Skip to main content

“இந்த விமர்சனம் தியாகராஜா காலத்து பழசான அரசியல் ” - அதிமுக வேட்பாளர் சரவணன்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
AIADMK candidate Saravanan says criticism about him

நாடாளுமன்றத் தேர்தல், ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அந்த வகையில், தி.மு.க. அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகிறது. அதில், திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை எதிர்த்து மதுரை மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க கட்சி சார்பில் மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளர் சரவணனின் தேர்தல் பிரச்சாரத்தின் போது, நமது நக்கீரனுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பல்வேறு தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

மதுரை மக்களவைத் தொகுதியில், உங்களை கட்சித் தலைமை எப்படி தேர்வு செய்தது என்று நினைக்கிறீர்கள்?

“மதுரை என்பது வரலாற்று சிறப்புமிக்க ஒரு நகரம். குறிப்பாக, அரசியலாக இருக்கட்டும், சினிமாவாக இருக்கட்டும், எதையும் மதுரையில் இருந்து தான் தொடங்குவார்கள். ஏனென்றால், அது வெற்றிக்கான முதல் தளமாக அமையும் என்ற ஒரு நம்பிக்கை. அதிமுக சார்பில், மதுரை தொகுதியை கேட்டு 72 பேர் மனு செய்திருந்தோம். அனைவர் மாதிரியும், நானும் நேர்காணலுக்கு சென்றிருந்தேன். அடிப்படையில், நான் ஒரு மருத்துவர். இம்மாவட்டத்தில், கடந்த 25 வருடங்களாக மருத்துவராக இருக்கிறேன். குறைந்த செலவில் மருத்துவம் பார்ப்பதால், மக்கள் இங்கு அதிகமாக வருவார்கள். அது மட்டும் இல்லாமல் ஒரு தொண்டு நிறுவனம் வைத்திருக்கிறேன். அதன் மூலமாக மக்களுக்கு நிறைய தேவை செய்து வருகிறேன்.

மேலும், என்னால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றேன். அ.தி.மு.க.வில் என்னை இணைத்துக் கொண்ட கடந்த ஒன்றரை வருடமாக தீவிரமாக கட்சி பணி செய்து வருகிறேன். இந்த மதுரை தென் பகுதியில் அதிகம் அறியப்பட்ட ஒரு மருத்துவராகவும், சமூக சேவகாரமும் இருக்கிறேன். இதை வைத்து, பொதுச்செயலாளர் என்னை தேர்வு செய்வதற்கு காரணமாக அமைந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்".

கட்சியில் சேர்ந்த ஒரு வருடத்திற்குளே மக்களவைத் தொகுதி சீட் கிடைத்திருக்கிறது என்ற விமர்சனத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

“இந்த விமர்சனம் எல்லாம் தியாகராஜா காலத்து அதர பழசான ஒரு அரசியல். என்னைப் பொறுத்தவரை மக்களுக்கு சேவை செய்வதற்கான பிளாட்பார்ம் அரசியல். அப்படிப் பார்க்கையில், கடந்த 15 வருடமாக நான் அரசியலில் இருக்கிறேன். இந்த வருடத்தில், நான் அதிமுகவில் இணைத்துக் கொண்டாலும் என்னுடைய கொள்கையான மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற அடிப்படை பொதுச் செயலாளருக்கு பிடித்திருக்கலாம். மாவட்ட செயலாளர்கள் பரிந்துரையின் பேரில் இந்த தொகுதி எனக்கு கிடைத்திருக்கலாம்.

உடனடியாக ஒரு நபரை தேர்வு செய்ய மாட்டார்கள். அதற்கு ஒரு சர்வே எடுப்பார்கள். அந்த சர்வேயில், நான் நல்ல வேட்பாளராக இருப்பேன் என்று நினைத்திருக்கலாம். மேலும், இது சமூகநீதிக்கான இயக்கம் தான் அதிமுக.  சாமானிய மக்களுக்கான இயக்கமும் கூட. இப்போது அறிவித்திருக்கக்கூடிய 40 வேட்பாளர்களின் பட்டியலில் ஐந்து வேட்பாளர்கள் மருத்துவர்கள் தான். இரண்டு பிஎச்டி மருத்துவர்களும் இருக்கிறார்கள். இந்த மாதிரி கலந்து செய்யபட்ட விஷயமாகத்தான் நான் பார்க்கிறேன்"

அரசியல் ஆசை எப்போது வந்தது?

“அரசியலே ஒரு நீட்டிக்கப்பட்ட சர்வீஸ் தானே. ஒரு மருத்துவராக ஓரளவுக்கு மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய முடிகிறது. ஒரு கட்டத்திற்கு பிறகு இன்னும் அதிகமான பேருக்கு சேவை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தொண்டர் நிறுவனம் ஆரம்பித்து கடந்த 20 வருடமாக அதன் மூலம் தொண்டு செய்து வருகிறேன். மருத்துவ உதவியை தாண்டி நிறைய பேர் உதவி கேட்டு வருவார்கள். ஆனால் அவர்களுக்கு என்னால் முடிந்த சிறிய உதவியை தான் செய்து முடிகிறது. இன்னும் நாம் அதிகாரமான பதவிக்கு வந்தால் இன்னும் அதிகமான பேருக்கு சேவை செய்யக்கூடிய ஒரு வாய்ப்பு இருக்கும் என்ற அடிப்படையில் அரசியலுக்கு வந்தேன். நான் இரண்டு வருடமாக சட்டமன்ற உறுப்பினராக திருப்பரங்குன்றத்தில் பணியாற்றிருக்கிறேன். அந்த தொகுதி மக்களிடம் கேட்டால் நான் எந்த அளவுக்கு சேவை செய்தேன் என்று அம்மக்களே கூறுவார்கள். சமூக சேவையில் எனக்கு ஒரு நாட்டம் உண்டு. அதனால் இது இன்னும் பரவலான மக்களுக்கு என்னுடைய சேவை சென்றடைய வேண்டும் என்ற ஒரு வாய்ப்பு அமைந்திருக்கிறது" என்று பேசினார்.

 

பேட்டி தொடரும்...

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.