Skip to main content

உ.பியில் சட்டத்தின் ஆட்சி; கரோனாவை கையாண்ட விதம் வியப்பானது - பிரதமர் மோடி பேச்சு!

Published on 15/07/2021 | Edited on 15/07/2021

 

PM MODI

 

உத்தரபிரதேச மாநிலத்திற்கு இன்று பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தனது சொந்த தொகுதியான வாரணாசியில் சில வளர்ச்சி திட்டங்களையே தொடங்கி வைத்தார். அதன்பிறகு அவர் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, கரோனா இரண்டாவது அலையை உத்தரபிரதேச அரசு கையாண்ட விதம் இணையற்றது என தெரிவித்தார்.

 

தொடர்ந்து பிரதமர் மோடி, கரோனாவை கையாண்டதில் உத்தரப்பிரதேச அரசின் செயல்பாடுகள் வியப்பானதாக இருந்தது. வாரணாசி மட்டுமின்றி மொத்த மாநிலமும் அபாயகரமான மாறுதலுக்குள்ளாகும் வைரஸை முழு பலத்துடன் எதிர்த்தது" என தெரிவித்ததோடு, வாரணாசியில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட கரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் இந்தியாவிலேயே அதிக கரோனா பரிசோதனைகள் செய்த மாநிலமாகவும், அதிக தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட மாநிலமாகவும் உத்தரபிரதேசம் இருப்பதை பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.

 

பிரதமர் தனது உரையின் நடுவே உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பாராட்டினார். "யோகி ஜி கடுமையாக உழைத்து வருகிறார். அவர் தொடர்ந்து இங்கு வருவதை காசி மக்கள் பார்த்திருக்கிறார்கள். அவர் வளர்ச்சி திட்டங்களை ஆய்வு செய்வதோடு, வளர்ச்சி பணிகளை வேகப்படுத்த தனது சக்தியை செலவு செய்கிறார். இதேபோல் ஒட்டுமொத்த மாநிலத்திற்காகவும் பாடுபடுகிறார்" என பிரதமர் மோடி தெரிவித்தார்.

 

மேலும் பிரதமர் மோடி., "உத்தரப்பிரதேசத்தில் இன்று சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. ஒருகாலத்தில் கட்டுப்பாட்டை மீறி சென்ற மாஃபியா ராஜ்ஜியமும், தீவிரவாதமும் இன்று சட்டத்தின் பிடியில் இருக்கிறது. பெண்கள் மீது கண்களை உயர்த்தும் குற்றவாளிகள், சட்டத்திலிருந்து தாங்கள் தப்பிக்க முடியாது என்பதை அறிவார்கள்" எனவும் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

காதலன் முகத்தில் ஆசிட் அடித்த காதலி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Girlfriend threw toilet cleaning liquid on her boyfriend face

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் சிகிடாவுனி கிராமத்தை சேர்ந்தவர்  ராகேஷ் பிந்த்(26). இவரும் அதைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராகேஷ் பிந்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது  கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தோடு(ஆசிட்)  நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு வந்த லட்சுமி தனது கையில் வைத்திருந்த திரவத்தை ராகேஷ் பிந்து முகத்தில் வீசினார். இதில் அவர் முகம் மற்றும் உடலில் உள்ள சில இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனிடையே அங்கிருந்தவர்கள் லட்சுமியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தன்னைக் காதலித்து விட்டு வேறொரு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்ததால் திரவத்தை வீசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லட்சுமியைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.