Skip to main content

அடையாளம் தெரியாத 10,000 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை...

Published on 28/12/2019 | Edited on 28/12/2019

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடிய அடையாளம் தெரியாத 10,000 மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

case filed on 10000 aligarh university students

 

 

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டிச.15 ஆம் தேதி டெல்லியின் ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம் மற்றும் அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் பெருமளவில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மாணவர்கள் மீது போலீசார் கடுமையான ஒடுக்குமுறையை மேற்கொண்டனர். இதற்கு நாடு முழுவதிலுமிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், தற்போது இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக 10,000 அடையாளம் தெரியாத அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்