Skip to main content

“அவர்கள் வெளியே பார்க்கும் போது மாப்பிள்ளையாக தெரியலாம், ஆனால் சட்டை எங்களுடையது” - அதிமுக வேட்பாளர் சரவணன்

Published on 09/04/2024 | Edited on 10/04/2024
AIADMK candidate Saravanan crictized DMK and madurai MP su.venkatesan

நாடாளுமன்றத் தேர்தல், ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்தத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அந்த வகையில், தி.மு.க. அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகிறது. அதில், திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை எதிர்த்து மதுரை மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க கட்சி சார்பில் மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளர் சரவணனன் தேர்தல் பிரச்சாரத்தின் போது, நமது நக்கீரனுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பல்வேறு தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

மதுரை மக்களவைத் தொகுதி மக்கள் எதற்காக சரவணனுக்கு வாக்களிக்க வேண்டும்?

“அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கைகாட்டிய வேட்பாளர் நான். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி வளர்த்த சின்னமான இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும், இது ஒன்று. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி ஒரு மருத்துவராக, ஒரு சமூக சேவகராக மக்களுக்கு ஒரு பரிச்சயமான நபர் என்ற அடிப்படையில் என்னால் முடிந்த அளவுக்கு சேவை செய்ய முடியும். என்னுடைய பெற்றோர்கள் கிராமப்புறத்தில் இருந்து வந்ததனால், என்னுடைய மனதில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரு எண்ணம் எப்போதும் இருக்கிறது. என்னால் பலனடைந்த மக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதனால் அவர்கள் எனக்கு வாக்களிக்கலாம்.

இன்றைய அ.தி.மு.க கூட்டணியில் இருக்கக்கூடிய தே.தி.மு.க தலைவர் மறைந்த விஜயகாந்த் மதுரை மண்ணைச் சார்ந்தவர். அவரது மறைவுக்கு ஒட்டுமொத்த தமிழகமே கண்ணீர் சிந்தியது. அவர்கள் எங்களுடன் கூட்டணியில் இருக்கிறார்கள். இன்னும் பல்வேறு அமைப்புகள் எங்களுடன் கூட்டணி இருக்கிறார்கள். இவர்களின் தொண்டர்கள் எனக்கு வாக்களிக்கலாம். தி.மு.க.வின் கடந்த 33 மாத கால ஆட்சியில் மக்களிடம் நிறைய கெட்ட பேர் வாங்கி இருக்கிறார்கள். பொதுவாக ஒரு ஆட்சியில், கடைசி ஒரு வருடத்தில் தான் அந்த கட்சி மீது மக்களிடம் இருந்து அதிருப்தி ஏற்படும். ஆனால், தி.மு.க வந்ததிலிருந்து அதிருப்தி ஏற்படக்கூடிய சூழல் இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் கொடுத்த வாக்குறுதி அப்படி. அவர்களால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றியதாக தான் நாங்கள் பார்க்கிறோம்.

ஆட்சியில் வந்த முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்று சொன்னார்கள். ஆனால், பெரும்பான்மை உள்ள பாஜக அரசு எந்தச் சட்டத்தையும் அமல்படுத்த முடியும். அந்த வகையில் நீட் தேர்வை அவர்கள் கட்டாயமாக்கி விடுகிறார்கள். இப்படி பல்வேறு வாக்குறுதிகளை அவர்கள் கொடுத்தார்கள். இதையெல்லாம் நம்பி மக்கள் வாக்களித்தார்கள். அதனால் இந்தத் தி.மு.க ஆட்சியைத் தூக்கி எறிய வேண்டும் என்று நினைக்கும் மக்கள் எனக்கு வாக்களிக்கலாம். மதுரையின் தற்போது எம்.பி.யான சு.வெங்கடேசன் பொதுவுடமை இயக்கமான கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர். பொதுவாக அரசியல் கட்சிகள், வாக்குறுதிகளை கொடுப்பார்கள். ஆனால், இவர் தனிப்பட்ட முறையில் மக்களுக்கு 44 வாக்குறுதிகளை கொடுத்தார். அதில் ஒரு வாக்குறுதி கூட அவர் நிறைவேற்றவில்லை. அவர் கடந்த நான்கு வருடமாக மதுரை மண்ணிலே இல்லவே இல்லை.

கீழடி, தமிழர் பாரம்பரியத்தைக் காண்பிக்க கூடிய தொன்மையான சின்னம் இது. அந்த விஷயத்தில் கூட அவர் அரசியல் செய்திருக்கிறார். அவர் ஒரு டிவிட்டர் அரசியல்வாதி. தமிழ் வாழ்க, மோடி ஒழிக என இரண்டு மட்டுமே சொல்லிவிட்டு இருப்பார். 1974ன் போது வை.பாலசுப்பிரமணியன் என்ற ஒரு வரலாற்று ஆசிரியர் கீழடி பள்ளியில் வேலை பார்த்து வந்தார். அப்போது, அங்கு கிணறு தோண்டும் போது வித்தியாசமான செங்கற்கள் வந்தபோது அங்குள்ள மக்கள் அவரிடம் கொடுக்கிறார்கள். அவரும், அந்தப் பொருட்களை தொழில்துறைக்கு தொல்லியல் துறைக்கு எடுத்துக்கொண்டு விவரம் கேட்டறிந்தார்.

கடைசியாக 2015 ஆம் ஆண்டில் அ.தி.மு.க ஆட்சி காலத்தில் அதற்கான இடத்தை 72 ஏக்கரை ஒதுக்கி, நிதி ஒதுக்கி அகழ்வாராய்ச்சி தொடங்கினோம். அதனால் அந்தப் பெருமை எல்லாம் வை.பாலசுப்ரமணியன் என்ற வரலாற்று ஆசிரியருக்கு தான் போக வேண்டும். அதேபோல் அ.தி.மு.க அரசுக்கு தான் அந்தப் பெருமை போக வேண்டும். அகழ்வராய்ச்சி முடித்து பத்தாவது கட்டத்திற்கு வந்து விட்டோம். இந்த நேரத்தில் தான் அருங்காட்சியத்தைத் தொடங்கி இருக்கிறார்கள். அதில் எம்.பி வழக்கம் போல் ட்விட்டரில் கீழடி நாயகன் என்று பிரபலப்படுத்த நினைக்கிறார். அதனால் அவர்கள் வெளியே பார்க்கும் போது மாப்பிள்ளையாக தெரியலாம். ஆனால் சட்டை எங்களுடையது” என்று கூறினார்.

பேட்டி தொடரும்...

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.