Skip to main content

ரசிகர்களின் கையெழுத்தை வானில் பறக்கவிட்ட சூர்யா!

Published on 11/11/2020 | Edited on 11/11/2020

 

sopo

 

சூர்யா நடித்து, தயாரித்துள்ள படம் 'சூரரைப் போற்று'. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள இப்படம் இன்று நள்ளிரவில் வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து, படத்தின் இறுதிக்கட்ட ப்ரோமோஷன் பணிகள் முழுவேகத்தில் நடந்து வருகின்றன.

 

சமீபத்தில் நடிகர் சூர்யா தனது ரசிகர்களிடம், சூரரைப் போற்று படத்தின் இணையதளத்தில் தங்களது கையெழுத்தை பகிருமாறும், ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது என்றும் கூறிருந்தார். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் தங்களது கையெழுத்தை, அந்த இணையதளத்தில் பகிர்ந்தனர். இந்தநிலையில், கூறியவாறே ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்திருக்கிறார் சூர்யா. 

 

சூரரைப் போற்று இணையதளத்தில் பகிரப்பட்ட கையெழுத்துகள், ஸ்பேஸ் பலூன் மூலம் வானின் உயரமான இடத்திற்குப் பறக்கவிடப்பட்டுள்ளது. ஜெர்மனி குழு ஒன்று இதனைச் செய்துள்ளது. ரசிகர்களின் கையெழுத்துகள் பறக்கவிடப்பட்டதை, சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு, ரசிகர்களுக்குச் சமர்ப்பணம் எனக் கூறியுள்ளார். மேலும், அந்த வீடியோவில் தோன்றும் சூர்யா, "எனது நல விரும்பிகளும், ரசிகர்களும் மிகப் பெரிய உயரத்தை எட்ட வேண்டும், பெரிய கனவுகளைக் காண வேண்டும், எப்போதும் நேர்மறையாக இருக்கவேண்டும் என விரும்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.   

 

 

சார்ந்த செய்திகள்