Published on 19/01/2019 | Edited on 21/01/2019

அன்னா ஹசாரே உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2013ஆம் ஆண்டு லோக்பால் மற்றும் லோக்காயுக்தா மசோதா உருவாக்கப்பட்டது. பின்னர் 2014 பாஜக ஆட்சிக்கு வந்தபோது ஏதேனும் நடக்கும் என்று நம்பினோம். ஆனால், அவர்கள் ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் ஆகியும் எதுவும் நடக்கவில்லை. ஆகையால் நான் எனது ரிலிகன் சித்தி கிராமத்தில் வருகின்ற ஜனவரி 30ஆம் தேதி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்க இருக்கிறேன் என்று அன்னா ஹசாரே கூறியுள்ளார்.