Published on 05/09/2021 | Edited on 05/09/2021
இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கேரளாவில் மட்டும் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக அம்மாநிலத்தில் தினசரி கரோனா பாதிப்பு 30 ஆயிரத்தைக் கடந்து வந்தநிலையில் நேற்று 29,682 பேருக்கு கரோனா உறுதியானது.
இந்தநிலையில் கடந்த 24 மணிநேரத்தில் கேரளாவில் 26,701 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. அதேநேரத்தில் நேற்று முன்தினம் 17.91% ஆகக் இருந்த கரோனா உறுதியாகும் சதவீதம், நேற்று 17.54% ஆக குறைந்துள்ளது. 28,900 பேர் குணமடைந்த நிலையில் ஒரே நாளில் 74 பேர் உயிரிழந்துள்ளனர்.