Skip to main content

ஒரே IMEI எண்ணில் 13,000 போன்கள்!!! போலீஸாரை அதிரவைத்த மோசடி...

Published on 05/06/2020 | Edited on 05/06/2020

 

13,000 vivo mobiles runs with same imei number in india


ஒரே IMEI எண்ணில் இந்தியா முழுவதும் 13,000 செல்போன்கள் பயன்பாட்டில் இருப்பதை உத்தரப்பிரதேச மாநில போலீஸார் கண்டறிந்துள்ளனர்.  


உலகம் முழுவதும் தயாரிக்கும் அனைத்து செல்போன்களுக்கும், 15 இலக்கங்களைக் கொண்ட தனித்துவமான IMEI எண்கள் வழங்கப்படும். பொதுவாக எதாவது குற்றச்செயல்கள் நடைபெறும் பொழுதோ அல்லது செல்போன் காணாமல்போகும் பொழுதோ இந்த IMEI எண்ணைக் கொண்டு போலீஸார் விசாரணை மேற்கொள்வார்கள். செல்போன்களின் மிக முக்கிய பாதுகாப்பு காரணியாகக் கருதப்படும் இந்த IMEI எண்ணை வைத்தே மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதை போலீஸார் கண்டறிந்துள்ளனர். 

 

 


உத்தரப்பிரதேசத்தின் மீரட் நகரின் காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவர் புதிதாக VIVO செல்போன் ஒன்றை வாங்கியுள்ளார். அது பழுதடைந்து விடவே, அதனைச் சரிசெய்ய கடையில் கொடுத்துள்ளார். ஆனால் அதனை சரிசெய்ய முடியாததால், அவரது போன் மாற்றித்தரப்பட்டுள்ளது. அதனை பெற்ற அந்த காவலர் மொபைலில் உள்ள IMEI எண்ணும் பெட்டியில் அச்சிடப்பட்டுள்ள IMEI எண்ணும் வெவ்வேறாக இருப்பதை கண்டுள்ளார்.

இதனையடுத்து உ.பி. காவல்துறையின் சைபர் க்ரைம் பிரிவினரிடம் அந்த போனைக் கொடுத்துள்ளார். அவர்கள் அதன் IMEI எண்ணை சோதித்தபோது அதே IMEI எண் இந்தியாவில் 13,000 கைப்பேசிகளுக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அனைத்து செல்போன்களுக்கும் தனிப்பட்ட IMEI எண்களை கொடுக்கவேண்டும் என்பதே சர்வதேச விதிமுறை ஆகும். ஆனால், சட்டவிரோதமாக இவ்வாறு ஆயிரக்கணக்கான மொபைல்களுக்கு ஒரே எண் கொடுக்கப்பட்டுள்ளது போலீஸாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
 

nakkheeran app



இந்த IMEI எண்கள் கொண்ட தொலைபேசி மூலம் ஏதேனும் சட்டவிரோத செயல்களுக்கான திட்டம் தீட்டப்பட்டால், அதனைக் கண்டறிவது, அதுகுறித்து விசாரிப்பது முடியாத காரியமாகிவிடும் என்கின்றனர் சைபர் க்ரைம் போலீஸார். மேலும், இந்த 13,000 செல்போன்கள் ஒரே நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுத் தவறுதலாக அனைத்திற்கும் ஒரே IMEI எண் அளிக்கப்பட்டிருக்கலாம், அல்லது திருடப்பட்ட கைப்பேசிகளை விற்பவர்கள் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக இவ்வாறு எண்ணை மாற்றியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதனையடுத்து Vivo மொபைல் போன் உற்பத்தி நிறுவனம் மற்றும் அதன் சேவை மையம் மீது தற்போது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விடைத்தாளில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ எழுதிய மாணவர்கள்; ஆசிரியர்களின் செயலால் அதிரடி நடவடிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Action by teachers on Students wrote 'Jai Sri Ram' in the answer sheet

உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்பூர் பகுதியில் வீர் பகதூர் சிங் புர்வன்சால் பல்கலைக்கழகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பல்கலைக்கழத்தில் பி-பார்ம் பயின்ற முன்னாள் மாணவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, அவர்கள் எழுதிய தேர்வில் அவர்களை தேர்ச்சி பெற வைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 

இது தொடர்பான புகாரை, பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், பல்கலைக்கழக துணைவேந்தரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், முன்னாள் மாணவர்கள் முதலாமாண்டு தேர்வில் எழுதிய விடைத்தாள்களின் நகலை எடுத்து சரி பார்த்துள்ளார். அதில், ஜெய் ஸ்ரீ ராம் என்றும், ஜெய் ஹனுமான் என்றும், கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மா என்ற வார்த்தைகளை மட்டும் எழுதி விடைத்தாள்களை நிரப்பியுள்ளனர். அந்த விடைத்தாள்களுக்கு 56% மதிப்பெண்களை ஆசிரியர்கள் மூலம் பெற்றுள்ளனர்.

இதில் அதிர்ச்சியடைந்த மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், இந்த விடைத்தாள்களை முறைப்படி மீண்டும் திருத்த சொன்ன போது, அதில் அனைவருக்கும் பூஜ்ஜியம் மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இதனையடுத்து, விடைத்தாள்களின் நகலையும், முறைப்படி திருத்தப்பட்ட விடைத்தாள்களையும் எடுத்து பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அனுப்பி இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

அதன் அடிப்படையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டதில், இந்த முறைகேட்டில் 2 ஆசிரியர்களுக்கு சம்பந்தம் இருப்பதாக தெரியவந்தது. அதன் பேரில், மாணவர்களிடம் பணத்தைப் பெற்று கொண்டு அவர்களை தேர்ச்சி பெற வைத்த அந்த 2 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. மேலும், இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான், கிரிக்கெட் வீரர்கள் பெயரை மட்டுமே எழுதி வைத்த மாணவர்களை தேர்ச்சி பெற வைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

காதலன் முகத்தில் ஆசிட் அடித்த காதலி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Girlfriend threw toilet cleaning liquid on her boyfriend face

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் சிகிடாவுனி கிராமத்தை சேர்ந்தவர்  ராகேஷ் பிந்த்(26). இவரும் அதைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராகேஷ் பிந்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது  கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தோடு(ஆசிட்)  நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு வந்த லட்சுமி தனது கையில் வைத்திருந்த திரவத்தை ராகேஷ் பிந்து முகத்தில் வீசினார். இதில் அவர் முகம் மற்றும் உடலில் உள்ள சில இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனிடையே அங்கிருந்தவர்கள் லட்சுமியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தன்னைக் காதலித்து விட்டு வேறொரு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்ததால் திரவத்தை வீசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லட்சுமியைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.