோல கீரமங்கலம் பகுதியைச் சேர்ந்த சிலட்டூரில் 2 பேர், அரயப்பட்டியில் 2 பேர், எல்.என்.புரம், வடகாடு, மேற்பனைக்காடு ஆகிய ஊர்களில் தலா ஒருவர் மருத்துவர் ஆகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.