தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவுபெற்ற நிலையில் நாளை மறுநாள் வாக்குப்பதிவுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது தமிழகம்.
5 மாநிலங்களில் நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை மேலும் குறையும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். எரிபொருள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்க தொடங்கி உள்ளதாக தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், இதனால் பெட்ரோல், டீசல், சிலிண்டர் கேஸ் விலை வரும் நாட்களில் மேலும் குறையும் என தெரிவித்துள்ளார்.