Skip to main content

''இதைச் செய்தாலே மனதுக்குள் எங்கிருந்தோ உற்சாகம் வந்து விடுகின்றது'' - இயக்குனர் செல்வராகவன் 

Published on 30/05/2020 | Edited on 30/05/2020

 

hrd

 

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு தொடர்ந்து ஊரடங்கை நீட்டித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில், நடிகர்கள் பலரும் வீட்டிலேயே இருந்துகொண்டு சமூகவலைத்தளங்களில் திரையுலகினருடன் உரையாடுவது, பொதுமக்களுக்கு வீடியோக்கள், நேர்காணல் மற்றும் சமூகவலைத்தள பதிவுகள் மூலம் கரோனா விழிப்புணர்வு என பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கின்றனர். 
 


இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் சில தினங்களுக்கு முன், ''நம்மில் பாதி பேர் வெறித்தனமாய் உழைக்காமலேயே கடவுளிடம் கூலி மட்டும் கேட்கிறோம்!'' எனப் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவுக்குப் பல்வேறு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில் இயக்குனர் செல்வராகவன் தற்போது மீண்டும் தான் செய்யும் வேலை குறித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... ''ஒரு நாள் வேலை செய்தாலே மனதுக்கு எங்கிருந்தோ பொங்கி எழும் உற்சாகம் வந்து விடுகின்றது. என் அனுபவம்'' எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்