Skip to main content

எடப்பாடிக்கு முக்கியத்துவம்... செங்கோட்டையனுக்கு ஒர வஞ்சனையா...?

Published on 27/06/2019 | Edited on 27/06/2019

பள்ளி படிப்பு முடித்த மாணவ, மாணவியர்கள் எங்களுக்கும் லேப்பாப் வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் ஈரோட்டை பரபரப்பாக்குகிறார்கள்.

தமிழக அரசு சார்பில் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்-டாப்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் புதிய பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது அதன் படி பிளஸ் 2 மாணவர்களுடன் பிளஸ் 1 மாணவர்களுக்கும் இலவச லேப்டாப்கள் வழங்கப்பட்டு வருகிறது. 

protest


இந்நிலையில் கடந்த 2017-18  ஆண்டு படித்த மாணவ மாணவிகளுக்கு தமிழகம் முழுவதும் இலவச லேப்டாப்கள் வழங்கப்படவில்லை. எனவே எங்களுக்கும் இலவச லேப்டாப்கள் வழங்க வேண்டும் என்று கூறி மாணவ மாணவிகள் தொடர்ந்து  போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் இந்த லேப்டாப்  விஷயம் வீரியமாக மாணவர்கள் போராட்டமாக வெடித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இலவச லேப்டாப் கொடுக்க வந்த ஈரோடு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தென்னரசு மற்றும் கே.வி.ராமலிங்கம் ஆகியோரை முற்றுகையிட்டு போராடினார்கள் இதில் மாணவ, மாணவியர்கள் மீது தடியடி நடத்தியது போலீஸ் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்த அதன் பிறகு பீதியான எம்.எல்.ஏ.க்கள் எந்த பள்ளிக்கும் லேப்டாப் கொடுக்க செல்லவில்லை. ஆனால் தொடர்ந்து மாணவ, மாணவியர்கள் ஒவ்வொரு நாளும் லேப்டாப் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.  இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு இலவச லேப்-டாப்கள்  வழங்க கோரி 1000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் திரண்டு வந்தனர்.

இதனால் நூற்றுக்கணக்கான  போலீசார குவிக்கப்பட்டிருந்தனர்.  மாணவர்கள் மனு கொடுக்க ஐந்து பேரை மட்டும் கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் அனுமதித்தனர் அந்த ஐந்து மாணவர்கள் கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் சென்று மனு கொடுத்தனர்.  அப்போது எங்களுக்கும் இலவச லேப்டாப்கள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.  அதற்கு பதிலளித்த அதிகாரிகள் உங்களுக்கு இன்னும் இரண்டு மாதத்தில் இலவச லேப்-டாப்கள் வழங்கப்பட்டு விடும்  என்று கூறி அதற்கான அரசானை  நகலை மாணவரிடம் காண்பித்தனர். இதனை அப்போதைக்கு ஏற்றுக்கொண்ட மாணவர்கள்   கலெக்டர் அலுவலகத்திலிந்து வெளியேற தொடங்கினார்கள்.   

protest

 

மனு கொடுக்க வந்த மாணவர்கள் கூறும்போது,


"நாங்கள்  கடந்த 2017-18    ஆண்டில் பிளஸ்2 முடித்தோம்.  எங்களுக்கு தமிழக அரசின் இலவச லேப்டாப்கள்இன்னும் வழங்கப்படவில்லை.  ஆனால் எங்களுக்கு அடுத்த வருடம் படித்த மாணவ மாணவிகளுக்கு இலவச லேப்டாப்கள் வழங்கிவிட்டனர் இதுகுறித்து கேட்டால் முறையாக பதில் அளிப்பதில்லை.  நாங்கள் தற்போது கணினி பாடம் சம்பந்தமாக படித்து வருகிறோம் லேப்டாப் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம் லேப்டாப்  கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் அரசு எங்களை வஞ்சிக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சேலம் மாவட்டத்தில் எல்லோருக்கும் கொடுத்து விட்டனர் எங்களுக்கு மட்டும் இன்னும் இரண்டு மாதம் பொறுங்க என தள்ளி போடுகிறார்கள். முதல்வர் எடப்பாடிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மாவட்டத்திற்கு ஓரவஞ்சனையாக நடந்து கொள்கிறார்கள்"  என்றனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.