Skip to main content

பொதுமக்கள் நம்புவார்களா? தங்கத் தமிழ்ச்செல்வன் பதில்

Published on 10/05/2019 | Edited on 10/05/2019

 

அமமுக கொள்கைப்பரப்புச் செயலாளரும், தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான தங்கத் தமிழ்ச்செல்வன் நக்கீரன் இணையதளத்திற்கு பேட்டி அளித்தார்.

ஆண்டிப்பட்டி 67வது வார்டு மற்றும் பெரியகுளம் 197வது வார்டுகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது பற்றி...

எங்களைப் பொறுத்தவரையில் மறுவாக்குப்பதிவு தேவையில்லை. ஏப்ரல் 18 வாக்குப்பதிவின்போது பிரச்சனை என்று சொன்னவுடன் எல்லா வேட்பாளர்களும் அந்த வாக்குச்சாவடிகளுக்கு போய் பார்த்தோம். அப்போது மாவட்ட ஆட்சித் தலைவர் எந்த பிரச்சனையும் இல்லை. வாக்குப்பதிவு நடக்கட்டும் என்றார். வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. திடீரென்று 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனிக்கு வருகிறது. ஏனென்று கேட்டால் தெரியவில்லை என்கிறார்கள். அடுத்த நாள் பார்த்தால் இரண்டு பூத்தில் மறுதேர்தல் என்கிறார்கள். 


 

Thanga Tamil Selvan

இந்த மறு தேர்தலில் மிகப்பெரிய பண நடமாட்டம் வர வாய்ப்புள்ளது. ஆளும் கட்சி ஏற்கனவே ஓட்டுக்கு ரூபாய் இரண்டாயிரம், மூவாயிரம் கொடுத்துள்ளார்கள். இப்போது இரண்டு பூத்திலும் மூவாயிரம் அல்லது இரண்டாயிரத்து ஐநூறு ஓட்டுகள்தான் பதிய வாய்ப்புள்ளது. இதுக்கு ஒரு ஓட்டுக்கு ரூபாய் ஒரு லட்சம் கூட கொடுப்பார்கள். 
 

ஒரு ஓட்டுக்கு ரூபாய் ஒரு லட்சம் கொடுப்பார்களா? இதனை பொதுமக்கள் நம்புவார்களா?
 

ரூபாய் மூவாயிரம் கொடுக்கப்போகிறார்கள் என்றோம், அவ்வளவு ரூபாய் கொடுக்க முடியுமா என்று கேட்டீர்கள். கொடுத்தார்கள். அதனை போலீசும் பார்த்தது. தேர்தல் ஆணையமும் பார்த்துக்கொண்டுதான் இருந்தது. ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?. 
 

44 வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச் சீட்டு மட்டும் எண்ணப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 
 

தேர்தல் ஆணையம் எதைக் கேட்டாலும் விநோதமாக பதில் சொல்லுகிறது. 20 நாள் கழித்துதான் இதனை நாங்கள் பார்த்தோம். அதனால்தான் 13 பூத்துகளில் மறு வாக்குப்பதிவு, 44 வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச் சீட்டு மட்டும் எண்ணப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். எது எப்படியோ மே 23ஆம் தேதி ரிசல்ட் பதில் சொல்லும். 


 

இந்த விஷயத்தில் அரசு தலையீடு இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

அரசு தலையீடு இருக்கத்தான் செய்கிறது. தேர்தல் ஆணையம் ஒரு திட்டத்தை போட்டால் கூட, அதனை செயல்படுத்துவது மாநில அரசின் அதிகாரிகள் மற்றும் போலீசார்தான். அதனால் நிச்சயமாக அரசுக்கு சாதகமாகத்தான் அதிகாரிகள் செயல்படுவார்கள். 

வாக்கு எண்ணிக்கை நம்பகத் தன்மையுடன் நடப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

நம்பகத்தன்மையுடன்தான் நடக்கணும். குறைந்தது ஒரு கவுண்டிங் நடக்கும்போது ஆயிரம் பேரை அதிமுகவினர் உள்ளே நுழைய உள்ளதாக தெரிகிறது. நாங்கள் அவ்வளவு பேரை கூப்பிட்டு போக முடியாது. போலீஸ் எப்படி பாதுகாப்பு கொடுக்கப்போகிறது என்று தெரியவில்லை. கலாட்டா வந்தால் என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிமுக தோற்கும் நிலைக்கு வருவார்கள். அப்போது கலாட்டா நடக்க வாய்ப்புகள் உள்ளது. அதனால் தேர்தல் ஆணையம் முன்னெச்சரிக்கையாக எல்லா பூத்திலும் போதிய போலீசார்களை குவிக்க வேண்டும். சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும். யாராவது பிரச்சனை செய்தால் அவர்களை குண்டர் சட்டத்தில் அடைப்பது போன்ற நடவடிக்கை எடுத்தால்தான் வாக்கு எண்ணிக்கை ஒழுங்காக நடக்கும். 

 

தினகரன் தனது அமமுகவை திமுகவிடம் முழுமையாக அடகு வைத்துவிட்டார் என்று தமிழிசை சௌந்திரராஜன் கூறியிருக்கிறார். ஸ்டாலின், தினகரன் ஏ மற்றும் பி டீமாக செயல்படுகிறார்கள் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறாரே?

தமிழிசையும், பொன்.ராதாகிருஷ்ணனும் இப்படி பேசக்கூடாது. அதிமுக ஆட்சியை ஊழல் ஆட்சி என்று அப்பட்டமாக பேசியவர்கள். இன்றைக்கு அதிமுக ஆட்சி, பாஜகவின் அடிமை ஆட்சியாக போய்விட்டது. பெயர்தான் அதிமுகவே தவிர, பாஜகவின் அங்கம்தான் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி. அதனால்தான் இந்த துரோக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று அமமுகவை தொடங்கி தனியாக நிற்கிறோம். திமுகவுடன் கூட்டணி என்பது தவறான கருத்து. 23ஆம் தேதி தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது. 

 

நான்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணிக் கட்சிகள் பெரிய அளவில் ஈடுபடவில்லையே? 
 

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வந்தாலே கூட்டம் வரவில்லை. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வந்தால் எப்படி கூட்டம் வரும். அதிமுக, பாஜக கூட்டணியை மக்கள் ரசிக்கவில்லை. இந்த தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி கடும் தோல்வியை சந்திக்கும். 
 

திமுகவும் அதிமுக ஆட்சியை கலைப்போம் என்கிறது, அமமுகவும் அதிமுக ஆட்சியை கலைப்போம் என்கிறது. ஒருவேளை திமுக பெரும்பான்மையை நிரூபிக்கும் வாய்ப்பு வந்தால் அமமுகவின் நிலைப்பாடு என்ன?
 

திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் எப்படி ஓட்டு போடுகிறது என்று எங்களுக்கு தெரியாது. திமுக ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க மாட்டோம். அமமுக இந்த ஊழல் அதிமுக ஆட்சியை அகற்றுவதற்குத்தான் ஓட்டுப்போடுவோம். இதுதான் எங்களது நிலைப்பாடு. 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.

Next Story

''இன்னும் சில நாட்களில் கண்ணீர் விடுவார் மோடி''-ராகுல் பேச்சு 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
"Modi will shed tears on the stage in a few days" - Rahul's speech

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பீஜப்பூரில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடியின் பேச்சுகளைப் பார்த்தால் அவர் பதற்றமாக இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. இன்னும் சில நாட்களில் மேடையில் கண்ணீர் விடுவார். வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உங்கள் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார். ஒரு நாள் சீனா அல்லது பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். மறுநாள் சாப்பாட்டு தட்டை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் எனக் கூறுகிறார். 400 தொகுதிகளில் வெற்றி எனக் கூறிய மோடி தற்போது அந்தப் பேச்சையே கைவிட்டு விட்டார். முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னர் பிரதமர் மோடி பீதி அடைந்துள்ளார்” எனப் பேசினார்.