Skip to main content

விஜய் சேதுபதி கொடுத்த 96 புல்லட்...

Published on 14/02/2019 | Edited on 14/02/2019

96 திரைப்பட இயக்குனர் திரு பிரேம்குமார் அவர்களுக்கு நடிகர் விஜய்சேதுபதி கொடுத்த பரிசு பற்றி மனம் திறக்கிறார்.

 

premkumar


எனக்கு நிறைய டிராவல் பண்ண பிடிக்கும். விஜய் சேதுபதிக்கு அவ்ளோ புடிக்காது. '96' படத்துல டிராவல் சாங் எடுக்கும்போது ரொம்ப கஷ்டப்பட்டாரு. எனக்கு டிராவல் ஃபோட்டோக்ராஃபர் ஆகணும்னு கூட ஆசை இருந்துச்சி. ஆனால் முடியல. சினிமாவுக்கு வந்துட்ட.

 

எனக்கு சின்னவயசுல இருந்தே புல்லட் ஓட்டுறது புடிக்கும். சமிபத்துலதான் 'ராயல் என்பில்டு இன்டெர்செப்டர்' வண்டி வெளியிட போறாங்கனு தெரிஞ்சுது. இந்தியாவுல தயாரிக்கிற அதிக திறன் இருக்க வண்டி அது. நம்ப பொருளாதாரத்துக்கு அது விலை அதிகமான வண்டிதான். எங்களுக்குனு ஒரு வாட்ஸ் ஆப் குழு இருக்கு. அதுல விஜய் சேதுபதியும் இருக்காங்க. நான் "இதுபோல ஒரு வண்டி வரப்போகுது"னு வாட்ஸ் ஆப்ல சொல்லிட்டே இருந்தேன். சேதுபதி என்கிட்ட "நான் புக் பண்ணிட்ட, நீங்க பண்ணிட்டிங்களா"னு கேட்டாங்க, அடுத்தபடம் ஒப்பந்தம் ஆச்சுன்னா வாங்கலாம்ங்குற நோக்கத்துல "இன்னும் இல்ல, பண்ணனும்"னு சொல்லிட்டேன். ஆனால் அவருக்கு அது புரிஞ்சுருக்கு. அப்பறம் ஒருநாள் ஆபீஸ்க்கு வரசொல்லிருந்தாங்க. ரூம்ல கூப்பிட்டு ஏதேதோ பேசிட்டு இருந்தாங்க. கொஞ்சநேரத்துல ஒரு ப்ரிண்ட் அவுட் வந்துச்சி. என் பேருல வண்டி புக் பண்ணுன ரிசிப்ட் அது. எனக்கு ஷாக் ஆகிட்டு. அவரு சிரிச்சிகிட்டே என்ன நம்பர் வேணும்னு கேட்டாங்க. எனக்கு 96 தான் தோணுச்சு, நான் விஜய் சேதுபதிக்கு வண்டி வாங்குனா 96 நம்பர்ல வாங்க சொல்லலாம்னு இருந்தேன். முதலில் 96 நம்பர் கிடைக்கல, வேற நம்பர் ஏதாவது கேட்டாங்க. நான் 2018 னு சொன்னேன். 

 

சரியா விஜய் சேதுபதியோட பிறந்தநாளுக்கு முன்னாடி. '0096' நம்பர் போட்டே அந்த வண்டி வந்துச்சி. விஜய் சேதுபதியே வண்டிய ஒட்டிக்கிட்டு வந்தாங்க. வீட்டுக்கு வந்து என்ன ஒரு ரவுண்டு போயிட்டுவர சொல்லி, பாத்துட்டு, அப்புறம் கெளம்பி போனாங்க. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சி. ஊர்ல யாராவது ஒருத்தர்  புல்லட் வச்சிருந்தாலே ஆச்சர்யமா பாத்துருப்போம். இப்ப என்கிட்டேயே ஒரு இன்டெர்செப்டர் வண்டி இருக்குறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. என நேகிழிந்து பேசினார் பிரேம்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'நண்பனுக்கு ஒரு புல்லட் பார்சல்' - பர்த்டே கிஃப்ட் கொடுக்க கைவரிசை காட்டிய சிறை நண்பர்கள் கைது

Published on 18/10/2023 | Edited on 18/10/2023

 

'A Bullet bike Parcel for a Friend' - Prison Friends Arrested for Handing in Birthday Gift

 

புதுச்சேரியில் நண்பனின் பிறந்தநாளுக்கு புல்லட்டை பரிசளிக்க நினைத்த நண்பர்கள் புல்லட்டை திருடி பரிசாகக் கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாகத் திருட்டில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆதிகேசவ பெருமாள். இவர் கடந்த வாரம் ஈ.சி.ஆர் சாலையில் தன்னுடைய புல்லட்டை நிறுத்தியிருந்த நிலையில், காணாமல் போனதாக லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை செய்து வந்தனர்.

 

தொடர் விசாரணையில், காணாமல் போனதாகக் கூறப்படும் புல்லட்டை இளைஞர் ஒருவர் ஓட்டிச் செல்ல, பின்னாடியே மற்றொரு இளைஞர் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த காட்சி சிக்கியது. இந்த காட்சிகளை வைத்து போலீஸ் விசாரணை மேற்கொண்டனர். அருகில் உள்ள மற்ற எல்லைக் காவல் நிலையங்களுக்கும் இந்த சிசிடிவி காட்சிகள் அனுப்பி வைக்கப்பட்டு இளைஞர்கள் குறித்த தகவலை போலீசார் திரட்ட நடவடிக்கை மேற்கொண்டனர்.

 

அப்பொழுது நெட்டப்பாக்கம் காவல் நிலைய பகுதியில் இருந்து ஒரு தகவல் கிடைத்தது. புல்லட்டை ஓட்டிக்கொண்டு சென்றது கரியமாணிக்கம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்பது தெரியவந்தது. அஜித்குமார் ஏற்கனவே நீர் மோட்டாரை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் எனவும் தெரிந்தது. உடனடியாக அஜித்குமாரை கைது செய்த போலீசார் விசாரணை செய்ததில், பர்த்டே கிப்ட்காக புல்லட்டை திருடியது வெளிவந்தது.

 

அஜித்குமார் திருட்டு வழக்கில் சிறையில் இருந்த பொழுது, அதே சிறையில் பெரியார் நகரைச் சேர்ந்த உத்ரேஷ் என்ற நபருடன் பழக்கமாகியுள்ளார். இருவரும் நண்பர்கள் ஆகிவிட்டனர். இருவரின் நட்பும் சிறையிலிருந்து வெளியே வந்த பின்னரும் தொடர்ந்துள்ளது. இந்நிலையில் உத்ரேஷ் தனக்கு புல்லட் வாங்க வேண்டும் என ஆசையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அவருடைய ஆசை நிறைவேற்ற நினைத்த அஜித், ஆனந்த் என்ற மற்றொரு நண்பருடன் சேர்ந்து புல்லட்டை திருடியது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து புல்லட் மட்டுமல்லாது மொத்தம் 4 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

 

 

Next Story

வீட்டுக்குள் புகுந்த துப்பாக்கி குண்டு... தீவிர விசாரணையில் காவல்துறையினர்!

Published on 28/01/2022 | Edited on 28/01/2022

 

Gunshot inside the house ... Police in intensive investigation

 

பெரம்பலூர் மாவட்டம் ஈச்சங்காடு காட்டு கொட்டாய் பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணியன். இவரது வீட்டின் மேற்கூரையில் போடப்பட்டிருந்த சிமெண்ட் சீட்டை துளைத்துக் கொண்டு துப்பாக்கி குண்டு வீட்டுக்குள் (புல்லட்) வந்து விழுந்துள்ளது. இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதுகுறித்து அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர்  நாராயணசாமி, சுப்பிரமணியன் புகார் கொடுத்துள்ளார். அவரது புகாரின்பேரில் பாடாலூர் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், சுப்பிரமணியன் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தியதோடு அவரது வீட்டு கூரையை துளைத்து கொண்டு வந்த புல்லட்டை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டார்.

 

இந்த நிலையில் நேற்று சுப்பிரமணியன் குடும்பத்தினர் வீட்டை பெருக்கி சுத்தம் செய்துகொண்டிருந்தபோது இரண்டு மாதத்திற்கு முன்பு இதேபோன்று ஹாஸ்பெட்டாஸ் ஷீட் சுத்தம் செய்த போது மற்றொரு சிறிய ரக துப்பாக்கி குண்டு கிடந்துள்ளது. அந்தக் குண்டு துளைத்த மேற்கூரையும் சுப்பிரமணியம் குடும்பத்தினர் காண்பித்துள்ளனர். இதையடுத்து திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை பயிற்சி போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது இந்த புல்லட் சுப்பிரமணியன் வீட்டு கூரையை துளைத்துக் கொண்டு வந்து விழுந்து இருக்கலாம் என தெரியவந்துள்ளது. பாடாலூர் போலீஸ் பகுதிக்கு உட்பட்ட நாரணமங்கலம் கிராமத்தின் அருகில் உள்ளது பச்சைமலை.

 

Gunshot inside the house ... Police in intensive investigation

 

இந்த மலை அடிவாரத்தில் காவல்துறையினரின் துப்பாக்கி சூடும் தளம் உள்ளது. இங்கு கடந்த 21ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை ( ஆர்பிஎப்) போலீசார் பயிற்சி மேற்கொண்டு இருந்தனர். அவர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்டபோது யாரோ ஒருவரின் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு மலையின் பின்புறம் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள ஈச்சங்காடு காட்டுக்கொட்டாய் கிராமத்தில் வசித்த சுப்பிரமணியன் வீட்டு கூரையை துளைத்துக் கொண்டு விழுந்துள்ளது என போலீசாரால் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து திருச்சி தடய அறிவியல் துறை உதவி இயக்குனர் ராஜேந்திரன், சுப்பிரமணியன் வீட்டிற்கு வந்து அந்த புல்லட்டை பார்வையிட்டு அது என்ன ரகம் என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறார்.