Skip to main content

பாஜகவிற்கு சிக்கலை ஏற்படுத்திய சம்பவம்... சமாளிக்க முடியாமல் திணறும் பாஜக!

Published on 12/12/2019 | Edited on 12/12/2019

மத்திய பா.ஜ.க. அரசுக்கு வெங்காய விவகாரம் சிக்கலை ஏற்படுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது.  சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை ஏகத்துக்கும் ஏறியது. இதனால் வெங்காயம் காட்சிப் பொருளாக மாறி வருவது, மக்கள் மனதில் நெருப்பை அதிகமாகியுள்ளது. வெங்காயத்தை சீரியசாக  எடுத்துக்காததால், மாநிலங்களில் ஆட்சி மாற்றத்தையே கடந்த காலங்களில் ஏற்படுத்தியிருக்கு என்று சொல்லப்படுகிறது. இது பற்றியெல்லாம் கவலைப்படாத மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெங்காய விலை ஏற்றம் குறித்து நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டபோது, "நான் சாப்பாட்டில் வெங்காயமும் பூண்டும் சேர்த்துக்கிற சமூகத்தில் பிறக்கலை'ன்னு சொல்லி, எல்லாத் தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்பை வாங்கிக்கொண்டார்.   

 

onion



மேலும் எதையும் சமாளிக்கிற சூழ்நிலை தெரியவில்லை என்று மக்களும் கவலையில் இருப்பதாக தெரிகிறது.  அதோடு,  ஜி.எஸ்.டி .வரி வசூலிப்பில் கெடுபிடியைக் காட்டிவரும் மோடி அரசு, அதிலிருந்து மாநிலங்களுக்குத் தரவேண்டிய நிதியை ஒவ்வொரு மாநிலத்திற்கும் செட்டில் பண்ணாமல் கோடிக்கணக்கில் நிலுவையில் வைத்து  இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது. தமிழகத்துக்கு கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் ரூபாய் 7,605 கோடியைத் தரவில்லை என்கின்றனர். இதுபோல் மோடி அரசால் நிதி தராமல் இழுத்தடிக்கப்பட்டு வரும் மாநிலங்கள், டிசம்பருக்குள் அவற்றை செட்டில் செய்யாவிட்டால், மோடி அரசுக்கு எதிராக உச்ச நீதின்றத்தில் வழக்குத் தொடுக்க அணி திரண்டுள்ளனர். இந்த நிலையில், ஜி.எஸ்.டி. கவுன்சிலின் கூட்டம் இதுகுறித்து விவாதிக்க, 18-ந் தேதி கூடுகிறது. 
 

 

bjp



இந்தச் சூழலில், நிலைமையை சமாளிக்க, ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என்று மோடிக்கு இவர்கள் அறிக்கை கொடுத்துள்ளனர். இதில் 5 சதவீத வரிகளுக்கு உட்பட்ட பொருட்களின் வரியை 12 சதவீதத்திற்கும், 12 சதவீத வரிகளுக்கு உட்பட்ட பொருட்களின் வரியை 18 சதவீதத்திற்கும் மாற்றினால்தான் சமாளிக்க முடியும் என தெரிவித்துள்ளனர் என்கின்றனர். இதன் அடிப்படையில், ஜி.எஸ்.டி. வரி உயர்த்தப்பட இருக்கிறது என்ற தகவல் வெளியே கசிந்ததால், இப்போதே மோடி அரசுக்கு எதிரான கண்டனக் குரல்கள் எழத் தொடங்கிவிட்டன. இதை காங்கிரஸ் ப.சி. உள்ளிட்ட எதிர்க்கட்சிப் பிரமுகர்கள் கையில் எடுக்கத் தொடங்கி விட்டதாக சொல்கின்றனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் மோடி ஊழல் பள்ளியே நடத்தி வருகிறார்” - ராகுல் காந்தி தாக்கு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rahul Gandhi says Prime Minister Modi is running a school of corruption

தேர்தல் பத்திர விவகாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் மோடி ஊழல் பள்ளி நடத்தி வருவதாகவும் குறிப்பிட்ட ராகுல் காந்தி இது குறித்து அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் 'ஊழல் பள்ளி' நடத்துகிறார். அங்கு ‘முழு ஊழல் அறிவியல்’ என்ற பாடத்தின் கீழ், அவரே  ‘நிதி வணிகம்’ உட்பட ஒவ்வொரு அத்தியாயத்தையும் விரிவாகக் கற்பிக்கிறார்.

சோதனை நடத்தி நன்கொடை வசூலிப்பது எப்படி?, நன்கொடைகளைப் பெற்ற பிறகு ஒப்பந்தங்கள் எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன?, ஊழல்வாதிகளை சுத்தப்படுத்தும் வாஷிங் மெஷின் எப்படி வேலை செய்கிறது?, ஏஜென்சிகளை மீட்பு முகவர்களாக ஆக்கி ‘ஜாமீன் மற்றும் ஜெயில்’ விளையாட்டு எப்படி விளையாடுவது? என்பது குறித்து அவரே விரிவாக பாடம் கற்பிக்கிறார்.

ஊழல் குகையாக மாறியுள்ள பா.ஜ.க தலைவர்களுக்கு, இந்த பாடம் கட்டாயமாகியுள்ளது. இந்தியா கூட்டணி அரசு இந்த தேர்தலில் வெற்று பெற்று ஆட்சி அமைந்ததும், மோடியின் இந்த ஊழல் பள்ளியை பூட்டி இந்த படிப்பை நிரந்தரமாக மூடும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.