Skip to main content

“தயவு செய்து ஒப்பிட வேண்டாம்”- விவேக் வேண்டுகோள்

Published on 13/08/2020 | Edited on 13/08/2020
vivek

 

 

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு விடுத்த வேண்டுகோளை ஏற்று நடிகர் விஜய் தன்னுடைய வீட்டில் மரக்கன்றை நட்டு வைத்த புகைப்படம் இணைய தளங்களில் வைரலாகி வருகின்றது.

 

திரைத்துறையில் இருப்பவர்கள் அடிக்கடி குறிப்பிட்ட நடிகர்களை டேக் செய்து சேலஞ்ச் விடுப்பது வாடிக்கையான ஒன்று. சேலஞ்ச் விடுக்கப்பட்ட பிரபலமும் அதைசெய்து முடிப்பார்கள். இது அவர்களின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான ஒரு விஷயமாகவும், மக்களுக்கு இதன் மூலம் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவும் பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் மகேஷ் பாபு தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்று ஒன்றை தன் வீட்டில் நட்டார். அந்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்ட அவர் நடிகர் விஜய், ஜூனியர் என்.டி.ஆர்., நடிகை சுருதி ஹாசன் உள்ளிட்டவர்களை டேக் செய்து இதனைத் தொடர்ந்து நீங்கள் முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். அதனை ஏற்று நடிகர் விஜய் தன் வீட்டில் மரக்கன்று ஒன்றை நட்டு அவரது வேண்டுகோளை நிறைவேற்றினார். 

 

இந்நிலையில், விஜய் - மகேஷ் பாபு இருவரையும் வைத்து சில ஒப்பீடுகளையும் வெளியிட்டார்கள். இதனால் சில சர்ச்சைகளை உருவானது. இதனைத் தொடர்ந்து நடிகர் விவேக் தனது ட்விட்டர் பதிவில், "மகேஷ் பாபு மற்றும் விஜய் இருவருக்குமே லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் இயற்கைக்காக சில நல்ல விஷயங்களைச் செய்யும்போது, அவர்களது ரசிகர்களும் அதனைப் பின்பற்றி நல்ல காரியங்களைச் செய்வர். நாம் இதை] பாராட்ட வேண்டும். தயவுசெய்து ஒருவரோடு மற்றொருவரை ஒப்பிட வேண்டாம். பசுமையான பூமி என்பதே நமது லட்சியம்" என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்