Skip to main content

கோவையில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை... உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு

Published on 27/03/2019 | Edited on 27/03/2019

கோவை பன்னிமடையை சேர்ந்த பள்ளிக்குச் சென்ற சிறுமி வீடு திரும்பாத நிலையில் நேற்று அதிகாலை கைகள் கட்டப்பட்டு பிணமாக கிடந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்திருந்த நிலையில் அந்த குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியாகி கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட சிறுமியின் பெற்றோர்  சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றுக்கொண்டனர்.   

 

 6 year old girl in Coimbatore sexual abuse and assassinated ...  child body handing over to the parents

 

கோவை பன்னிமடை அருகே உள்ள திப்பனூர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் சதீஸ் மற்றும் வனிதா. இவர்களுக்கு ஏழு வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்தக் குழந்தை அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் சிறுமி நேற்று பள்ளி முடிந்து வீட்டுக்கு வழக்கம்போல சென்று கொண்டிருந்தார். ஆனால் சிறுமி நேற்று மாலை வரை வீடு திரும்பவில்லை. இதையடுத்து சந்தேகம் அடைந்த பெற்றோர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். 

 

மேலும் உறவினர்கள் அக்கம் பக்கத்தினர் என அனைவரும் பல்வேறு பகுதியில் விடிய விடிய தேடினர்.

 

sexual abuse

 

அதனையடுத்து அதிகாலை 4 மணி அளவில் கஸ்தூரிநாயக்கன் புதூர் என்கிற இடத்தில் கத்தியால்  அறுபட்ட  காயங்களோடு கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுமி பள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். 

 

இந்த சம்பவத்தை அடுத்து குழந்தையின் பிரேதம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. மேலும் இது தொடர்பாக துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் நடந்த மருத்துவ பரிசோதனையில் அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியாகியது. கொலை பிரிவு மட்டுமன்றி போக்ஸோ சட்டத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகளை   உடனடியாக கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என குழந்தையின் உறவினர்கள் துடியலூர் சிக்கனலில் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

 

sexual abuse

 

 

sexual abuse

 

இந்நிலையில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்த விஜயகுமார் உட்பட 4 பேரை காவல்துறையினர் பெற்றோர்களிடம் காணொளி காட்சிகளின் மூலம் காண்பித்ததால் பெற்றோர்கள் சிறுமியின் உடலை வாங்க சம்மதித்தனர். துடியலூர் பகுதியில் நான்கு மணி நேரமாக சாலை மறியல் செய்தவர்களிடம் நாளை மாலை 3 மணிக்குள் கொலையாளிகள் பிடிக்கப்படுவார்கள் என்று காவல்துறையினர் கூறியதையடுத்து சாலை மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர்.

 

 6 year old girl in Coimbatore sexual abuse and assassinated ...  child body handing over to the parents

 

அண்மையில் கோவை பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை விவகாரம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்