Skip to main content

வாசனுக்கும், அன்புமணிக்கும் அடிக்க போகும் ஜாக்பாட்... அதிர்ச்சியில் அதிமுக... பாஜகவில் அதிரடி மாற்றம்!

Published on 06/11/2019 | Edited on 06/11/2019

மத்திய அமைச்சரவையை மாற்றும் பா.ஜ.க.வின் திட்டம் பற்றி அரசியல் வட்டாரங்களில் விசாரித்த போது, மத்திய அமைச்சரவையை மாற்றியமைப்பது தொடர்பாக  அமித்ஷா மற்றும் ராஜ்நாத்சிங்குடன் போன வாரம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது தமிழகத்தில் இருக்கும் தோழமைக் கட்சிகளான பா.ம.க.வையும், த.மா.கா.வையும் அமைச்சரவையில் இணைத்துக் கொள்வது பற்றியும் விவாதித்துள்ளார். அன்புமணியை அமைச்சராக்கி, பா.ம.க.வை நம் கைப்பிடியிலேயே வைத்துக்கொள்வது நம் எதிர்கால அரசியல் திட்டத்துக்கு உதவும் என்று கூறிய மோடி, த.மா.கா. வாசனையும் நினைவூட்டியிருக்கார். அப்போது அமித்ஷா, அவர் கட்சியை பா.ஜ.க.வோடு இணைக்கும் பட்சத்தில் அவரை அமைச்சராக்குவது பற்றி யோசிக்கலாம் என்று அழுத்தம் கொடுத்துச் சொல்லியிருக்கார். 
 

politics



இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பற்றியும் தீவிர டிஸ்கஷன் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அப்போது அவர் பற்றி எதிர்மறை விமர்சனங்கள் அதிகம் வருவதால் அமைச்சரவையில் இருந்து அவரை கழட்டி  விடலாம் என்று  ஆலோசனை பண்ணியதாக கூறுகின்றனர். அதேசமயம் அவர் ஆதரவாளர்கள், நிர்மலாவின் பதவியைப் பறித்தால், அவரைத் தமிழக பா.ஜ.க. தலைவராக கொண்டு வாருங்கள் என்று வலியுறுத்தியுள்ளனர். ஏற்கனவே தமிழிசை என்ற பெண் தலைவர் அமர்ந்திருந்த அந்த நாற்காலியில் இன்னொரு பெண் தலைவரான நிர்மலா அமர்வது சரியாக இருக்கும் என்று கூறுகின்றனர். தமிழகத்தில் ஜெயலலிதாவுக்குப் பின் கட்சியின் தலைவராக ஒரு பெண்ணை அமரவைத்த பெருமை நம் பா.ஜ.க.வுக்குதான் உண்டு என்று சீனியர் தலைவர்களிடம் எடுத்துச் சொல்லியதாக கூறுகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.