Skip to main content

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கு தலைமை தேர்தல் ஆணையம் கடிதம்!

Published on 19/12/2020 | Edited on 19/12/2020

 

election commission of india has wrotes the letter for five state chief secretaries


அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழகம், கேரளா, அசாம், புதுச்சேரி, மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. 

 

அந்த கடிதத்தில், 'ஆறு மாதங்களில் ஓய்வு பெற உள்ள எந்த ஒரு அதிகாரிக்கும் தேர்தல் பணி வழங்கக்கூடாது. தேர்தல் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் அவர்களது சொந்த மாவட்டங்களில் பணியாற்றக் கூடாது. தேர்தல் அதிகாரிகள் சொந்த மாவட்டங்களில் நியமிக்கப்படவில்லை என்பதை உறுதிச் செய்ய வேண்டும். முந்தைய தேர்தல்களில் ஒழுங்கீன செயல்களில் சிக்கிய அதிகாரிகளைத் தேர்தல் பணிகளில் நியமிக்க வேண்டாம். 

election commission of india has wrotes the letter for five state chief secretaries

கடந்த 2019- ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுடன் ஒடிஷா உள்ளிட்ட சில மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அப்பொழுது அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிட மாற்றம் ஆகியவற்றில் என்னென்ன மாதிரியான அறிவுரைகள் வழங்கப்பட்டதோ, அந்த நடைமுறைகள் வரக்கூடிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலுக்கும் பொருந்தும்' என தெரிவிக்கப்பட்டது. 

 

குறிப்பாக தேர்தல் ஆணையத்தின் கடிதத்தில் தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட ஐந்து மாநில அரசுகளின் பதவி காலம் நிறைவு பெறும் தேதியையும் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் தற்போது ஆட்சி செய்து வரும் அ.தி.மு.க. அரசின் பதவிக்காலம் அடுத்த வருடம் மே மாதம் 24-ஆம் தேதியுடன் (24/05/2020) முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் முழு மூச்சாக இறங்கியுள்ளது என்பதற்கு இந்த கடிதம் ஓர் உதாரணம். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.