Skip to main content

கடலூரில் மது, மணல் கடத்திய  3 பேர் குண்டர் தடுப்புக் காவலில் கைது! 

Published on 06/10/2018 | Edited on 06/10/2018
kasi

 

கடந்த 7.9.2018 அன்று கடலூர் மாவட்டம்  பனப்பாக்கம் இரயில்வே கேட் அருகில் புதுபேட்டை காவல்துறையினர் மணல் தடுப்பு சம்பந்தமாக வாகன சோதனை பணியில் ஈடுபட்டிருந்தபோது மேல்குமாரமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தேவராசு மகன் முருகன்(35) என்பவர் டிப்பர் லாரியில் திருட்டு மணல் ஏற்றி வந்துள்ளார். அதை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது தென்பெண்னை ஆற்றிலிருந்து திருட்டு மணல் ஏற்றி வந்தது தெரிந்தது. 

 

அது சம்பந்தமாக  புதுப்பேட்டை காவல் ஆய்வாளர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்து,  கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.   இந்நிலையில் முருகன் மீது புதுப்பேட்டை காவல் நிலையத்தில் மணல் கடத்திய வழக்கில் தலைமறைவு குற்றவாளியாக இருந்ததாலும், அவரது குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஆணையின் பேரில் முருகன் குண்டர் தடுப்பு காவலில் அடைக்கப்பட்டார்.

 

kkka

 

இதேபோல் 25.9.2018 அன்று காலை  திட்டக்குடி வட்டம் நரையூர் ஏரிக்கரை அருகே உள்ள தார் சாலையில் மதுகடத்தல் தடுப்பு சம்பந்தமாக விருத்தாச்சலம் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் மணமல்லி மற்றும் போலீசார் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த மகேந்திரா காரை நிறுத்தி சோதனை செய்தபோது வாகனத்தில் சுமார் 550 லிட்டர் எரிசாராயம் இருந்ததை கைப்பற்றினர். மேலும் எரிசாராயத்தை கடத்தி வந்த திண்டிவனம் களத்து மேட்டுத்தெருவை சேர்ந்த துரை என்பவரின் மகன் முரளி( 27),  வேப்பூர் வடபாதியை சேர்ந்த ராயப்பிள்ளை மகன் சரத்குமார் (28) ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 

 

முரளி மீது விருத்தாச்சலம் மதுவிலக்கு காவல் நிலையத்தில் 3 வழக்குகளும்,  திண்டிவனம் மதுவிலக்கு பிரிவில் 2 வழக்கும்,  சரத்குமார் மீது விருத்தாசலம் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் 5 வழக்குகளும் உள்ளன.  தொடர்ந்து மது கடத்தலில் ஈடுபட்டு வரும் இவர்களின் குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டும்  குண்டர் தடுப்புக் காவலில் வைக்க வைக்க சிறைப்படுத்தப்பட்டனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மின்சாரம் தாக்கி தந்தை மகன் உயிரிழப்பு.. உயிருக்குப் போராடிய தாய் மருத்துவமனையில் அனுமதி 

Published on 10/10/2022 | Edited on 10/10/2022

 

Father and son due to electrocution.. Mother was admitted to the hospital

 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே துணி காயப்போடும் போது மின்சாரம் தாக்கி தந்தை மகன் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சிறுப்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் ராமர். இவரது மனைவி பெரியம்மா. இவர் துணிகளை தனது வீட்டில் இருந்த கொடியில் காயப்போட சென்றுள்ளார். இரும்பால் செய்யப்பட்டிருந்த கொடி மின் கம்பத்தின் ஸ்டே ஒயரை உரசியவாறு சென்றுள்ளது. இதை  பெரியம்மா கவனிக்காமல் துணிகளை காயப்போட்டதால் அவரை மின்சாரம் தாக்கியுள்ளது. 

 

மின்சாரம் தாக்கியதில் அதிர்ந்து கத்திய பெரியம்மாவினை பார்த்த அவரது மகன் மணிகண்டன் அவரை காப்பாற்ற முயன்றுள்ளார். அவருக்கும் மின்சாரம் தாக்கியது. அறுந்து விழுந்த மின்சார கம்பி அருகில் இருந்த பெரியம்மாவின் கணவர் ராமர் மீது விழுந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. மின்சாரம் தாக்கிய நிலையில் மகனும் சம்பவ இடத்தில் உயிரிழந்து விட்டார். பெரியம்மாவினை காப்பாற்றிய அப்பகுதி மக்கள் அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராமர் மற்றும் மண்கண்டனின் உடல்களை மீட்டு விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு மின்சாரம் தாக்கி அதில் தந்தை மகன் உயிர் இழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Next Story

நெல் கொள்முதலுக்கு லஞ்சம் கேட்பதாக புகார்

Published on 21/09/2022 | Edited on 21/09/2022

 

"We will go anywhere if we ask for Rs. 50 per bundle or Rs. 100 per bundle" - Farmers who are unable to sell the grown paddy

 

விருத்தாச்சலம் அருகே நெல் கொள்முதல் செய்ய லஞ்சம் தர மறுத்ததால் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாத அதிகாரியை பணியிட நீக்கம் செய்ய விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த தொரவளூர் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இந்த நெல் கொள்முதல் நிலையத்திற்கு முகுந்தநல்லூர், பரவளூர், கச்சிபெருமாநத்தம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் இருந்து, விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த குறுவை சாகுபடி நெல்லை விற்பனை செய்வதற்காக கொண்டு வருவது வழக்கம்.

 

இந்நிலையில் தொரவளூர் கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி என்ற விவசாயியின் நெல்லை, இயந்திரத்தின் மூலம் தூற்றி, கொள்முதல் செய்து கொண்டிருக்கும்போது, மூட்டைக்கு ரூ.50 கொடுக்க வேண்டும் என நிலைய அதிகாரி விஜயகுமார்  கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் விவசாயி, “வறுமையின் காரணமாக, மூட்டைக்கு ரூ.50 கொடுக்க முடியாது. ரூ.30 ரூபாய் தருகிறேன்” என கூறியுள்ளார்.

 

ஆனால் நிலைய அதிகாரி விஜயகுமார், பழனிச்சாமியின் நெல் ஈரமாக உள்ளது எனக் கூறி, கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளை, மீண்டும் விவசாயியின் சாக்கில் தொழிலாளிகள் மாற்றினர். இதனால் விவசாயி பழனிச்சாமி, செய்வதறியாமல் திகைத்து நின்றார். 

 

வாங்கிய கடனையும், குடும்ப செலவையும் சமாளிப்பதற்காக இரவு பகலாக கஷ்டப்பட்டு விளைவித்த நெல் மூட்டைகளை விற்பனை செய்ய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்தால் மூட்டைக்கு 50 கொடு, 100 கொடு என அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் நாங்க எங்கையா போவோம் என ஏழை, எளிய விவசாயிகள் செய்வதறியாது நிற்கின்றனர். 

 

லஞ்சம் தர மறுத்த விவசாயின் மூட்டையை, ஈரம் எனக் கூறி நிறுத்திய நிலைய அதிகாரி விஜயகுமார் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.