Skip to main content

என் வீட்டில் உள்ள பெண்களைப் பற்றிய புரிதல் கூட இல்லை - சூர்யா

Published on 17/07/2023 | Edited on 17/07/2023

 

surya latest speech about students

 

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 44வது ஆண்டு பரிசளிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. 1979-ல் ஆரம்பித்த இக்கட்டளை ஒவ்வொரு ஆண்டும் மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி வருகிறது. பின்பு ஒரு கட்டத்தில் அகரம் அறக்கட்டளை இந்த பரிசளிப்பு விழாவை தத்தெடுத்து நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்தாண்டும் இவ்விழா நடத்தப்பட்ட நிலையில் அதில் சிவகுமார், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

 

இந்நிகழ்வில் பேசிய சூர்யா, "இந்த அறக்கட்டளை இவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறது என்றால் எங்களின் ஆத்தாவின் வழிகாட்டுதல் தான். உதவி பண்ணுவதை விட நிலைத்து நிற்பது தான் முக்கியம். தொடர்ந்து ஒரு மாற்றத்துக்கான காரணமாக துணை நிற்பது, ஒரு சவால் நிறைந்த ஒன்று. 44 ஆண்டுகள் தொடர்ச்சியாக மாணவர்களும் வந்து கொண்டிருக்கிறார்கள். அதுவும் பெரிய விஷயம். இதற்கெல்லாம் ஆரம்பப் புள்ளி ஆறுமுகம் என்றவர் தான். அவர் ஒருத்தர் பண்ண உதவி பட்டர்ஃபிளை எஃபைக்ட் போல பரவியிருக்கு. 

 

அகரம் மாணவர்கள் தனித்தன்மையாக இருப்பதாக பல ஆசிரியர்கள் சொல்கிறார்கள். அகரம் மாணவர்களுக்குத் தலைமைப் பண்பு அதிகமாக இருப்பதாகவும் சொல்கிறார்கள். இது போன்ற நிகழ்வுகளால் தான் வாழ்க்கை முழுமை அடைகிறது. ஒவ்வொரு ஆண்டும் அகரம் அறக்கட்டளையில், மாணவர்கள் வாழ்க்கையில் நடந்த சுவாரசிய நிகழ்வுகளை பகிர்வார்கள். அப்படி ஜெய ஸ்ரீ என்ற மாணவி, தன்னுடைய கணவர் தான் வாழ்கையின் அர்த்தத்தை புரிய வச்சாரு என்றார். அந்த மாணவிக்கு 25 வயசு . கணவருக்கு 27 வயசு. அந்த கணவர் அகரம் அறக்கட்டளையின் மாணவர். அதை பார்க்கும் போது பெரிய சந்தோசம் கிடைத்தது. ஒரு பெண்ணுடைய உணர்வுக்கு மதிப்பளித்து அந்த இடத்தை ஒரு 27 வயது மாணவர் கொடுத்திருக்கிறார் என்றால், அவரை வியந்து ஆச்சரியத்தோடு பார்க்கிறேன். அந்த பொறுப்புணர்ச்சி எனக்கு கிட்டத்தட்ட 40 வயதில் தான் வந்திருக்கு. எனக்கு கல்யாணம் ஆகி 10 வருஷம் ஆகியும் என் வீட்டில் உள்ள பெண்களை பற்றிய உணர்வு, புரிதல் இல்லை.

 

அந்த மாணவர்கள் மாதம் ஒரு 3000 ரூபாயை முழுசாக பார்த்திருக்க மாட்டார்கள். அந்த மாணவர்களுக்கு அகரம், ஒரு முக்கியமான இடத்தை குடுத்திருக்கிறதைப் பார்க்கும் போது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. அகரம் மாணவர்கள் பெரிய இடத்தை உருவாக்குவார்கள்" என்றார்.

 

 
 

சார்ந்த செய்திகள்

Next Story

18 வருடங்கள் கழித்து இணைந்து நடிக்கும் சூர்யா - ஜோதிகா

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Suriya  Jyothika to act together in movie after 18 years

சூர்யா - ஜோதிகா, கோலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளான இவர்கள், இதுவரை 'பூவெல்லாம் கேட்டுப்பார்', உயிரிலே கலந்தது, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், மாயாவி என 6 படங்களில் இணைந்து நடித்துள்ளனர். 

2006ஆம் ஆண்டு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு ஜோதிகா சில ஆண்டுகள் நடிப்பதிலிருந்து விலகியிருந்தார். பின்பு 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். இப்படம் 2015ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே  பாண்டிராஜ் இயக்கத்தில் 2015ல் வெளியான பசங்க 2 படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்தது. அப்போது 36 வயதினிலே படத்திற்காக கமிட்டாகியிருந்த நிலையில் நடிக்க முடியாமல் போனதாக கூறப்பட்டது. 

இந்த நிலையில் 18 வருடங்கள் கழித்து மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை சில்லுக்கருப்பட்டி இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சூர்யா - ஜோதிகாவே தங்களது தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயிண்மெண்ட் மூலம் இப்படத்தை தயாரிப்பதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் இருவரும் இணைந்து ஒர்க்கவுட் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.  

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படமும், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தையும் கைவசம் வைத்துள்ளார். ஜோதிகா,  இந்தியில் ஸ்ரீ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Next Story

மகனின் திறமையைக் கண்டு ரசித்த சூர்யா

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
suriya son dev got black belt in karate

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படங்களை தவிர்த்து சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படம் மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். 

இந்த நிலையில் சூர்யாவின் மகன் தேவ், கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியுள்ளார். சென்னை அஷோக் நகரில், கராத்தே பயிற்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு அகில இந்திய ஜென் கராத்தே அசோசியேசன் சார்பில் சான்றிதழ் மற்றும் பிளாக் பெல்ட் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சூர்யாவின் மகன் தேவ் பங்கேற்று பிளாக் பெல்ட் பெற்றுள்ள நிலையில் நிகழ்ச்சிக்கு சூர்யா மற்றும் அவரது தந்தை சிவகுமார் உள்ளிட்ட குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மொத்தம் 61 மாணவர்களுக்கு பிளால் பெல்ட் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

suriya son dev got black belt in karate

அப்போது தேவ் போட்டியில் கலந்து கொண்டு சண்டையிட்டதை சூர்யா ஆர்வமுடன் கண்டு ரசித்தார். மேலும் தனது போனில் வீடியோ எடுத்து மகிழ்ந்தார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. சூர்யாவின் மகன் தேவிற்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.