Skip to main content

மலையாள தொலைக்காட்சிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த 48 மணி நேர தடை நீக்கம்!

Published on 07/03/2020 | Edited on 07/03/2020

கேரளாவில் இரண்டு தொலைக்காட்சி செய்தி சேனல்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த தடை தற்போது விலக்கப்பட்டுள்ளது. தில்லியில் கடந்த மாதம் 25ம் தேதி நடைபெற்ற வன்முறை குறித்தான செய்திகளை ஒருசார்பாக ஒளிப்பரப்பியதாக கூறி மலையாள செய்தி தொலைக்காட்சிகளான ஏசியா நெட் மற்றும் மீடியா ஒன் சேனல்களின் ஒளிபரப்புக்கு இரண்டு நாட்கள் தடைவிதிப்பதாக மத்திய தகவல் ஒளிப்பரப்பு துறை நேற்று அறிவித்திருந்தது. அதன்படி வெள்ளி இரவு 7.30 மணியில் இருந்து அடுத்த 48 மணிநேரத்துக்கு இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் அறிவிப்பு வெளியானது.



இந்நிலையில் இந்த இரண்டு தொலைக்காட்சிகளுக்கும் விதிக்கப்பட்ட தடை கருத்து சுகந்திரத்துக்கு எதிரானது என்று பல்வேறு தரப்பில் இருந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனால் அந்த குறிப்பிட்ட செய்தி சேனல்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தொலைக்காட்சிகளின் சுதந்திரத்தில் தலையிட்டுள்ளதை அனைவரும் வெளிப்படையாக அறியலாம் என்று அம்மாநிலத்தை சேர்ந்தவர்கள் இணையதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மிமிக்ரி கலைஞர் கோவை குணா காலமானார்

Published on 21/03/2023 | Edited on 21/03/2023

 

 TV comedy actor Kovai Guna passed away

 

'அசத்தப் போவது யாரு' உள்ளிட்ட பல  தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகளில் மிமிக்ரி மூலம் பிரபலமானவர் கோவை குணா. இவர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். கோவையில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது மறைவுக்கு தொலைக்காட்சி பிரபலங்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

Next Story

தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு 40 இன்ச் எல்.இ.டி டி.வி... மாவட்ட நிர்வாகம் முடிவு!

Published on 08/10/2021 | Edited on 09/10/2021

 

 40-inch LED TV for corona vaccinators ... District administration decides!

 

கரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்துவதற்காக தமிழ்நாடு முழுவதும் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் அனைத்து அரசு துறைகளையும் இணைத்து தடுப்பூசி விழிப்புணர்வும், தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான அவசியத்தையும் வலியுறுத்தி தடுப்பூசி போடப்படுகின்றன. வீடு வீடாக சென்றும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

 

வடக்கு மற்றும் தென்னாற்காடு மாவட்டங்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் பின்தங்கியே உள்ளன. தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கென பரிசுகள், பொருட்கள் எல்லாம் வழங்கப்பட்டுவருகின்றன. அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி நடைபெறும் ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாமில் ஊசிபோட்டுக்கொள்ளும் நபர்களில் மூன்று நபர்களை தேர்வு செய்து அவர்களுக்கு 40 இன்ச் எல்.இ.டி கலர் டிவி வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக மூன்று டிவிகளும் நன்கொடையாக வாங்கப்பட்டுள்ளன.

 

இதுக்குறித்து மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வா கூறும்போது, ''மெகா தடுப்பூசி முகாம்மில் தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களை குலுக்கல் முறையில் மூன்று  நபர்களை தேர்வு செய்து அவர்களுக்கு இந்த டிவி வழங்கப்படும்'' என்றார்.