Skip to main content

முதல்ல குழந்தைகளை கொல்லணும்ன்னு நினைக்கல... போலீசில் அபிராமி...

Published on 03/09/2018 | Edited on 03/09/2018
 I did not want to kill the children first... says abirami in police


 

 

இரண்டு மாத கூடா நட்பு, இரண்டு குழந்தைகளையும் கொலை செய்ய வைத்திருக்கிறது. காதலித்து திருமணம் செய்து 8 ஆண்டுகள் குடும்பம் நடத்திய கணவனையும் கொலை செய்ய முயற்சித்திருக்கிறது. சென்னை குன்றத்தூரில் நடந்த அபிராமி நடத்திய கொடூர சம்பவம்தான் இன்று அனைவரையும் அதிர வைத்திருக்கிறது. 
 

குழந்தைகளை கொன்றுவிட்டு நாகர்கோவிலுக்கு தப்பிச் சென்ற அபிராமியை போலிசார் கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
 

 

 

அப்போது, நானும் விஜயும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டோம். குடும்ப தேவைகளை நிறைவேற்ற என்னிடம்தான் பணம் கொடுப்பார். நான்தான் குடும்பத்திற்கு தேவையானவற்றையும், பிள்ளைகளுக்கு தேவையானவற்றையும் வாங்கிக் கொடுப்பேன். குன்றத்தூர் அருகே மூன்றாம் கட்டளையில் வாடகை வீட்டில் குடிபுகுந்த பின்னர்தான் அதே பகுதியில் உள்ள பிரியாணி கடைக்கு ஒருமுறை குடும்பத்தோடு சென்று வந்தோம்.
 

அப்போது அங்கு பிரியாணி கடையில் பில்போடும் இடத்தில் இருந்த சுந்தரத்துடன் பழக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் அடிக்கடி செல்போனில் பேசுவோம். பிரியாணி கடைக்கு வர சொல்லுவார். நானும் பிரியாணி வாங்க அந்த கடைக்கு அடிக்கடி செல்வேன். இதனால் எங்களுக்கிடையே நெருக்கம் அதிகமானது. இது விஜய்கு தெரிய வந்தது. சந்தேகப்பட்டார். சமாளித்தேன். 
 

சுந்தரத்துடன் ஏற்பட்ட காதல் காரணமாக, விஜய்யை பிரிய நினைத்தேன். இதற்கு சுந்தரமும் உடன்பட்டார். கொலை சம்பவத்திற்கு 10 நாட்களுக்கு முன்பு நான் விஜய்யுடன் கோவித்துக்கொண்டு சுந்தரம் வீட்டிற்கு சென்றேன். என்னை காணவில்லை என்று தேடிய விஜய், பிறகு என்னை தொடர்பு கொண்டு வந்துவிடு என்று கெஞ்சினார். பின்னர் வீட்டுக்கு வந்தேன். 
 

 

 

விஜயோடு 8 ஆண்டுகள் குடும்பம் நடத்தியபோதும், இரண்டு மாதம் பழகிய சுந்தரத்தின் காதலை விடமுடியவில்லை. என்ன செய்வதன்று தெரியாமவில் தவித்தேன். அப்போது சுந்தரம், குழந்தைகளை கொன்றுவிட்டால் நாம் எந்த பிரச்சனையும் இல்லாமல் சந்தோஷமாக இருக்கலாம். வேறு எங்காவது போய் திருமணம் செய்து கொண்டு வாழலாம் என்று கூறினார். குழந்தைகள் உயிரோடு இருந்தால் நம்மை தேடி வருவார்கள்.

 

குழந்தைகளை கொல்ல மனம் வரவில்லை. இருப்பினும் சுந்தரத்தின் பழக்கத்தையும் விட முடியவில்லை. தவித்தேன். இதற்கு வேறு வழி இருக்கிறதா என யோசித்தேன். எந்த வழியும் இல்லை. மீண்டும் சுந்தரத்தை சந்தித்தேன். குழந்தைகளை கொன்றால்தான் நாம் சந்தோஷமாக இருக்க முடியும் என்று சொன்னதால், வேறு வழியில்லாமல் விஷ மாத்திரைகளை கலந்த பாலை கொடுத்தேன் என கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.