Skip to main content

பட்ஜெட் எதிரொலி: பங்குச்சந்தைகள் கிடுகிடு உயர்வு... ஒரே நாளில் 5 லட்சம் கோடி ஜாக்பாட்; முதலீட்டாளர்கள் ஹேப்பி அண்ணாச்சி!!

Published on 02/02/2021 | Edited on 02/02/2021

 

Sharemarket trend on Monday

 

பட்ஜெட்டில் பொதுத்துறை வங்கிளுக்கு மறுமூலதனம், உள்கட்டமைப்பு திட்டங்கள், கோவிட் தடுப்பூசி கண்டுபிடிப்பு உள்ளிட்ட அறிவிப்புகளால் இந்திய பங்குச்சந்தைகள் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் குறியீட்டெண்கள் 'கிடுகிடு' என உயர்ந்தன. திங்களன்று (பிப்.1) ஒரே நாளில், குறிப்பிட்ட பங்குகளின் மதிப்பு 5.20 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

அமெரிக்க பங்குச்சந்தை, ஆசிய சந்தைகளில் ஏற்பட்ட சரிவு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் லாபத்தை எதிர்பார்த்து அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஜனவரி 21ஆம் தேதி முதல் தொடர்ந்து 6 செஷன்களில் இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்தன. இதனால் கடந்த வாரம் கிட்டத்தட்ட 11 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டது. கரோனா உச்சத்தில் இருந்தபோது கூட இந்த அளவுக்குப் பங்குகள் மதிப்பு சரிந்ததில்லை. 

 

இந்நிலையில், கடந்த வெள்ளியன்று பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. அதிலும், பங்குச்சந்தைக்கு சாதகமான அம்சங்கள் இல்லாததால், கடந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாளும் சரிவுடனேயே முடிந்தது.

 

இந்நிலையில், மத்திய பட்ஜெட் அறிக்கை நாடாளுமன்றத்தில் பிப்.1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில், பொதுத்துறை வங்கிகளுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் மறுமூலதனம் நிதியுதவி, கரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிப்பு, ஜவுளிப்பூங்கா, அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் சாலை திட்டங்கள் உள்ளிட்ட அறிவிப்புகள் இந்திய பங்குச்சந்தைகளில் சாதகமாக நம்பிக்கையை ஏற்படுத்தின.

 

இதனால் வர்த்தகம் தொடங்கிய முதலே தேசிய பங்குசந்தை (நிஃப்டி), மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தன. 

 

கடந்த வெள்ளியன்று (ஜன. 20) சென்செக்ஸ் குறியீட்டெண் 46,285 புள்ளிகளில் முடிவுற்ற நிலையில், பட்ஜெட் தாக்கல் நாளான நேற்று (01 பிப்.) 46,617.95 புள்ளிகளில் வர்த்தகத்தை தொடங்கியது. ஒரு கட்டத்தில் 48,764 புள்ளிகள் வரை உயர்ந்த சென்செக்ஸ் இறுதியில் 48,600.61 புள்ளிகளில் முடிவடைந்தது. குறைந்தபட்சமாக 46,433 புள்ளிகள் வரை சென்றது. 

 

ஒரே நாளில், சென்செக்ஸ் 23,14.84 புள்ளிகள் வரை உயர்ந்தது. அதாவது சென்செக்ஸ் ஒரே நாளில் 5 சதவீதம் வரை உயர்ந்தது. இதன்மூலம் சென்செக்ஸில் 5.20 லட்சம் கோடி ரூபாய் வரை பங்குகளின் மதிப்பு உயர்ந்தது. 

 

மும்பை பங்குச்சந்தையில் இண்டஸ் இந்த் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் பின்சர்வ், எஸ்பிஐ வங்கி, எல் அண்டு டி, ஹெச்டிஎப்சி, அல்ட்ரா சிமெண்ட், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஐடிசி, ஹெச்டிஎப்சி வங்கி, எம் அண்டு எம், டைட்டான், கோட்டக் வங்கி, பார்தி ஏர்டெல், என்டிபிசி, ரிலையன்ஸ், ஓஎன்ஜிசி ஆகிய நிறுவனப் பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன.

 

அதேநேரம், ஹிந்துஸ்தான் லீவர், டெக்மஹிந்திரா, டாக்டர் ரெட்டி பங்குகள் வீழ்ச்சி அடைந்தன.

 

தேசிய பங்குச்சந்தையான நிஃப்டியும் கிடுகிடுவென உயர்ந்தது. நிஃப்டி குறியீட்டெண் 13,758 புள்ளிகளில் தொடங்கியது. அதிகபட்சமாக 14,336 புள்ளிகள் வரை சென்று, வர்த்தகத்தின் இறுதியில் 646.60 புள்ளிகள் ஏற்றத்துடன் 14,281.20 புள்ளிகளில் முடிவுற்றது. இது, 4.74 சதவீதம் ஏற்றமாகும். 

 

நிஃப்டியில் பட்டியலிடப்பட்டுள்ள 50 நிறுவனங்களில் 45 நிறுவன பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன. 5 நிறுவன பங்குகள் சரிவடைந்தன. பட்ஜெட்டின் தாக்கம் நடப்பு வாரம் முழுவதும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரிவிலிருந்து இந்திய பங்குச்சந்தைகள் மீண்டதால் முதலீட்டாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

குற்றச்சாட்டுகளை அடுக்கிய ராகுல் காந்தி; பியூஷ் கோயல் விளக்கம்!

Published on 06/06/2024 | Edited on 06/06/2024
Rahul Gandhi leveled the allegations Piyush Goyal explanation

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று (06.06.2024) மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “முதல்முறையாகத் தேர்தல் நேரத்தில் பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர் ஆகியோர் பங்குச் சந்தை குறித்து கருத்து தெரிவித்ததைக் குறிப்பிட்டோம். பங்குச்சந்தை அசுர வேகத்தில் உயர்ந்து வருகிறது என்று பிரதமர் கூறினார். ஜூன் 4 ஆம் தேதி பங்குச் சந்தை உயரும் என்றும், நீங்கள் அனைவரும் முதலீடு செய்ய வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் கூறினார், இதேபோல் நிதியமைச்சர் கூறினார். பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் ஐந்து கோடி குடும்பங்களுக்குப் பிரதமரும் மத்திய உள்துறை அமைச்சரும் குறிப்பிட்ட முதலீட்டு ஆலோசனையை வழங்கியது ஏன்?.

முதலீட்டு ஆலோசனை வழங்குவது அவர்களின் வேலையா? பங்குகளைக் கையாள்வதற்காக செபியின் (SEBI) விசாரணையின் கீழ் உள்ள அதே வணிகக் குழுவிற்குச் சொந்தமான ஒரே ஊடகத்திற்கு இரண்டு நேர்காணல்களும் ஏன் கொடுக்கப்பட்டன?. தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாகவே முதலீடு செய்து ஐந்து கோடி சம்பளத்தில் பெரும் லாபம் ஈட்டிய பாஜகவுக்கும், போலி எக்ஸிட் போஸ்டர்களுக்கும், சந்தேகத்துக்கு இடமான வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் என்ன தொடர்பு?. இதற்கு நாடாளுமன்ற கூட்டுக் குழு (JPC - Joint Parliamentary Committee) விசாரணையை நாங்கள் கோருகிறோம். இது ஒரு மோசடி என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்திய சில்லறை முதலீட்டாளர்களின் விலையில் யாரோ ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை சம்பாதித்துள்ளனர். பிரதமரும் மத்திய உள்துறை அமைச்சரும் பங்குகளை வாங்குவதற்கான அறிகுறியைக் கொடுத்துள்ளனர். எனவே இதை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையை இன்று கோருகிறோம். 

Rahul Gandhi leveled the allegations Piyush Goyal explanation

இது அதானி பிரச்சினையை விட பரந்த பிரச்சினை. இது அதானி பிரச்சினையுடன் இணைக்கப்பட்டுள்ளது. யார் சில்லறை முதலீட்டாளர்களுக்கு பங்குகளை வாங்க அறிவுறுத்துகிறார்கள். இதற்கு முன் இப்படி நடந்ததில்லை. பங்குச் சந்தை குறித்து பிரதமர் இதற்கு முன் கருத்து தெரிவித்ததில்லை. பங்குச் சந்தை ஏற்றம் அடையப் போகிறது என்று ஒன்றன் பின் ஒன்றாக பிரதமர் மிகவும் சுவாரஸ்யமாகவும், பலமுறை கருத்துக் கூறுவது இதுவே முதல் முறை. அதே சமயம், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் (exit poll - எக்ஸிட் போல்கள்) தவறானவை என்ற தகவலும் அவரிடம் உள்ளது ” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த குற்றச்சாட்டுகளுகுப் பதிலளிக்கும் வகையில் பாஜகவின் மூத்த தலைவர் பியூஷ் கோயல் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து ராகுல் காந்தி இன்னும் வெளியே வரவில்லை. தற்போது, ​​சந்தை முதலீட்டாளர்களைத் தவறாக வழிநடத்தச் சதி செய்கிறார். முதலீட்டாளர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் ராகுல் காந்தி பேசியுள்ளார். பங்குச் சந்தை தொடர்பான ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை. 

Rahul Gandhi leveled the allegations Piyush Goyal explanation

இந்தியா இன்று ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. மோடி அரசாங்கத்தின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் முதன்முறையாக நமது சந்தை மதிப்பு 5 டிரில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது. இன்றைய சூழலில் இந்தியாவின் பங்குச் சந்தை உலகின் முதல் 5 பொருளாதாரங்களின் சந்தை மூலதனத்தில் நுழைந்துள்ளது. மோடி அரசாங்கத்தின் கீழ் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பொதுத்துறை நிறுவனங்களின் சந்தை மூலதனம் 4 மடங்கு அதிகரித்துள்ளது என்பதை நாம் அறிவோம். 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசு ஆட்சியில் இருந்த போது, ​​அப்போது இந்தியாவின் சந்தை மதிப்பு ரூ.67 லட்சம் கோடியாக இருந்தது. இன்று சந்தை மதிப்பு ரூ. 415 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

ஒரே ட்வீட்... உலக பேமஸ் ஆன தாத்தா

Published on 28/09/2023 | Edited on 28/09/2023

 

 A single tweet... a world famous grandfather

 

ட்விட்டரில் ராஜீவ் மேத்தா என்பவர் வெளியிட்ட பதிவு ஆச்சரியத்தை ஏற்படுத்த ஒரே நாளில் உலக பேமஸ் ஆகியுள்ளார் ஒரு முதியவர்.

 

ராஜீவ் மேத்தா என்பவர் வெளியிட்ட ட்விட்டர் வீடியோ பதிவில் கால் சட்டையுடன் நிற்கும் முதியவர் ஒருவரிடம் பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளார். அதில் பேசும் அந்த முதியவர் தனக்கு எல்.என்.டியில் 80 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை வைத்துள்ளேன். 21 கோடி ரூபாய் மதிப்புள்ள அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவன பங்குகள்; ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய கர்நாடக வங்கியின் பங்குகளை வைத்திருப்பதாகவும், இருந்தாலும் தான் எளிய வாழ்க்கை தான் வாழ்ந்து வருவதாய் அசால்ட்டாக புட்டு புட்டு வைத்தார். ஆனால், இது உண்மையா பொய்யா என தெரியாமல் வீடியோவை பார்ப்பவர்கள் குழம்பி வருகின்றனர். சிலர் அந்த முதியவர் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை தான் வைத்துள்ளார். ஆனால் மாற்றி சொல்கிறார் என்றும் தெரிவித்து வருகின்றனர். எப்படியோ ஒரே நாளில் பேமஸ் ஆகிவிட்டார் அந்த தாத்தா.