Skip to main content

வாகனங்களை மறித்து ரகளை செய்த 13 வயது சிறுவன்; போதை மாற்றிய பாதை

Published on 12/11/2022 | Edited on 12/11/2022

 

A 13-year-old boy who blocked the vehicle and ransacked the road; the drug changed the route

 

சென்னை கோயம்பேட்டில் மது போதையில் 13 வயது சிறுவன் பேருந்துகளை மறித்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அண்மைக்காலமாகவே சிறார்கள் மது போதைக்கு அடிமையாவதும், போதை பொருட்டுகளை எளிதில் கையாள்வது போன்ற வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தும். இந்நிலையில், சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் 13 வயது சிறுவன், மற்றொரு சிறுவன் என இரண்டு பேர் மது போதையில் பேருந்து மற்றும் வாகனங்களை நிறுத்தி ரகளையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான காட்சிகள் வைரலாகி வருகிறது.

 

A 13-year-old boy who blocked the vehicle and ransacked the road; the drug changed the route

 

நேற்று இரவு 11 மணிக்கு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனைக் கண்டித்து சிறுவர்களை எச்சரித்த போலீஸாரிடமும் பொதுமக்களிடமும்  2 சிறுவர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்களை தாக்கவும் முயன்றனர். உடனே அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் சிறுவர்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்த முயன்றார். இருப்பினும் சிறுவர்கள் இருவரும் கேட்கவில்லை. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த பொதுமக்களே சிறுவர்களைப் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். போலீஸார் விசாரணையில் சிறுவர்கள் மெரினா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் கோயம்பேடு பகுதிக்கு வந்த சிறுவர்கள் செல்போனை கடையில் சார்ஜ் செய்ய கொடுத்ததாகவும் அப்பொழுது செல்போன் காணாமல் போனதாகக் கூறி ரகளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.