Skip to main content

பட்டாசால் நிகழ்ந்த கோர விபத்து... நடுசாலையில் உடல் சிதறி தந்தை, மகன் உயிரிழப்பு!

Published on 04/11/2021 | Edited on 04/11/2021

 

cracker incident in puducherry

 

புதுச்சேரி அரியாங்குப்பம் காக்காயன்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கலைநேசன்(32). இவர் தமிழகப் பகுதியான கூனிமேட்டில் உள்ள தனது மனைவி ரூபனாவை பார்ப்பதற்காகச் சென்றுவிட்டு தனது 7 வயது மகன் பிரதீசுடன் தீபாவளி கொண்டாட இரண்டு சக்கர வாகனத்தில் இரண்டு சாக்கு மூட்டைகளில் பட்டாசுகளை ஏற்றிக்கொண்டு புதுச்சேரி நோக்கி வந்தார்.

 

அப்போது புதுச்சேரி அருகேயுள்ள விழுப்புரம் மாவட்டமான கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரைச் சாலை சந்திப்பில் சென்று கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக, இரண்டு சக்கர வாகனத்திலிருந்த நாட்டுப் பட்டாசுகள் திடீரென வெடித்ததில் சம்பவ இடத்திலே தந்தையும், மகனும் உடல் சிதறி உயிரிழந்தனர். அருகே இருந்த வாகனம் மற்றும் வீட்டின் கூரைகள் சேதமடைந்து அந்த சாலை முழுவதும் போர்க்களம் போல் காட்சியளித்தது.

 

இந்த வெடிவிபத்து சம்பவம் நடைபெறும்போது அந்த சாலையில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த ஷர்புதீன் மற்றும் கணேசன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர் அதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக அவர்களை ஜிப்மர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்த சம்பவம் இரு மாநில எல்லைகளில் நடந்ததால் இரு மாநில போலீசாரும் சம்பவ இடத்திற்குச் சென்று வெடி விபத்து குறித்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.ஸ்ரீநாதா வந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

 

 

சார்ந்த செய்திகள்