Skip to main content

சுவிஸ் நீதிமன்றம் அதிரடி உத்தரவு... வெளியாகிறது இந்தியர்களின் கருப்பு பண பட்டியல்...

Published on 05/02/2019 | Edited on 05/02/2019

 

ghxffxg

 

இந்தியர்களில் கருப்பு பணம் வைத்திருப்பவர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என சுவிட்சர்லாந்தின் லோசானில் உள்ள நீதிமன்றம் எச்எஸ்பிசி வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து எச்எஸ்பிசி வங்கி சுவிஸ் கிளையில் பணம் வைத்திருக்கும் இந்தியர்களின் விபரத்தை வழங்க சுவிட்சர்லாந்து அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 2006-07 ஆம் ஆண்டில் 1195 இந்தியர்களின் 24,420 கோடி ரூபாய் சுவிஸ் வங்கிகளில் வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதில் 276 பேரின் கணக்குகளில் மட்டும் ஒரு மில்லியன் டாலருக்கும் அதிகமாக பணம் பதுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் ஏற்கனவே கடந்த 2011 ஆம் ஆண்டு சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருந்த 628 இந்தியர்களின் பட்டியலை பிரான்ஸ் அதிகாரிகள் வெளியிட்டனர். இதனை தொடர்ந்து தற்போது நீதிமன்ற உத்தரவின் காரணமாக கருப்பு பணம் வைத்திருப்பவர்களின் விபரங்களை வெளியிட அந்நாட்டு அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்