Skip to main content

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கு: மறுபடியும் முதல்லேந்து கதைதான்; எச்.ராஜா சூசகம்!

Published on 14/06/2018 | Edited on 14/06/2018


18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கில் மறுபடியும் முதல்லேந்து கதைதான் நடக்கும் என பாஜக தேசியசெயலாளர் எச்.ராஜா சூசகாமாக தெரிவித்துள்ளார்.

 

 

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று பிற்பகல் 1 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் தீர்ப்பு குறித்து எச்.ராஜா தனது டிவிட்டர் பதிவில் கூறியதாவது,

அவைத்தலைவர் முடிவு செல்லாது என்றாலும் சட்டப்படி அவர்கள் அதிமுக உறுப்பினர்கள் தான். எப்படி தேமுதிக எம்எல்ஏக்கள் அதிமுக கொடி போட்ட காரில் போனாலும் சபையில் தேமுதிக அணியில் அமர்ந்தனரோ அதுபோல. 18 பேரும் அதிமுக கொறடா உத்தரவிற்கு கட்டுப்பட்டவர்கள். மறுபடியும் முதல்லேந்து கதைதான். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்