Skip to main content

நவம்பர் இறுதியில் ரஜினியின் அடுத்த பட ஷுட்டிங்?

Published on 07/10/2019 | Edited on 07/10/2019

பேட்ட படத்தை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் தர்பார். இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். பேட்ட படத்திற்கு பின் மீண்டும் அனிருத்தே இசையமைக்கிறார். பல படங்களில் தவிற்க முடியாதவராக மாறியிருக்கும் யோகி பாபு இந்த படத்திலும் ரஜினியுடன் நடிக்கிறார். லைகா நிறுவனம் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படத்தை உருவாக்கி வருகிறது. 
 

siva rajni

 

 

இதில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். 2020ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இப்படம் ரிலீஸ் செய்ய திட்டம்மிட்டிருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. இதனால் படபிடிப்பு தொடங்கப்பட்டதில் இருந்து பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. மும்பை மழையில் கூட ஷூட்டிங் நிற்காமல் நடைபெற்று வந்ததாக சொல்லப்படுகிறது. 

அண்மையில் நடிகர் ரஜினிக்கான ஷூட்டிங் முழுவதும் முடிந்துவிட்டதாக படக்குழு. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, தர்பார் படத்தின் படப்பிடிப்பு சிறப்பாக நடந்து முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
 

puppy


ஷூட்டிங் முடிந்து சென்னை திரும்பிய அடுத்த நாளே இயக்குனர் சிவா ரஜினிகாந்தை அவருடைய போயாஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்தார். அந்த சந்திப்பில் ரஜினிகாந்திற்கு சிவாவின் கதை மிகவும் பிடித்துவிட்டதால் நவம்பர் மாத இறுதியிலேயே ஷூட்டிங்கை தொடங்கிவிடலாம் என்று பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.  

 

 

சார்ந்த செய்திகள்