Skip to main content

பிளஸ்- 2 தேர்வு- மாணவர்களுக்கு மறுவாய்ப்பு!

Published on 17/06/2020 | Edited on 17/06/2020

 

+2 exam students tamilnadu education department


பிளஸ்- 2 தேர்வு தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்குநர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். 

 

அதில், 'மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் பயின்று 24-03-2020 அன்று நடைபெற்ற வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் பாடங்களுக்கான பிளஸ்- 2 பொதுத்தேர்வினை எழுதாத மாணவர்களிடம் இருந்து தற்போது வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் படங்களுக்கான மறுத்தேர்வு எழுதுவதற்கான விருப்பக் கடிதத்தினை 24-06-2020 பெற்றுக்கொள்ளுதல் வேண்டும். அக்கடிதத்தில் மாணவரது பெயர், தேர்வெண் மற்றும் தேர்வு மைய எண் ஆகிய விவரங்கள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும். 

 

அவ்வாறு பெறப்படும் விருப்பக் கடிதங்களை தேர்வெண் வாரியாக அடுக்கி 26-06-2020 தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்