Skip to main content

முனியாண்டி விலாஸ்க்கு இருக்குற அளவுக்குகூட உங்களுக்கு கிளைகள் இல்லை - லியோனி

Published on 21/03/2018 | Edited on 21/03/2018

சென்னை, ஐஸ் ஹவுசில் நடந்த தி.மு.கவின் பொதுக்கூட்டத்தில் பட்டிமன்ற நடுவர். திண்டுக்கல் ஐ.லியோனி, ரஜினி மற்றும் கமலின் அரசியல் வருகை குறித்து நகைச்சுவையாக பேசிய உரை. 

 

 I. Leoni speech

 

இன்று மிகப்பெரிய நடிகர்கள் இருவர் அரசியலுக்கு வந்துவிட்டனர். இனிமேல் அவர்களால் சினிமாவில் தமன்னாவுடன் டூயட் பாடமுடியாது, ஏனென்றால் வயதாகிவிட்டது. அவர்களுடன் ஆடினால் மகளை இடுப்பில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடுவதுபோல் இருக்கும். அவர்கள் வேண்டுமானாலும் ஐம்பது வயது கதாபாத்திரங்களை ஏற்றுக்கொண்டு நடிக்கலாம். அவர்கள் நடித்த காலத்தில் நானும் ரசித்தவன்தான். கமலுக்கும் நான் ரசிகன், ரஜினிக்கும் நான் ரசிகன். அவர்கள் நடிப்பிற்கு உண்மையாகவே நான் ரசிகன். கமலஹாசனின் "பதினாறு வயதினிலே" சப்பாணி கதாபாத்திரம் "மயிலு, ஆத்தா கோழி வளர்த்தா, ஆடு வளர்த்தா ஆனா நாய் மட்டும் வளக்கல. அதுக்கு பதிலா என்ன வளர்த்தா" இந்த வசனம், ஆட்டுக்குட்டி முட்டையிட்டு அந்தப் பாட்டுல என்னா நட. அதேபடத்தில் வருவாரே நம்ம ஆளு "பரட்டை" கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பீடி குடிச்சுட்டு நல்லா வசனம் பேசுவார். அப்பொழுது எல்லாம் கைதட்டினோம். உலகநாயகன் ஆரம்பித்துள்ள கட்சியின் பெயர் மக்கள் நீதி மய்யம். அது மக்களுக்கான கட்சியாம், நாங்கள் எல்லாம் ஆடு,மாடு அவைகளுக்கா கட்சி வைத்துளோம்.

பத்திரிகையாளர்கள் கேட்கிறார்கள் உங்கள் கொள்கை என்ன என்று, அதற்கு அவர் மக்கள்தான் கொள்கையை சொல்லவேண்டும், கொள்கையை மக்களிடமிருந்துதான் உருவாக்க முடியும் அங்க எல்லாரும் முழிக்கிறானுங்க என்ன கொள்கை, இப்படி சொல்றாரேன்னு. இவ்வளவு நாள் அரசியலுக்கு ஏன் வரவில்லை என்ற கேள்விக்கு இவ்வளவு நாளாக உங்கள் உள்ளத்தில் இருந்தேன், இனி உங்கள் இல்லத்தில் இருப்பேன் என்கிறார், இரண்டும் ஒன்றுதானே. நல்லா அழகா பேசுறாரு, ஆனா செயல்ல எப்படி இருப்பாருனு தெரியல.

ஐ.ஐ.டியில் நடைபெற்ற விழாவில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ஐ.ஐ.டியின் இயக்குனர் இருக்கிறார். என்ன பாட்டு இசைகிறார்கள் 'மகா கணபதி, ஸ்ரீ மகா கணபதி' நான் எவ்வளவு அழகாக பாடுகிறேன் யாராவது கைத்தட்டுரிங்களா. நீங்கள் ஏன் கைத்தட்டவில்லை என்றால் உங்களுக்கு இந்த பாடல் புரியவில்லை. இதுபுரியாமல் நீங்கள் என்னாது என்று விழித்தீர்கள். ஆனால் இதேபாடலை சீர்காழி கோவிந்தராஜன் பாடியிருப்பார், "கணபதியே வருவாய், அருள்வாய்" என்று. இதை தமிழில் கேட்கும்பொழுது எவ்வளவு அழகா, சுகமா இருக்கிறது.

இங்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனைத்து தமிழர்களும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவர் என்னவென்றால் இமயமலையில் குதிரையில் சென்று கொண்டிருக்கிறார். இப்படி இருந்தால் கம்பெனியை எப்படி நம்புவது. நீங்களும் அந்த ஊர்தான என்னை வாழவைத்தது தமிழ்பால். என்று சொல்கிறார். கார்நாடகாவிடம் சென்று  தண்ணீர்கொடு, காவிரி நீர் தரவில்லை என்றால் நான் படத்தில் நடிக்கமாட்டேன் என்று போராடவேண்டியதுதானே. அப்படி வந்து போராடினா மக்கள் நம்பி ஓட்டு போடுவாங்க. "வந்தேன்டா பால்காரன் பசு மாட்டை பற்றி பாடப்போறேன்" சொன்னவரு.

அந்த மாட்டுக்காக ஐந்து லட்சம் இளைஞர்கள் போராடினார்களே அதற்கு இதுவரை குரல் கொடுக்கவில்லையே ஏன். அப்பளம் விற்று பணக்காரன் ஆவதுபோல, முதலமைச்சர் ஆவது என்பது முடியாத காரியம். கமல்ஹாசன் கட்சியில் கள ஆய்வு நடத்த முடியுமா? முனியாண்டி விலாஸ்க்கு இருக்குற அளவுக்குகூட உங்களுக்கு கிளைகள் இல்லைபோல, இவர்கள் கூட பரவாயில்லை. இந்த பா.ஜ.கவில் ஒரு மூன்று நபர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மட்டும்தான் பேசுவார்கள். மத்திய இணைஅமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன், மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜன். அந்த அம்மா சொல்கிறார் இன்ஜினியரிங் படித்தவர்கள் ஹிந்தி கற்றுக்கொண்டால் வடமாநிலங்களில் சென்று வேலைபார்க்கலாம் என்று. அப்புறம் ஏன் ஹிந்தி மட்டும் தெரிஞ்சவன் இங்கு பானிபூரி விற்கிறான்.

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.