Skip to main content

திரையில் எம்.ஜி.ஆர்.! நிஜத்தில் கே.டி.ஆர்.! -நிறைவேறிய ‘பாக்ஸிங்’ கனவு!

Published on 18/02/2020 | Edited on 18/02/2020

“மனதுக்குள் முடிந்து வைத்த ஆசை போலும்..” என்றார் பத்திரிகை நண்பர் ஒருவர், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி விருதுநகரில் குத்துச்சண்டை போட்டியைத் தொடங்கி வைத்து,  தானும் ஆர்வத்தோடு கைகளில் உறைகளை மாட்டிக்கொண்டு குத்துச்சண்டை வீரர் ஒருவருடன் ‘சும்மாகாச்சும்’ சண்டையிட்ட போது.

 

MGR on screen! KTR in real time! Boxing is a dream come true!

 

‘கமல்ஹாசனோடு அரசியல் ஸ்டண்ட்.. ‘மோடி-டாடி’ போன்ற பஞ்ச் டயலாக்குகள்..   இதெல்லாம் வழக்கமானதுதான்.  குத்துச்சண்டை  ‘வேறமாதிரி’ தெரிகிறதே?’ என்று கேட்டபோது, கே.டி.ராஜேந்திரபாலாஜியின் நட்பு வட்டத்தில் உள்ள ஒருவர் எடுத்துவிட்டார்.

“எம்.ஆர்.ராதாவால் எம்.ஜி.ஆர். சுடப்பட்ட நாள் 1967, ஜனவரி 12. அதே ஆண்டு,  செப்டம்பர் 7-ஆம் தேதி திரைக்கு வந்த காவல்காரன் திரைப்படத்தில் குத்துச்சண்டை போட்டியில் வில்லன் மனோகரை வீழ்த்தி வெற்றி பெறுவார், எம்.ஜி.ஆர். அறுவை சிகிச்சை மூலம் எம்.ஜி.ஆரின் தொண்டையிலிருந்து குண்டை அகற்றினாலும், அவரது குரல் பாதிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில், எம்.ஜி.ஆர். பேசும் காட்சிகளில், அவரது வழக்கமான குரலைக் கேட்க முடியாது. குரல் உடைந்துபோய், வார்த்தைகள் தெளிவில்லாமல் ஒலிக்கும். மாறிப்போன அவரது குரலே, காவல்காரனுக்கு பெரிய விளம்பரத்தைத் தேடித்தந்தது. அத்திரைப்படம் அமோக வெற்றி பெற்றது.

 

MGR on screen! KTR in real time! Boxing is a dream come true!


சிறுவயதிலிருந்தே ராஜேந்திரன் (கே.டி.ராஜேந்திரபாலாஜியின் ஒரிஜினல் பெயர்) எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். காவல்காரன் ரிலீஸானபோது, அவருக்கு மூன்று வயதுதான். அப்போதெல்லாம், சிவகாசி பகுதியில், பழைய சினிமாக்களை திரும்பத் திரும்ப டூரிங் டாக்கீஸில் திரையிடுவார்கள். அந்த நேரத்தில், காவல்காரனை பலமுறை பார்த்திருக்கிறார் ராஜேந்திரன். குறிப்பாக, வில்லன் மனோகருடன் கையில் உறை அணிந்து எம்.ஜி.ஆர். மோதும் பாக்ஸிங் காட்சியின் போது ‘விடாதீங்க வாத்தியாரே!’ என்று விசிலடித்து ஆரவாரம் செய்வார். இரவுக் காட்சி முடிந்து வீட்டுக்கு வந்து தூங்கும்போது, கனவிலும் ‘பாக்ஸிங்’ அவரை விடாது.

 

MGR on screen! KTR in real time! Boxing is a dream come true!


பேட்டிகளில் வீரதீரமாகப் பேசினாலும், கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு குழந்தை மனதுதான். அதனால்தான்,  விருதுநகரில் விளையாட்டு போட்டிகளைத் துவக்கிவைத்த போது,  கைகளில் உறையை மாட்டிக்கொண்டு, குத்துச்சண்டை வீரரிடம் ‘பாவ்லா’ காட்டி மகிழ்ந்தார்.  இதற்குக் காரணம், காவல்காரனில் எம்.ஜி.ஆர். போட்ட பாக்ஸிங் ஃபைட், அவரது மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டதுதான்.  பார்ப்பதற்கு வேண்டுமானால் அமைச்சர் போட்ட குத்துச்சண்டை ‘சின்னப்புள்ளத்தனமா’ இருக்கலாம். இது, அவரது பலநாள் ஏக்கம்.” என்று பெருமூச்சு விட்டார், அந்த நண்பர்.

 

MGR on screen! KTR in real time! Boxing is a dream come true!

 

வாய்ப்பு கிடைத்தாலும்,  மனதிலுள்ள ஆசைகளை எல்லோராலும் நிறைவேற்றிவிட முடியாதுதான்.  அதற்கெல்லாம், ஒரு  ‘மனதைரியம்’ வேண்டும். கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு   ‘அது’  ரொம்பவே இருக்கிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.