Skip to main content

“நான்தான் எம்.எல்.ஏ.!” -பங்கு கேட்ட சிங்கம்!

Published on 29/08/2019 | Edited on 29/08/2019

“திமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடிகள் தொல்லை அதிகரிக்கும். திமுக ஊழல் கட்சி ; ரவுடிகள் கட்சி.” என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் விளாசுவார் அமைச்சர் செல்லூர் ராஜு. தர்மபுரியில் பெட்ரோல் குண்டு வீசி பேருந்துக்கு தீவைத்து,  வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் ஹேமலதா, காயத்ரி, கோகிலவாணி ஆகிய மூவரையும் உயிரோடு தீயில் கருகவைத்த நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் உள்ளிட்ட 31 பேரும் அதிமுகவினர்தான் என்பதை அவ்வப்போது மறந்துவிடுவார்கள்,  செல்லூர் ராஜு போன்ற அமைச்சர்கள். ‘எங்களை மாதிரி வீராதிவீரர்களை கட்சியில் வைத்துக்கொண்டு ஊழல், ரவுடி என்றெல்லாம் எப்படி பேசலாம்?’ என்று அத்தகைய அமைச்சர்களுக்கு உணர்த்துவதுபோல், சாகசப் பேச்சு வார்த்தை நடத்தி பிரபலமாகியிருக்கிறார்,  விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அதிமுக ஒ.செ. அக்கனாபுரம் ராஜா. அப்படி அவர் என்ன பேசிவிட்டார் என்று பார்ப்போம்!

 

 "I am the MLA!"- The lion asked for share!

 

‘தமிழகத்தில் குடிமராமத்து திட்டம் என்பது ஏமாற்று திட்டமாக உள்ளது..’ என்று விவசாயிகள் தரப்பு குற்றம் சாட்டிவரும் நிலையில், குடிமராமத்து ஒப்பந்தப்பணியை செய்பவரிடமிருந்து,  உரிய பங்கு  தனக்கு வரவில்லை என்று பஞ்சாயத்து கிளார்க் ஒருவரிடம் மிரட்டலாகப் பேசியிருக்கிறார் அக்கனாபுரம் ராஜா. அவ்விருவரின் உரையாடல் இதோ - 

“மாப்ள..  எனக்கு ரூபா கொடுக்காம எந்த ஊரணியத் தொட்டாலும்.. அடி பிதுக்கிப்போடுவேன் மாப்ள..  என்னைப் பத்தி உனக்கு தெரியும். நான் போலீஸுன்னு பார்க்க மாட்டேன்.. எவனையும் பார்க்க மாட்டேன்..  நான்தான் எம்.எல்.ஏ.” 

“மாமா..  நாளைக்கு வேலை ஆரம்பிக்கும் போது குடுத்துருவோம் மாமா..”

“எவன் வந்து வேலைய தொடணும்னாலும் ரூபா கொடுத்துட்டுத்தான் தொடணும். அது எவனா இருந்தாலும் சரி. அடி வந்து பிதிக்கிருவேன் மாப்ள.. நீயா இருந்தாலும் சரி. உன்னையும் கேஸைக் கொடுத்து உள்ளதான் தூக்கிப்போட்டேன்.  அந்த ரவிகுமாரயும் உள்ள தூக்கிப்போட்டேன். என்ன பத்தி உனக்குத் தெரியும். நான் தான் எம்.எல்.ஏ.”

“சரிமாமா.. சரிமாமா.. சரிமாமா..”

 "I am the MLA!"- The lion asked for share!


“காலைல பணத்த கொடுத்துட்டு வேலையைத் தொடணும்..  இல்ல எவனாவது தொட்டா கைய ஒடிச்சிப்புடுவேன். வந்து கைய ரெண்டா வெட்டிபுடுவேன் எவனையும். நான்தான் ஊர் நாட்டாமை தெரியும்ல..” 

“மாமா நாளைக்கு காலைல வந்து பாத்துருவோம் மாமா..” 

“நீயா இருந்தாலும் சரி..  பெரிய ஜாதி எவனாச்சும் வேலைய தொட்டுட்டான்னா..  கைய ஒடிச்சிபுடுவேன். வந்து வெட்டியேபுடுவேன் ரெண்டா.. நான் கோடிகோடியா சம்பாத்தியம் பண்ணி வச்சிருக்கேன் பார்த்துக்க.. கார்த்தி ஒரு ஆளுக்கு பதில் சொல்லுறதுக்கு  இந்த ஊர்ல உலகத்துல ஆளே இல்ல. இந்த அக்கனாபுரத்துல.  என் மகனுக்கு பதில் சொல்ல ஆளு இருக்கா? அப்படி ஒருத்தன் பொறந்தத  நான் பார்த்தது இல்ல.. அடி வெட்டிப் பொசுக்கிப்புடுவான் அவன.. 
வேலையே தொடக் கூடாது.. ரூபா கொடுக்காம வேலையத் தொட்டீங்க.. கைய ஒடிச்சிபுடுவேன்..  எவனா இருந்தாலும் ஒடிச்சிபுடுவேன். அத தாண்டிருவியா நீயி? தாண்டிருவேன்னு சொல்லு.. இப்ப உன்னோட வீட்டுக்கே வர்றேன். அவனுக்கெல்லாம் இந்த ஊர்ல இடமே இல்ல. ராஜ்ஜியம் நடத்திக்கிட்டிருக்கேன்.. சிங்கம்..” 

“என்ன மாமா.. காலைல வேலை ஆரம்பிக்கும்போது வாங்கிக்கங்க மாமா..” 

“பெரியசாமி வேலைய தொட்டுட்டானா? எனக்கு காசு கொடுக்காம வேலைய தொட்டுட்டான்னா கைய வெட்டிபுடுவேன் அந்தப் …… பயல. அவனயெல்லாம் வெட்டினா கேட்க நாதியில்ல மாப்ள..” என்று  சாதியை விமர்சித்தெல்லாம் பேசியிருக்கிறார் அக்கனாபுரம் ராஜா.

 

 "I am the MLA!"- The lion asked for share!

 

‘வார்த்தைக்கு வார்த்தை நான்தான் எம்.எல்.ஏ. என்கிறாரே ராஜா? அப்படியென்றால், ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. சந்திரபிரபாவுக்கு தொகுதியில் என்ன ரோல்?’  இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் நிலையில் ராஜா இல்லை. நமது லைனுக்கே அவர் வரவில்லை. ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. சந்திரபிரபாவை தொடர்புகொண்டோம். வழக்கம்போல், அவருடைய கணவர் முத்தையாவே ‘அட்டெண்ட்’ பண்ணினார். “கொஞ்ச நேரத்தில் கூப்பிடுகிறேன்..” என்றவர், தொடர்ந்து நம்மைத் தவிர்த்தார். 

‘தன்னை எம்.எல்.ஏ. எனச்சொல்லும் துணிச்சல் ராஜாவுக்கு எப்படி வந்தது?’ அரசியல் வட்டாரத்தில் விசாரித்தோம். 

“ஊருக்குள் ‘ஒத்தக்கண் ராஜா’ என்பதே இவரது அடையாளம். ஆரம்பத்தில் சத்துணவு மையத்தில் வேலை.  2012-ல் இவரை வத்திராயிருப்பு அதிமுக ஒ.செ. ஆக்கினார் ஜெயலலிதா. அதன்பிறகு,  ஊருக்குள் இவரைப் பார்ப்பதே அபூர்வம். சென்னையில் தலைமைச் செயலகத்தையும், மாண்புமிகுக்களையும் சுற்றி வந்தார். அங்கே அப்படி என்ன வேலையென்று கேட்டுவிடாதீர்கள். வெளியில் சொல்ல முடியாத ரகசிய சேவையில் முழுவதுமாக தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். இப்போது, கட்சியில் பொறுப்பு எதுவும் இல்லை. ஆனாலும், ஸ்கார்பியோ காரில்தான் தொகுதியை வலம் வருவார். சந்திரபிரபா எம்.எல்.ஏ.விடமும் அவருடைய கணவர் முத்தையாவிடமும் பசைபோல் ஒட்டிக்கொண்டார். பெர்சன்டேஜிலிருந்து சகலத்தையும் எம்.எல்.ஏ. பெயரைச் சொல்லி வசூலிப்பதற்கென்றே ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் 10 பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் இந்த அக்கனாபுரம் ராஜா. இவரைப் போன்றவர்கள், வாங்கியது அனைத்தையும் அப்படியே கொண்டுபோய்ச் சேர்ப்பார்களா என்பது சந்தேகம்தான்.” என மிகையின்றி விவரித்தார்கள்.   

 "I am the MLA!"- The lion asked for share!


சாதி பெயரைச் சொல்லி அவதூறாகப் பேசியதாக குறிப்பிட்ட சமுதாயத்தினர் ராஜா மீதான புகாரோடு காவல் நிலையத்துக்குச் செல்ல.. போலீசார் அவர்களிடம்   ‘அவர் எந்த ஒப்பந்தகாரரைத் திட்டினாரோ, அவரே புகார் அளிக்க முன்வரவில்லை. நீங்கள் ஏன் தேவையில்லாமல் பிரச்சனையைப் பெரிதாக்குகின்றீர்கள்?’ என்று அறிவுரை கூறி திருப்பி அனுப்பிவிட்டனர். 

 

 "I am the MLA!"- The lion asked for share!

 

‘உடனே மன்னிப்பு கேள்!’ என்று கட்சியின் சீனியர்கள் நெருக்கடி தர, வாட்ஸ்-ஆப் மூலம் தனது வாய்ஸிலேயே,  குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு  விளக்கம் தந்திருக்கிறார் ராஜா. அதில் “நான் தங்கள் சமுதாயம் குறித்து தவறாகப் பேசியதாக வாட்ஸ்-அப்பில் ஒரு செய்தி வந்துள்ளது. நான் அவ்வாறு தவறாக எதுவும் பேசவில்லை. அரசியலில் எனக்குப் பிடிக்காத சில சக்திகள்தான்,  நான் பேசியதாக வாய்ஸ் செட்டப் செய்து,  எனக்கு கட்சியில் கிடைக்கவிருக்கின்ற  ஒன்றியச் செயலாளர் பதவியைத்  தடுப்பதற்காக இப்படி செய்துவிட்டார்கள்.  நான் கடந்த 40 ஆண்டுகளாக நமது சமுதாய மக்களிடம் அண்ணன் தம்பியாகப் பழகி வருகிறேன். அரசியலிலும் மக்கள் மத்தியிலும் எனக்கு கெட்ட பெயரை உருவாக்க நினைக்கிறார்கள்.  நான் அப்படி தவறுதலாகப் பேசியதாக அந்த சமுதாய மக்கள் நினைத்தால்,  என்னை  மன்னிக்கவேண்டும்.” என்று பேசி பதிவு செய்திருக்கிறார். 

‘இது என்னுடைய கையெழுத்து இல்லை’ என்று நீதிமன்றத்திலேயே பொய் சொன்ன வரலாற்றுக்குச் சொந்தமானவர்கள் அக்கட்சியில் உண்டு. அதற்கு முன்னால், இந்த ராஜாவும் அவருடைய மன்னிப்பும் எம்மாத்திரம்?  

 

Next Story

நிர்மலா தேவி வழக்கு; ‘தண்டனை விவரம் எப்போது’ - நீதிமன்றம் அறிவிப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Nirmala Devi case; 'Details of punishment when' - court announcement

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றச் சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். மேலும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமியும் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, அப்போது சிபிசிஐடி எஸ்.பி.யாக இருந்த ராஜேஸ்வரி தலைமையில் 9 தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர். நிர்மலாதேவி உள்ளிட்ட மூவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பிறகு ஜாமீனில் வெளிவந்தனர்.

இந்த விவகாரம் குறித்து அன்றைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர். சந்தானமும் விசாரணை நடத்தினார். அதே சமயம் இந்த வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் தொடர்ந்து விசாரணை நடத்தியது. இதற்கிடையே பெண் டிஐஜி தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டுமென்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் புரட்சிகர மாணவர்கள் இளைஞர் முன்னணி இயக்கத்தின் (DYFI) மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் என்பவர் தொடர்ந்த வழக்கில், ‘உதவிப் பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மாணவிகள், புகாரளிக்கும் விசாகா கமிட்டிக்கு ஏன் அனுப்பவில்லை? ஆறு ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?’ என்று காமராஜர் பல்கலைக்கழகத்திடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ‘ஜூன் 7ஆம் தேதிக்குள் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி விளக்கமளிக்க வேண்டும்.’ என்றும் உத்தரவிட்டது. தமிழக அரசுத் தரப்பில்  ‘நிர்மலா தேவி வழக்கில் கீழமை நீதிமன்றம் ஏப்ரல் 26 ஆம் தேதி தீர்ப்பளிக்கவுள்ளது’எனத் தெரிவிக்கப்பட்டது. 

Nirmala Devi case; 'Details of punishment when' - court announcement

அதனைத் தொடர்ந்து தீர்ப்பு நாளான கடந்த 26 ஆம் தேதி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். ஆனால் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அப்போது, ‘உடல்நலக்குறைவால் நிர்மலா தேவி ஆஜராக முடியவில்லை’ என்று அவரது தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி பகவதி அம்மாள், “நிர்மலா தேவி 29 ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும். அன்றைய தினம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து இந்த வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் இன்று (29.04.2024) வழங்கியுள்ளது. இதற்காக நிர்மலா தேவி, கருப்பசாமி, முருகன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பகவதி அம்மாள், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 2ஆவது மற்றும் 3ஆவது நபர்களான முருகன் மற்றும் கருப்பசாமி ஆகிய இருவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் குற்றம்சாட்டப்பட்ட முதல் நபரான பேராசிரியை நிர்மலா தேவியை குற்றவாளி என அறிவித்து அவருக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என நீதிபதி தீர்ப்பளித்தார். அப்போது தீர்ப்பை வழங்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் வாதிட்டார். அதற்கு பிற்பகல் 2.30 மணிக்கு மேல் தீர்ப்பு குறித்து அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார். இந்நிலையில் நிர்மலா தேவிக்கான தண்டனை விவரங்கள் நாளை (30.04.2024) அறிவிக்கப்பட உள்ளது என ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்த தீர்ப்பு குறித்து நிர்மலா தேவி தரப்பு வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன் பேசுகையில், “நிர்மலா தேவி குற்றவாளி என உறுதியாகியுள்ளது. அவருக்கு வழங்கக் கூடிய தண்டனை குறித்து விவாதம் செய்ய இன்று பிற்பகல் 2.30 மணிக்கு வர சொன்னார்கள். கருப்பசாமி, முருகன் ஆகிய இருவரையும் விடுதலை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. தண்டனை விவரம் இன்றோ, நாளையோ வெளியாகலாம்” எனத் தெரிவித்தார். மேலும் இது குறித்து அரசு சிறப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் பேசுகையில், “சமூகத்திற்கு தேவையான தீர்ப்பை இந்த நீதிமன்றம் வழங்கியுள்ளது. முதல் குற்றவாளியான நிர்மலாதேவி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இரண்டு மற்றும் மூன்றாம் தரப்பு எதிரிகள் மீது அரசு தரப்பில் குற்றம் நிரூபிக்கபடவில்லை என கூறி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் இவர்களுக்கு போதுமான தண்டனைகள் வழங்கக்கூடிய சாட்சிகள் இருப்பதாக அரசு தரப்பு கருதுகிறது. எனவே இது சம்பந்தமாக மேல்முறையீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார். 

Next Story

தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
MLAs letter to Chief Electoral Officer Satyapratha Sahu

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கடந்த 21 ஆம் தேதி (21.04.2024) அறிவித்திருந்தது. அதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்தனர். இதன் ஒருபகுதியாக அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், பெயர்பலகைகள், எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன.

இந்நிலையில் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு எம்.எல்ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், “தேர்தல் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டதால் மக்கள் பணியாற்ற எம்.எல்.ஏ அலுவலகங்களை திறக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.