Skip to main content

திருவண்ணாமலை மாவட்டம்: திமுக வேட்பாளர்களும் விவரங்களும்!

Published on 12/03/2021 | Edited on 12/03/2021

 

DMK candidates and details of Thiruvannamalai district constituencies


திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த மாவட்டத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கு சீட் எதுவும் தராமல் 8 தொகுதியிலும் திமுகவே போட்டியிடுகிறது.

 

DMK candidates and details of Thiruvannamalai district constituencies

 

திருவண்ணாமலை – எ.வ.வேலு: இவர் திமுக தெற்கு மா.செ., முன்னாள் அமைச்சர். இந்த தொகுதியில் ஏற்கனவே இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார். அதற்கு முன்பு தண்டராம்பட்டு தொகுதியில் நின்று வெற்றி பெற்றுள்ளார். மூன்றாவது முறையாக திருவண்ணாமலை தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.

 

DMK candidates and details of Thiruvannamalai district constituencies

 

கீழ்பென்னாத்தூர் – கு.பிச்சாண்டி: முன்னாள் அமைச்சரான இவர், திமுக சொத்துப் பாதுகாப்பு குழுவில் உள்ளார். மூன்றாவது முறையாக கீழ்பென்னாத்தூர் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். ஏற்கனவே, இந்த தொகுதியில் ஒருமுறை தோல்வியும், ஒரு முறை வெற்றியும் பெற்றுள்ளார். 2011க்கு முன்பு வரை திருவண்ணாமலை தொகுதியில் நின்று வெற்றி பெற்றுவந்தார்.

 

DMK candidates and details of Thiruvannamalai district constituencies

 

செங்கம் (தனி) – மு.பெ.கிரி: மாவட்ட ஊராட்சி குழுத் தலைவராக இருந்தவர். தனித் தொகுதியான செங்கத்தில் 2016ல் நின்று வெற்றிபெற்றார். இரண்டாவது முறையாக இந்த தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.

 

DMK candidates and details of Thiruvannamalai district constituencies

 

கலசப்பாக்கம் – பெ.சு.தி.சரவணன்: துரிஞ்சாபுரம் ஒ.செவான இவர், முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். இவரின் தந்தை திருவேங்கடம், இதே தொகுதியில் சிலமுறை எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். எம்.ஜி.ராமச்சந்திரன் முதல்வராக இருந்தபோது, சட்டமன்றத்தில் கேள்விகள் எழுப்பி திக்குமுக்காட வைத்தவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

DMK candidates and details of Thiruvannamalai district constituencies

 

போளுர் – கே.வி.சேகரன்: 2016ல் இதே தொகுதியில் நின்று வெற்றிபெற்றவர். இரண்டாவது முறையாக அதேதொகுதியில் நிற்க, மீண்டும் அவருக்கே சீட் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பல சர்ச்சைகளில் சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தியை எதிர்த்துக் களமிறக்கப்பட்டுள்ளார்.

 

DMK candidates and details of Thiruvannamalai district constituencies

 

ஆரணி – அன்பழகன்: ஆரணி கிழக்கு ஒ.செவாக உள்ளார். அக்ராபாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து வருகிறார். முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரனை எதிர்த்து அன்பழகன் களமிறக்கப்பட்டுள்ளார்.

 

DMK candidates and details of Thiruvannamalai district constituencies

 

வந்தவாசி (தனி) – அம்பேத்குமார்: கட்சியின் மாணவரணி மாவட்ட அமைப்பாளராக உள்ளார். 2016ல் இதே வந்தவாசி தொகுதியில் நின்று வெற்றிபெற்றுள்ளார். இரண்டாவது முறையாக, அதே தொகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளார்.

 

செய்யார் – ஜோதி: செய்யார் ஒன்றியக் குழுத் தலைவராக இரண்டு முறை இருந்துள்ளார். கட்சியில் ஒன்றியச் செயலாளராக இருந்து வருகிறார். முதல் முறையாக சட்டமன்றத்தில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார்.


இந்த மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில், அதிமுகவுடன் திமுக 5 தொகுதிகளில் நேரடியாக மோதுகிறது. 2 தொகுதியில் திமுக – பாமக எனவும் ஒரு தொகுதியில் திமுக – பாஜக எனவும் தேர்தல் களம் இருக்கிறது.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.