Skip to main content

27ஆண்டுகளுக்குப் பிறகு குடியரசுத் தின விழாவிற்கு வருகை தரும் பிரதமர்!

Published on 15/12/2020 | Edited on 15/12/2020

 

borris johnson

 

இந்தியாவின், 71 -ஆவது குடியரசுத் தின விழா வரும் ஜனவரி 26 ஆம் நாள் கொண்டாடப்பட இருக்கிறது. இந்தியாவின் ஒவ்வொரு குடியரசுத் தின விழாவிலும், உலக நாடுகளின் தலைவர்கள், சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்பர்.


இந்தநிலையில், கரோனா தொற்று பரவல் காரணமாக, வருகிற குடியரசுத் தின விழாவில், வெளிநாட்டுத் தலைவர்கள் பங்கேற்பார்களா எனச் சந்தேகம் எழுந்தது. தற்போது அந்தச் சந்தேகம் தீர்ந்துள்ளது.

 

இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன், வருகின்ற குடியரசுத் தின விழாவில் பங்கேற்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் இதனை இன்று அறிவித்துள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத்துறை பிரதிநிதிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர், ஜெய் சங்கர் இதனை அறிவித்துள்ளார்.


இந்தியாவின் குடியரசுத் தின விழாவில், 27ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து பிரதமர் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்